![](pmdr0.gif)
ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு
1- குழைக்காதர் கலம்பகம்
Sri kUzaikkAtar pirapantat tiraTTu
1. kuzaikkAtar kalampakam
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India
for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
Aravind, Senthan Swaminathan, S. Karthikeyan, Mithra,
R. Navaneethakrishnan, R. Alagaraj, Rajasankar, K. Ravindran
Sridhar. V. Devarajan, Nalini Karthikeyan, Sriram Sundaresan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2011.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு
1. குழைக்காதர் கலம்பகம்
Source:
ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு
(நூல்கள், பதவுரை, விசேடவுரை முதலியவற்றுடன் கூடியது.)
(Sri Kuzhaikathar Prabandha Thirattu)
உரையாசிரியர் - பதிப்பாசிரியர்
திருமதி பத்மஜா அனந்தராமன் எம்.ஏ.
ஆங்கிலப் பேராசிரியர், மதிதா இந்துக் கல்லூரி,
பேட்டை, திருநெல்வேலி - 10
கிடைக்குமிடம்:
1, சிவபுரம் தெரு, திருநெல்வேலி ஜங்ஷன், 627001.
பொருளடக்கம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ வானமாமலை மடத்தின் ஸ்ரீ ராமாநுஜ ஜீயர் ஸ்ரீமுகம்
நமது மடத்தில் நித்யததீயாராதனக்ரந்த கால க்ஷேபாதிகளும் நமது மடம் அரங்க நகரப்பன் திருவாராதனமும் அவிச்சின்னமாக நடந்து வருகிறபடி தாங்கள் அனுப்பிய 'குழைக்காதர் பிரபந்தத் திரட்டு' என்ற நூலினைக் கடாக்ஷித்தோம். தமிழுக்கு உரையாணி போன்ற பல பெரியோர்கள் வாழ்ந்த தெந்திருப்பேரையில் எழுந்தருளியுள்ள மகரநெடுங்குழைக்காதரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற சிறு பிரபந்தங்கள் தோன்றியுள்ளன. அவைகளில் இதுவரை அச்சேறாத 'குழைக்காதர்கலம்பக'மும், 'குழைக்காதர் சோபன'மும் வெளிவந்துள்ளமை பற்றி மிக்க சந்தோஷமானதே. இந்நூலாசிரியர் பெயர் குறிக்கப் பெறவில்லை. ஆயினும் ஆசிரியர் ஆழ்வார்களின் அருளிச் செயலாழ்கடலில் திளைத்தவர் என்பது படிப்போருக்குப் புலனாகும்.
நம் மடம் ஆஸ்தான வித்வான் அபிநவ காளமேகம் அனந்த கிருஷ்ணய்யங்கார் மரபில் தோன்றி தமக்குக் கிடைத்த ஞானத்தை பகவத் விஷயத்தில் ஈடுபடுத்தி இந்நூலை வெளியிட்ட பதிப்பாசிரியர் திருமதி பத்மஜா அனந்தராமன் அம்மையார் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து பகவத் கைங்கர்யங்களைச் செய்து எல்லாவகையான நன்மைகளைப் பெற நம் மடத்துப் பெருமாளான அரங்கநாதரப்பனையும், ஸ்ரீவரமங்களா சமேத ஸ்ரீ தெய்வனாயகப் பெருமாளையும் பிரார்தித்து மங்களாசாஸனம் செய்கிறோம்.
வானமாமலை
(10-4-1992) ஸ்ரீராமாநுஜர்
பிரஜோத்பத்தி (கையொப்பம்)
பங்குனி - 28
-----------------------------------------------------------
PREFACE
'Then felt I like some watcher of the sky
When a new planet swims into his ken'
John Keats thus described his joy on first looking into Chpman's Homer. I had a similar feeling when by chance I came across a few wornout scripts in Tamil language in my village house. They were brittle yellowise brown paper - manuscripts partly moth-eaten and partly destroyed by silver-fish (LAPISMA), a tiny insect that drills holes in papers. At once I rescued and resurrected them from oblivion and planned to give them when to the Tamil speaking world. The timely help of Thirumalai -Thiruppathi Devasthanam's financial help was in fact a blessing in guise. It encouraged and induced me to publish a good and devotional hymn book to sing in praise the glory of Sri Mahara Nedumkuzaikathar of the celebrated Vishnavite Pilgrim Center Thenthiruperai in Tamil Nadu. The outcome is this Onthology 'Kuzhaikather Prabandha Thirattu'. May the Lord of the Seven Hills guide and guard me in this divine attempt.
This present verse collection is a rare and rich compilation of devotional hymns in the form of minor Prabandhams. Some of them like 'Kuzaikathar Kalampagam' ' Sobanam', 'Kirthanas', 'Santhada pathu' and 'Thirupani Malai' are not yet published. Other works like the decade of 'Nammalvar', 'Thenthiruperai Pasuram' is added as it forms Part and Parcel of the life of the inhabitants of Thenthiruperai. A number of lyrics are compiled lest they should be forgotten. Both 'Kuzhaikathar Pillai Tamil', and 'Kuzhaikathar Kalambagam' are directly copied from old manuscripts with stress and strain where the author's names were not found. Though 'Kuzhaikathar Pillai - Tamil' has been printed once it is not popular in the home town. But here it is added. Each and every prabandham is preceded by a foreword and succeeded by a glossary. The foreword in Tamil introduces the literary work. There is a general introduction in regional language about this anthology. A brief account of the tiny village of Thenthiruparai and the deity there will be a valuable guide to the readers.
An introduction from Sri. Pattar-Piran Ramanuja Swami, the present Jeer of Vanamamalai Mutt adorns this collection at the outset. It is being followed by an introductory message from Thiru T.V. Makara Bhushanam, the retired assistant collector of customs; well-versed in Tamil,English and Sanskrit. His love for Vaishnavism is enffable.
The aim in compiling this authology is to put into print the varied literary blossoms with religious aroma and to weave them into a garland of Poesy. This humble literary attempt has been dedicated to the memory of my beloved paternal uncle, Sri.P. Sri Acharya, the veteran Tamil Scholar. A learned man like him needs no introduction to the students of Tamil literature. His was a life devoted to the studies and research in Kamba Ramayanam and Vaishnavite Literature. His magnum opus Sri. RAMANUJA' won him the Sahitya Academy Award. He was the author of the celbrated serial Chithira Ramayana (awaiting publication). His 'Chithira Thiruppavai' has already been published by the T.T. Devasthanam. He has hundred of books and essays written in Tamil to his credit. Hence it is my bounden duty to dedicate this anthology to him from whom I inherited the love and taste for my mother tongue.
There are 96 kinds of minor literary poetic compositions according to Tamil tradition. More and more are added to them. The folk-song motif is the striking theme in them. One of the most popular forms of these prabandhams is 'Kalampagam'. It means a godevil of flowers of many hues. Learned people as the custodiens of literary traditions have no sympathy for folk-songs. But sometimes the folk-motif enters into the main literary stream. It also rejuvenates and enriches it into a minor literature or Prabandham. Poetry and folk songs are fused together and set in harmony in Kalambagam. Generally Kalampagam is a minor prabandham consisting of 100 Poems composed with the 18 parts of Kalampagam. Slowly this number of metrical devices increased from 18. But the style remains simple and appealing. Even today it retains its youthful charm and vigour. As per tradition Kalampagams are written to sing in praise of the deity of a temple such as Anzhahar Kalampagam or the place where the temple is situated such as 'Thiruvengada Kalampagam'. Sometimes they are sung in honour of a sing or a spiritual guru. But none of these rises to the height of 'Nandi-Kalampagam'.
This tiny village of Thenthiruperai has the unique honour of having two Kalampagams to its credit. One is 'Thiruperai Kalampagam' already published by its author, Sri. Anantha Krisha Iyengar and the other is 'Kuzhaikadhar Kalampagam' which is now being published for the first time. It appears to be an anonymous work. But its poetic merit speaks volumes about the unknown and unheard author. In brief it is a beautiful literary poetic price 'Kuzhaikadar Kalampagam' is a wonderful collection of 100 poems. It commences with 'Kappidal' or 'the song of Protection'. The Kappu Poem is followed by a Poem of worship to Nammalvar addressing his spiritual guru, Nammalvar as Parankusan the author makes an appeal to him. He wants his religion's leader to control other religions first as the elephant is controlled by the spear known as 'Ankusam'. The poet requests the reader to put up with him for what he lisped in verse may have flaw. Yet he has tested his poetic skill by making many to listen to his composition. The humility of the poet is obvious. The varied metrical devices and patterns reveal his poetic genius. His simple style flows fluently like the meanderings of the perennial river Thamirabarani. It is a pity that many a scholar of the past missed this noble piece of literature with its divine message to have faith in God and translate this faith however limited with constructive actions.
'Kuzhaikadhar Pillai Tamil' occupies the second place in this edition. It has been taken down from an old worn out manuscript. This rich piece of literature is little known to villagers. It is said to have been published once from Dr. U.V.S.'s manuscript library. It has been added here to make it popular among the devotees of Kuzhaikadhar. 'Pillai - Tamil' is another popular type of literature. It is believed to be the first and foremost of the varied types of minor literature. Its seed is embedded in Tolkappiyam. But the real father of this kind of poetry is the great Vaishnava saint Perialvar. The poet describes Krishna's nativity making Thirukkottiyur in Tamil Nadu as the birth place of Krishna.
Generally 'Pillai Tamil' is a graphic account of the childhood games and sports of the poetic hero in verse. It is in praise of the childhood in all its varying stages. The rapid growth and development of the child with its pranks and mischiefs are well brought-out as beautiful pen-pictures. In fact 'Pillai Tamil' is a lovely piece of poetic art making the reader become one with the child. The innocence, the gaiety and the sportive spirit of the infant enchants one and all. 'Pillai Tamil' starts singing of the child from its third month to twenty-first month. The hero of the poem is either God or King. Imagining the hero as a child, the poet sings of the ten stages of its growth with ten songs for a stage sung on every alternate month from the third to the twenty-first month. 'Kuzhaikadhar Pillai - Tamil' is no exception to this. It sings in praise of Lord Kuzhaikadhar in His infancy.
The first stage of Kuzhaikadhar 'Pillai Tamil' offers prayer for the welfare of the child in 14 poems seeking the blessings of Saraswathi, the Goddess of Learning, Sri. Ramanuja, the spiritual guru of Vaishnavites and all the twelve Alvars. This section is known as 'Kappu' or 'the song of Protection'. The rest of the poem shows the beautiful and captivating gestures of the various games of the child. The to and from wavy movements of the child are quite picturesque. Lulllaby follows. The mother lulls the child to sleep by her melodious songs. The next few stages really enchant us. The Song of clapping hands and the song of kisses thrill us. In the welcome song the mother cheers up the tiny toddler to catch-hold of her to move forward. Next is the song of the Moon. Here we find the mother making a plea to the moon to come down to appease the crying child. All these songs are common to both the sexes. If it is a female child, the last stages are the songs of swing, bath and ammanai. As the child is a male one here, these are in addition the songs of destroying playfully the sand castles built by the female children, the song of beating the kettle drum and finally the song of pulling the toy- cart playfully. the spontaneous outpourings of the mother about her child's naughty games andmis- chievous tricks, capture our heart, mind and soul. The poet takes us from the world of the child to that of a divine one. The language describing these divine activities rises naturally to a grand and majestic tenor. In such a mood the poetry becomes genuine and sincere elevating us to a nobler plane. The words of Reed seem to endorse this view for he says:
The experience of Poetry is in the art of creation; the experience is the poetry and is wholly a mental units. In the unconscious mind it may strike root: from that hidden source it may send up a shoot, strike with the conscious brain unasked'.
Kuzhaikadhar Pillai Tamil is followed by 'Kuzhai kadhar Sobanam'. It is a piece of folk-lore taken down directly from the oral literature of the women-folk of Thenthiruperai. It is like a ballad poem with the two striking themes of the love and courage of Kuzhaikadhar. Then comes the collection of the simple but effective 13 poems entitled 'Santhana Pathu'. It is quite popular among the inhabitants of this village as an elixir for the childless couples. A sincere and pious recital of this piece has been rewarding to issueless couples as born in testimony to the people of Thenthiruperai. This oral piece in verse is being published for the first time. 'Santhana* Pathu' is followed by a variety of songs like 'Kirthanas'. These lyrics are short and sweet and can be set to music.
A number of miscellaneous rural songs are also compiled here. The celebrated 11 pasurams of Nammalvar known as 'Thenthiruperai Pathigam' precede this collection of minor poems. Most of them are part and parcel of the daily rituals of worship in Kuzhaikadhar temple and also in the sweet homes of these villagers. A fairly good collection of various metrical pieces on the verge of being forgotten after their first publication are collected and compiled in this anthology. Some of them are prison-poems. Once many of the people from Thenthiruperai were arrested and imprisoned in Tirunelveli Town which part is even today remembered as Prison Street. (KAVAL PURAI THERU). The reason was non-payment of taxes due to the failure of monsoon. Their chief grief was not for leaving behind their kith and kin but because of their inability to worship their Lord Kuzhaikadhar every day and to proceed to the neighbouring village Alwar Thirunagari to offer their obeisance to Nammalvar Die-hards. As they were deprived of this divine opportunity, their sorrow and sadness burst out. Their outpourings in verse are reprinted here. The most prominent of these compositions is 'Kuzhaikadhar Pamalai', a poetic garland of 103 Poems by Narayana Dishadhar. It was published byDr. U. V. Swaminatha Iyer as 'Poem of the Prison' (Chirai Thantha Chenkuyil) with a valuable introduction. Already it has been published by me separately as a hymn-book for daily worship. Some of the remarkable single pieces in metre added here were written by my grand - father Sri. Anantha Krishna Iyengar, a native of this village. An anonymous interrogative poem in 4 lines decorates the front wall of the first Mantapam of Kuzaikadhar temple. The poet wonders if there is anything equal to the eternal, never fading red-lotus face of Lord Kuzhaikadhar addressed as Vadatha Chenthamarai. The poet poses the problem to the Sun - god for He has visited all the planets of the universe. This enigmatic poem is also noted down in this edition. A mural poem presented in the form of the temple-car adorning the front part of the temple is also recorded here in its pictorial form 'Radha Banthanam'. The design or the verse is known as 'Chakra Banda (and anybody deciphred it used to get a reward in those days of yore).
The contribution was made by my paternal grand-father, Kavi Pitchu Iyengar. The present Anthology is concluded with a song of blessing called Mangalam.
In the days of my childhood my house used to rumble with the pasurams of Alars. The lively literary debates and discussions of my paternal circle with its pals left a deep impact on me. The musical recital of the gymns of 'Nalayira Divya Prabandam' in the Vaishnavite temples and in our sweet homes strengthened my mind, heart and soul. It often haunted me like a passion and kindled my religious fervour. Already I had been born and brought upin a literary atmosphere surcharged with the singing of these poetic compositions. No doubt God is present in several forms with different names. In the name of Swami Makara Nedumkuzhaikadhar I got the inspiration of undertaking this divine work and in the form of the Lord of Thiruvenkadam I received the financial assistance to complete it. In honour of Lord Kuzhaikadhar the minor works and sundry poems on Him are collected and compiled as a living monument to posterity that will not willingly let it die.
May the Lord guide and guard us all.
A. Padmaja Anantharaman.
Printed by: Sri. Ratnam Press, Tin. - 6
-----------------------------------------------------------
THENTHIRUPERAI SRI SWAMI MAKARA NEDUN KUZHAIKATHAR
Thenthiruperai, situated on the trunk road connecting Tirunelveli and Tiruchendur in Tamil Nadu is a small village lying on the banks of river Tambirabarani (also known as porunai). The village has traditionally nurtured Tamil literature with religious fervour.
Thenthiruperai is one of the 108 vaishnavite pilgrim centres and also forms part of the Nava Thirupathy of South Tamil Nadu. The name ' Thenthiruperai' is derived from 'Per Aiel' which in Tamil connotes the lofty and majestic castles and forts.
Nammalwar, the mystic saint has immortalised the village with his 'MANGALA SASANAM' (10 Tamil verses in "Thiruvaimozhi", one of the four parts of "Nalayra Divya Prabantham"). These poems describe Nammalwar's passionate love for the Lord of Thenthiruperai in the Nayaki - Nayaka bhava, endeared as Parankusa Nayaki.
Makara Nedunkuzhaikathar is the presiding deity. The Lord's name might have been a Tamil rendering of the original Sanskrit version "Makarayutha karna pasan" or simply Makara Bhushanam. The legend goes that on a full moon day in the month of Panguni under the star 'UTHIRAM', Neela Devi (Mother Earth) who was doing penance on the banks of the river found a pair of glittering fish-like ear rings (Makara). Devi felt that they would well-adorn the long and big ears of her Lord, her lover, Mukil Vannan, the cloud-hued. The Lord appeared before her and made her happy by wearing them. Hence the name Makara Nedunkuzhaikathar. The place where the ear-studs were found is known as "Kudupunalthurai". It is believed that the long and beautiful ears of the Lord of Thenthiruperai relish the vedic recitation, festive sound, and the yell of the merry-making children. This is the reason why the "Garuda Sannathi" is not situated in front of the Lord but situated at some distance which is a peculiar feature not seen in any other Vaishnavite temple.
The present resident community owe their origin to a holy ancestry which specialised a branch of Sama vedha, known as Jaimini Sama vedha. The swara recitation is unique to Thalavakara Jaimini Sama vedha. Thalavaikara was the chief disciple of Rishi Jaimini. Kenoupanishad is also known as Thalavakara upanishad. Presently there is only one patasala at Thogur in Tanjore District offering Jaimini saka of samaveda.
Madurakaviyar the celebrated hagiographer of Nammalvar is believed to be the ancestor of the residents. The village had been made holy and divine by the visit to Sri Ramanuja. Thenthiruperai is also the birth place of many reputed poets, scholars, and freedom-fighters. It possesses a number of literary compositions like "Kuzhaikathar Pillai Tamil", "KUZHAIKATHAR KALAMBAKAM" and "SANTHANA PATHU". The pamalai, garland of 100 verses on Kuzhaikathar written in sweet and simple Tamil is being recited by all everyday.
May Lord MAKARA NEDUN KUZHAIKATHAR Bless All.
-----------------------------------------------------------
அணிந்துரை
"ஆடி ஆடி அகங்கரைந்து இசை
பாடிபாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று
பாடி வாடும் இவ்வாணுதலே".
என்று ஆரவாரத்துடன் பக்தி வெள்ளத்தில் பூரித்துக் கொண்டிருந்த நம்மாழ்வாருக்கு தன்னால் முடியாததொரு ஒன்றுமில்லை என்ற எண்ணமும் ஊர்ஜிதமாகிவிட்டது - "என் முன்னைக் கோளரியே! முடியாதது என் எனக்கே?" அப்படியிருந்தும், எம்பெருமானைக் காண்பதற்குத் தகுதியான கர்மயோகம் முதலான உபாயங்கள் ஒன்றுமில்லாத தனக்கு "தடவிகின்றேன் எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே?" என்ற ஐயமும் உண்டாகிறது. திருமாலிடம் கொண்ட காதல் பித்து - பிரமானந்த பித்து - அவரை ஆட்கொண்டது. பராங்குச நாயகியாகி தன் ஆறாக்காதலை அப்பட்டமாகத் தன் தோழிகளிடமும், அன்னைகளிடமும் சொல்லி, தெளிவு படுத்தி மனச் சோர்வும் அடைகிறாள்:
"நாணியினியோர் கருமமில்லை
நாலயலாருமறிந் தொழிந்தார்."
* * * *
உற்றார்கள் தன் காதல் வேகத்தைத் தணிக்கச் சொன்ன வழிகளையும் ஒத்துக்கொள்ளவில்லை, செவி சாய்த்துக் கேட்கவுமில்லை. ஒரே பிடிவாதமாகத் தன் காதல் சுரம் நிவர்த்தியாக வேண்டுமென்றால், தன்னைகாக்க வேண்டில் "ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்", என்று கோதையைப்போல் அங்கலாய்க்கிறாள்.
காதலினால் பரமனை அடையலாமென்ற சித்தாந்தம் நமது வைணவ, சமய பூர்வாச்சாரியார்களின் பாக்கனிலிருந்து தெளிவாகிறது. நாயகி நாயக பாவத்தினால் ஜீவாத்மா பரமாத்மாவைத் தேடித் திரிந்து ஒன்றுசேர்கிறது.
பராங்குச நாயகியும் இதற்கு விலக்கில்லை. தேடித் தேடி அலைந்து தன் மனம் குருகூருக்குக் கிழக்கே மூன்று கல்தொலைவில் தாமிரவருணி ஆற்றங்கரையில் இருக்கும் தெந்திருப்பேரை நகரில் வீற்றிருந்த திருக்கோலத்தில் இருக்கும் நிகரில்முகில்வண்ணணான, மகரக்குழைக்காதனிடம் சென்றுவிட்டது என்றும், இனி ஒரு கணம்கூட தாமதிக்காமல் அவனிடம் செல்லவேண்டியதுதான் என்றும் உரைக்கிறாள்.
இப்படிப் புகழ் பெற்ற மகர நெடுங்குழைக்காதனைப் பற்றிய பாட்டுகள்தான் இந்த பிரபந்தத்திரட்டாகிய களஞ்சியத்தில், திருமதி பத்மஜா அனந்தராமன் அவர்களால் தொகுத்துப் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களுக்கு அமுதமாக அளிக்கப்பட்டிருக்கிறது. வைணவ சமய கருத்துக்கள், பொதுக் கருத்துக்கள் இவைகளின் உயிரோட்டத்தை இதில் காணலாம். எம்பெருமானை வாயாரத் துதித்து, தலையார வணங்கி பாக்களை ஓதுவதே நமக்குத் தவம் என்பது இப்பிரபந்தத் திரட்டிலிருந்து தெளிவாகிறது. இத்தகைய பக்தியே நாட்டு மக்களுக்குத் தவம் என்பதும் புலப்படுகிறது. பூதத்தாழ்வாரின்,
"ஏந்திப் பணிந்து அவன் பேர்
ஈரைஞ்நூறு எப்பொழுதும்
சாற்றியுரைத்தல் தவம்."
- என்பதை நினைவூட்டுகிறது. கீதா சாரியனின் 'ஸததம் கீர்த்தயந்தோ மாம்', என்பதும் பொருந்தும். புலன்களை அடக்குவதற்று வழி பக்தி ஒன்றேதான். வேறு வழியொன்றும் தெரியவில்லை; 'நான்யப் பந்தா வித்யதே' என்கிறது புருஷஸுக்தம். உண்மையாக உள்ளம் உருகி உவப்புடன் அந்த மகர நெடுங்குழைக்காதனை வழிபடும்போது உள்ளம் தூய்மை பெற்று பூரிக்கிறது.
திருமதி பத்மஜா அனந்தராமன் அம்மையார் ஓர் ஆங்கிலப் பேராசிரியை. இருந்தும் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு அதிகம். தன் கல்லூரிப் பணிகளையும், குடும்பத் தலைவி என்ற பொறுப்பையும் செவ்வனே செய்து கொண்டு, தன் ஆற்றலின் வேகத்தில் தமிழையும், அதன் நடை, ரசனையும் அனுபவித்து,"தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்ற நோக்கத்துடன் இப்பிரபந்தத் திரட்டை அளித்திருக்கிறார். ஏற்கனவே அவர் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நற்பணிக்கு திருவேங்கட முடையானே முன்வந்து பணமுதலீடும் செய்து, ஊக்குவித்து 'முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கேற்ப அம்மையாரின் தெய்வீகத் தொண்டு ஓர் எடுத்துக்காட்டாகும். இப்படி ஓர் பிரபந்தக் களஞ்சியம் நமக்குக் கிட்டாவிடில், குழைக்காதனைப் பற்றியும், சிற்றூராகிய தென்திருப்பேரையைப் பற்றியும், அங்கு வாழும் மக்கள் பக்தி நெறியைப் பற்றியும் நமக்கு எங்கு தெரியப்போகிறது? அன்னாருடைய பணிக்கு என் ஆசியும் அன்பும். பெருமாளை வழிபடுவது அவர், இவர்களை காப்பதும் அவரவர் கடமையாகி விடுகிறது. எப்படி எல்லாம் பேரை மக்கள் குழைக்காதனைக் கொண்டாடி இருக்கிறார்கள்! - பாமாலை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் என்றெல்லாம். தங்கள் ஊர் தெய்வம் அல்லவா? மற்றும் குடும்பத்தலைவனும் கூட. அவனை விட்டுப் பிரிய மனமில்லாமல் வேதனைப் படுகிறார்கள்.
சிறையிலிருந்து மீட்டிய செல்வனல்லவா அவன்! தான் செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவித்து வரும் தீட்சதர்,"என் சிறை நீக்கிவித்தாயிலையே" என்று கண்ணீர் விட்டுக் கதறி அழும்பொழுது நம்மையும் அறியாமல் நம் கண்களில் நீர் மல்கின்றன. என்ன உருக்கம்! இனி பாசுரத்தைப் பார்ப்போம்:-
"பொன்சிறை நீக்கிவித்தே பறக்கின்ற புள் அரசே
என் சிறை நீக்குவித்தாயிலையே இகல் ஆடரவ
வன்சிறை நீக்கினை வானவர்க்காக மகிழ் வினதை
தன் சிறை நீக்கினை ஆரா அமுதமும் தந்தனையே."
(கு.பா.)
அவனைத் தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே கருதி அவனைச் சீராட்டித் தாலாட்டி, சப்பாணி கொட்டி இரசிக்கிறார்கள். குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிலாவைக் கூப்பிடுகிறார்கள். அவன் விளையாட்டுத் தேரை இழுத்துவரும்பொழுது அவன் நடையைக்கண்டு உள்ளம் பூரிக்கிறார்கள். இவையெல்லாம் நமக்கு பெரியாழ்வாரின் பாசுரங்களை நினைவூட்டுகின்றன.
***
திரு வானமாமலை ஜீயரின் ஆசியைப் பெற்ற இந்த அம்மையாருக்கு என் வாழ்த்துக்கள். ஆரா அமுதமாக இனிக்கும் இவ்வரியப் பிரபந்தத் திரட்டுக்கு அணிந்துரை வழங்கும் வாய்ப்பைக் கிடைத்தற்கரிய பேறாகக் கருதுகிறேன். இதுவும் குழைக்காதனின் செயலாகவே கொள்கிறேன்.
"ஆழியங்கையனை ஏத்தா வல்லா ரவர்
அடிமைத்திறத் தாழியரே"
*என்று நாமும் பாடிப் பயனடைவோமே!
எழுதியவர்:
தூத்துக்குடி T.V. மகரபூஷணம்
16-4-1992. (ஓய்வு பெற்ற) உதவி சுங்க இலாகா கலெக்டர்
-----------------------------------------------------------
என்னுரை
--------
"பாமாலை போன்ற பக்திப் பனுவல்கள் இல்லாவிட்டால் தமிழகம் சம்பந்தப்பட்ட வரையில் சமயம் ஊமைதான்; தத்துவம் நொண்டியாகிவிடும், அறிவு குருடாகி, அருள் இருளாகும்; கோயில்களில் தெய்வம் கல்லாகவும், செம்பா கவும் நின்று கொண்டிருக்கும்" என்று கம்ப மேதை திரு பி.ஸ்ரீ. ஆசார்யா பன்முறை குறிப்பிடக் கேட்டதுண்டு. ஆனால் அக்கூற்றின் ஆழ்ந்த பொருளை அண்மையில் தென்திருப்பேரை ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதரின் பாடல்களைக் கற்றுணர்ந்த பின்னரே அறிந்தேன்.
அறியா இளமையிலே, எனது ஊராகிய தென்திருப்பேரையில் வயது வேறுபாடின்றி இருபாலரும் குழைக்காதரின் பாடல்களை இனிமையாகப் பாடக் கேட்டதுண்டு; பலர் பாராயணம் செய்யப் பார்த்ததுண்டு. கற்றலினும் கேட்டல் நன்று என்ற அரிய உண்மைக்கேற்ப பழக்கத்தின் காரணமாக எனது மனத்திலும் பல பாசுரங்கள் பசுமரத்தாணி போல் பதிந்தன. வீட்டில் இடையறாது குழைக்காதர் பெருமையினைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்த தால் தினம் தவறாமல் அவர்மீது எழுதப்பெற்ற பாசுரங்களைப் பாராயணம் செய்யத் தொடங்கினேன். நாளடைவில் எனக்குக் குழைக்காதரிடம் நெருங்கிய ஈடுபாடு ஏற்பட்டது. அவரிடம் கொண்ட பிணைப்பும், இணைப்பும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வந்தன. நாளடைவில் அவரே 'எனது உள்ளங்கவர் கள்வன்' எனச் சிறிது சிறிதாக உணர்ந்தேன். பாராயணம் பல புரிந்து தழும்பேறிய என் நா, கற்றறிந்த பிறகு அவர் மீது பாடப்பெற்ற பாசுரங்களைச் சுவைக்கத் தொடங்கியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உணர்வின் விளைவால் குழைக்காதர் புகழினைப் பாரத மெங்கும் பரப்ப வேண்டுமென நினைத்தேன். சம்ப்ரோக்ஷணம் காணவிருக்கும் இப்பிரானும் அடியேனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அளித்ததாகக் கருதினேன்.
இத்திருப்பணிக்காக எல்லோரையும் போன்று பொற்காசுகள் மாத்திரம் கொடுத்தால் போதாது, காலவெள்ளம் அடித்துச் செல்ல முடியாத அழியாச் செல்வத்தினைக் கொடுத்தல் நலம் என எனது உள்ளுணர்வு உணர்த்தியது. தமிழ்க் குடும்பத்தினைச் சேர்ந்த நான் இலக்கிய முத்திரை பொறித்து இச்செல்வத்தினைக் கொடுக்க விழைந்தேன். எனவே நான் அசைபோட்டுக் கொண்டிருந்த, ஆழங்கால் பட்ட பாடல்களைப் பிறரும் அறிந்து கொள்ளும்படி உரைவளத்துடன் கொடுக்கும் பணியில் ஈடு பட்டேன்.
'நன்னெஞ்சே! நம்பெருமான்
நமக்கருள்தான் செய்வானே!'
என்ற நம்மாழ்வார் வாக்கினில் முழு நம்பிக்கை கொண்டு குழைக்காதர் பற்றிய பிரபந்தங்களைத் திரட்டினேன்.
இராமபாணப் பூச்சிக்கு இரையாகிக்கொண்டிருந்த 'குழைக்காதர் பிள்ளைத்தமிழ்' 'குழைக்காதர் கலம்பகம்' போன்றவற்றிற்கான கைப்பிரதிகளைத் தற்செயலாக வீட்டில் கண்டெடுக்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. எனது தாத்தாவான அபிநவ காளமேகம் திரு. அனந்த கிருஷ்ணய்யங்கார் 1946-ம் ஆண்டு தாம் பாடிய 'திருப்பேரைக் கலம்பக'த்தினை வெளியிட்டார். இதுவரை அச்சிடப்படாத ஆசிரியர் பெயர் தெரியாத குழைக்காதர் கலம்பகத்தின் கைப்பிரதியினை கற்று மகிழ்ந்ததுடன் பிறரும் படித்தறிய வேண்டுமென்ற வேணவா என்னை உந்தியது. குழைக்காதர் பற்றிய பாடல்கள் அழிந்து விடாமலிருக்க அவற்றைப் பதிப்பிக்கும் பணியில் முனைந்தேன். மேலும் அங்கிருக்கும் மகளிரின் வாய்மொழி இலக்கியமாக விளங்கிய குழைக்காதர் சோபனம், ஊஞ்சல் பாட்டுக்கள், கீர்த்தனைகளை நேரில் சென்று திரட்டினேன். ஏற்கனவே ஒருதடவை அச்சிட்டு மக்களால் மறக்கப்பட்டிருந்த வேறு சில தனிப்பாடல்களையும் இத்துடன் இணைத்தேன். தற்செயலாக 'குழைக்காதர் பிள்ளைத் தமிழி'ன் கைப்பிரதியும் கிடைத்தது. இதிலும் ஆசிரியர் பெயர்பற்றிய விவரங்கள்காணப்படவில்லை. இப்பகுதியினருக்கே இவ்விரு நூல்களும் புதுமை விருந்தாக இருந்தன. ஆனால் உ.வே.சா. நூலகத்திலுள்ள ஏட்டுச்சுவடியில் இப்பிள்ளைத் தமிழின் ஆசிரியர் திருமேனி கவிராயர் எனக் குறிப்பிடப் பெற்றிருந்தது. கோயில் மண்டபக் குறட்டில் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படாத, மிக அழகான, சிந்தனையைத் தூண்டும் 'கண்டாயோ' எனத் துவங்கும் பாடல் ஒன்று காணப்படுகிறது. இது தலநாயகனின் வாடாமரையான திருமுகப் பொலிவினைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இத்துடன் மண்டபச் சுவரினை அலங்கரிக்கும் 'இரத பந்தனம்' என்ற சித்திரக் கவியும் இதில் இணைக்கப் பட்டுள்ளது. 'குழைக்காதர் மங்களத்துடன்' இனிது முடித்தேன். இத்தருணத்தில் எதிர்பாராத விதமாக திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தினரின் நிதி உதவி கிடைக்கப்பெற்றேன். எனது உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற என் குலநாதனான திருவேங்கட நாதனே என் திருப்பணிக் காரியத்திற்கு அருளாசி வழங்கியது போன்று பக்திப் பரவசம் அடைந்தேன். அடியேன் என்றென்றும் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்திற்குக் கடமைப் பட்டிருக்கிறேன்.
குழைக்காதர் மீது பாடப்பெற்ற மலர்ச்சரங்களைக் கட்டிக் காத்து வரப்போகும் இளைய தலைமுறையினருக்குத்தருவது கடமையென எண்ணினேன். ஏனென்றால் இத்தகைய திருப்பணிகள் மூலம்தான் சமயம் ஊமையாகி விடாமலும், தத்துவம் நொண்டியாகிவிடாமலும், அருள் இருளாகி, தெய்வங்கள் வெறும் சிலையாக நிற்காமலும் தடுக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து. இதனால் இப்பணியினைத் தொடர்ந்தேன். மேலும், அடியேன் பூமாலை தொடுக்கவில்லை. பாமாலை புனைய வில்லை. பொன் மாலை அளிக்கவுமில்லை. நம் பெரியோர் வழித்தடம் சென்று அவர்கள் விட்டுச் சென்ற பக்தி மணம் கமழும் இலக்கிய மலர்களைத் தொகுத்து சம்ப்ரோஷனம் காணவிருக்கும் மகரக்குழையனுக்கு இவ்வாடாத மலர் மாலையினைச் சூட்டி மகிழ விழைந்தேன், துணிந்தேன், செயல்பட்டேன். இப்பிரானின் அருளால் முயற்சி திருவினையாகியது. அதன் விளைவே இவ்விழாவின் இனிய வெளியீடாக மலரவிருக்கும் இந்த 'குழைக்காதர் பிரபந்தத் திரட்டு' என்ற நூலாகும்.
இவ்வாடா மலர் மாலையில் இடம்பெற்றுள்ள 'குழைக்காதர் கலம்பகம்' 'குழைக்காதர் பிள்ளைத் தமிழ்' 'சந்தானப்பத்து' , தென்திருப்பேரைப் பாசுரம், தனிப் பாடல்கள், 'சோபனம்' போன்ற ஒவ்வொரு சிறு பிரபந்தத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு நூல்முகம் எழுதப்பட்டுள்ளது. பிரபந்தத்தின் இறுதியில் இந்நூலிலிருக்கும் பாடல்களுக்கான அரும்பதச் சொற்கள் அடங்கிய குறிப்புரை ஒன்று விளக்கமாகவும், விரிவாகவும் தரப்பட்டுள்ளது. இந்நூலின் முகப்பில் காணப்படும் முன்னுரை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தென்திருப்பேரை என்னும் பதியின் சிறப்பினையும், குழைக்காதரின் பெருமையினையும் கூறுவதாக அமைந்துள்ளது.
ஓராண் வழிக் கிராமமாகத் தற்போது 29வது பட்டத்தை அலங்கரிக்கும் நம்வர்த்தமான ஸ்வாமியான பட்டர்பிரான் இராமனுஜ ஜீயர் ஸ்வாமிகள் துவங்கி வைத்த தென்திருப்பேரையில் எழுந்தருளியிருக்கும் மகர நெடுங்குழைக் காதரின் சம்ப்ரோஷணத்திற்கு இவ்விழாவின் இனிய வெளியீடாக வரும் நூலாகிய 'குழைக்காதர் பிரபந்தத் திரட்டு' ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளின் மங்களாஸாஸனத்துடன் பொலிவு பெற்று விளங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் ஊறித் திளைத்த எனது பெரிய தந்தையாரான கம்பச் சக்கரவர்த்தி திரு. பி. ஸ்ரீ ஆச்சார்யா எனக்குத் தமிழ்ப் பற்றினை ஊட்டினார். எனவே அன்னாருக்கு இந்நூலினை அன்பு காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன். எனது தந்தையார் நெல்லை வக்கீல் அ. நா. மகரபூஷணம் அடிக்கடி கூறியபடி ஆங்கிலத் துறையைச் சேர்ந்த அடியேன் ஆங்கிலத்தில் ஒரு சிறிய அறிமுகம் எழுதுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணி அதனை இந்நூலில் இணைத்திருக்கிறேன்.இந்நூலினை நல்லமுறையில் அச்சிட்டுத் தந்த ஸ்ரீ ரத்னம் அச்சகத்தினருக்கு நன்றி. இந்நூல் வெளியிடுவதற்கு நிதி உதவி புரிந்த திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தினருக்கும் அடியேனுடைய அன்பு கலந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலிற்கு அணிந்துரை வழங்கிய பன்மொழி இலக்கியச் செல்வர் திரு டி. வி. மகாபூஷணம் அவர்கட்கும், ஆலோசனை பல கூறி உடனிருந்து உதவிய பண்டிதர் திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கட்கும், எனக்கு உறுதுணையாயிருந்து உற்சாகப்படுத்தி இலக்கியப் பணீயாற்றுவதற்கான சூழ்நிலையினை அமைத்துக் கொடுத்த என் வாழ்க்கைத் துணைவர் திரு. நா. அனந்தராமன் அவர்கட்கும் எனது நன்றி உரித்தாகுக.
இக்கலியுகத்தில் பிறவிப் பெருங்கடலில் அல்லல்பட்டு அவதியுறுங்காலையில் மயர்வற மதிநலம் அருளிய தென் திருப்பேரை ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திரட்டிலுள்ள பாடல்களை மானிடத்தோர் பொருள் புரிந்து கற்றுணர்ந்து இப்புவியில் நீங்காத செல்வம் பெற்று நிறை வாழ்வு வாழத் திருவருள் புரிவாராக. இந்நூல் 'வணக்குடை தவநெறி வழி' நின்று புறநெறிகளைக் கட்டுவதற்கு வழித்துணையாக இருக்குமானால் அதுவே அடியேன் பெற்ற நற்பேறாகும். இந்நூலைக் கற்பதின் வாயிலாக நம்மையறியாமலே நாம் இப்பெருமானின் அழகிலும், இப்பதியின் பெருமையிலும், வளமையிலும் ஈடுபட்டு நம்மை மறக்கிறோம். நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வழியறியாது 'கார் வாழி பேரைகுழைக்காதர் வாழியினிக்காசினிக்கே' என வாயார வாழ்த்துகிறோம்.
குற்றம் நீக்கி குணம் பெருக்கி என்கிற முறையில் அடியேனை ஆசீர்வதிக்குமாறு அனைவரையும் அடிபணிந்து பிரார்த்திக்கிறேன்.
குழைக்காதர் திருவடிகளே சரணம்.
தாஸன்:
திருமதி பத்மஜா அனந்தராமன்.
-----------------------------------------------------------
முகவுரை
தென்டிருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில்.
'தென் பாண்டி நாட்டில் வளம் பல கொழித்துப் பாயும் பொருநை நதிக்கரையின் வலப் பகுதியிலே அமைந்துள்ள பேரூரே தென்திருப்பேரை. இது பக்தியோடு தமிழ் வளர்த்த பண்ணைகளில் ஒன்று. திருமால் கோயில் கொண்டுள்ள பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பதினெட்டுள் நம்மாழ்வார் உகந்த நவதிருப்பதிகள் குறிப்பிடத் தக்கவை. அவற்றுள் பழமையும், பெருமையும் மிக்கது தெந்திருப்பேரை.
"வேத வொலியும் விழா வொலியும் பிள்ளைக் குழாவிளையாட்டொலியும் அறாத்" திருப்பேரை என்று நம்மாழ்வாரால் போற்றப்பட்ட இத்திருப்பதியின் சிறப்பினையும், இங்குள்ள மகர நெடுங் குழைக்காதரின் மாண்பிணையும் இவண் காண்போம்.
தென்திருப்பேரை - அமைவிடம்:
தமிழ் நாட்டில் சிதம்பரனார் மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரிக்குக் கிழக்கே மூன்று கல் தொலைவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் பாதையில் திருச்செந்தூருக்கு மேற்கே தென்திருப்பேரை உள்ளது. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இவ்வூர் இருக்கிறது. இவ்வூரை 'தென்திருப்பேரை' "திருப்பேரை" என்ற பெயர்களால் திருவாய் மொழி குறிப்பிடுகின்றது. தென்திருப்பேரைப் பாசுரங்களிலிருந்து இவ்வூர் அக்காலத்திலே கழனிகளும் பொழில்களுமாய், படிப்பும், ஆற்றங்கரைப் பண்பாடும் உடையதாய் நம் தாய்மொழிக்கும், வடமொழிக்கும் வளமான ஒரு விளைநிலமாய்த் திகழ்ந்ததென்று தெறிகிறது. மேலும் இப்பதி திருப்பேரெயில், திருப்பேரை, வரலாறு கண்ட பேரை, தண்டமிழ்ப் பேரை, தென்பேரை எனப் பலவாறாகப் பாராட்டப் பெற்ற 'கலைமல்கு பேரை'யாகும். 'பேரெயில்' என்பது 'பேரை' என்று மருவி வழங்கி வருகிறது.
வரலாற்றுச் சிறப்பு:
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தில் தென்திருப்பேரை சீரும், சிறப்பும் பெற்றிருந்தது என நம்மாழ்வார் திருவாய்மொழியிலிருந்து தெளிவாகிறது. ஆழ்வார் காலத்திற்கு 175 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய தென்திருப்பேரையின் வயது ஏறத் தாழ 1250 ஆண்டுகள் என்பதற்கான வரலாற்றுச் செய்திகள் கிடைத்துள்ளன. நவதிருப்பதிகளைக் கண்டு மகிழ்ந்த இராமாநுசரின் பாதத்துளியும் பட்ட பெருமை இம் மண்ணிற்கு உண்டு. இப்பதி வரலாற்றுத் தொன்மையும், சமயப் பெருமையும், வேதசாத்திரத்தின் பழமையும், ஒருங்கே வாய்ந்தது. வைணவர்களால் போற்றப்படும் நூற்றெட்டு திருப்பதிகளில் ஒன்று இப்பதி. உபயகவி அப்பா எழுதிய 'நம்மாழ்வார் தாலாட்டும்', சடகோப திவ்ய சரிதமும் இவ்வூரைத் திருப்பேரை என்றே குறிப்பிடுகின்றன. அஷ்டப்பிரபந்த ஆசிரியர் இவ்வூரைத் 'தென்திருப்பேரை' என்றே குறிப்பிடுகின்றார். மணவாள மாமுனிகள் தமது வியாக்கியானத்தில் 'மகாநகரமான தென்திருப்பேரையிலே' என்று குறிப்பிட்டுள்ளார். நம் மாழ்வார் பராங்குச நாயகியாகத் தான் மகரநெடுங்குழை காதரிடம் கொண்டிருந்த தீராக்காதலைத் திருவாய் மொழியில் 'வெள்ளைச் சுரிசங்கோடு ஆழி ஏந்தி' எனத் துவங்கும் பதினொறு பாடல்களில் எழுதியுள்ளார்.
பதியின் மாண்பு:
இராமவதாரத்தில் வெற்றியடைந்த ஜெயராமன் சோழநாட்டில் காவிரிநதி தீரத்தின் வடகரையிலும் தென் கரையிலும் உள்ள பதினெட்டு ஊர்களைத் தலவகார சாமவேதிகளுக்குத் தானம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த பதினெட்டு ஊர்கள் காவிரிக்கு வடகரையில்எட்டும், தென்கரையில் பத்தும் என வெண்பாவே அறிவிக்கிறது. "திட்டைக்குடி அன்பில் திரு பூறையூர் அதனூர் மட்டவிழ்பூந் தோகூர் வயவாலி---சிட்டர் திருக்குன்ற மருதூர் குறைதீர்த்தார் அப்பனூர் என்று வடகரையில் எட்டு"
"இடையாற்றி னங்குடிசீர் எப்போதும் வாழூர் மிடைமணலூர் ஈரைந்தாம் வேலி ---- இடைமருதூர் நாணமங்கை பிள்ளைமங்கை நல்லபெருமாள் மங்கை பரணமங்கை தென்கரையிற் பத்து"
சுந்தர பாண்டியவழுதி இத்தீரத்தில் வாழ்ந்த நூற்றெட்டுக் குடும்பங்களைத் தென் பேரைக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு வேண்டிய வீடு, நிலபுலன்களை வழங்கிக் குடியேற்றம் செய்தாராம். குடியேற்ற விழாவின்போது ஒருவர் காணாமற் போகவே, கலங்கிய மன்னனின் கனவில் தோன்றித் தாமே நூற்றெட்டா மவர் என குழைக்காதர் ஆறுதலளித்தார். குழைக்காதர் பிள்ளைத்தமிழின் முதற் செய்யுளிலே ஆசிரியர் 'நூற்றெண்மர் சிந்தை குடி கொண்டிருக்கும் பாமாலை' என இறைவனைப் போற்றி பரவுகின்றார்
உபநிடதமும் தென்திருப்பேரையும்:
ஆதியில் தென் திருப்பேரையில் வாழ்ந்த நூற்றெட்டு குடும்பத்தினரும் ஜைமினி என்ற முனிவரைப் பின்பற்றிய சாமவேதிகள் என நம்பப்படுகிறது. தற்போது இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த ஜைமினி சாமவேதிகள் 'தலவகாரர்' என்று அழைக்கப்படுவதுண்டு. இவர்கள் 'கேனோபநிஷத்' என்னும் உபநிடத்தினைத் தங்கள் தனிச் சொத்தாகக் கருதி வருகின்றனர். சாமம் பாடுவதற்கு அமைந்த வேதம். 'சாமகானம்' 'சாமகீதம்' என்பவை இதன் புகழ்பெற்ற வேறு பெயர்களாகும்.
பதிநாயகனின் பெருமை:
தென்திருப்பேரையில் வீற்றிருக்கும் மகர நெடுங்காதரின் திருமுகத்தை 'வாடாத செந்தாமரை' என்று கோயில் முன் மண்டபத்தில் எழுதப்பட்டுள்ள பாடல் ஒன்று வருணிக்கிறது. அதனை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை.
"கண்டாயோ சோதிக் கதிரவனே! நீயுமிந்த
மண்டலங்கள் எங்கும் போய் வந்தாயே - தண் தமிழ்ச்சீர்
கோடாத பேரைக் குழைக்காதர் நன்முகம் போல
வாடாத செந்தாமரை"
சூரியனே! நீ உலகமெங்கும் போகிறாய். எங்கள் குழைக்காத பெருமானின் ஜோதி முகம் போன்ற 'வாடாத செந்தாமரை' யினைப் பார்த்திருக்கிறாயா? என்று புலவர் ஒருவர் வினா எழுப்பினார். இது இவ்வூர் வரலாற்றின் ஒரு பகுதி ஆகும். கோயிலுக்கு எதிரே கருடன் சந்நிதி போன்ற மறைவு ஒன்றும் இல்லாததால் ஆண்டின் ஒரு பகுதியில் சூரிய ஒளி மூலவரின் முகச் சோதியில் விழுவதைக் கண்டு களித்த புலவர் ஒருவர் இப் பாடலை எழுதியதில் வியப்பொன்றுமில்லை.இவ்வூர் கோயில் முன்பு கெருடாழ்வார் சந்நிதி பிற வைணவத் தலங்களில் உள்ளது போலக் காணப்படவில்லை. அரசாழ்வார் சந்நிதியில் கண்ணபிரானோடு கெருடாழ்வார் எழுந்தருளியிருக்கிறார். இப்பதியின் குலதெய்வமும், காவல் தெய்வமும் வாய்க்கால் கரையில் வீற்றிருக்கும் புள்ளரையனே.
புராண வரலாறு:
பேரையில் பெருமாளின் திருவிளையாட்டினையும் அவருக்குத் துணைநின்ற பிராட்டியார் இருவரின் ஊடலைப் பற்றியும் 'தாமிரவருணி மகாத்மியம்' என்னும் புராணம் விவரிக்கின்றது. அன்றொரு நாள் வானுலக வைகுந்தத்தில் திருமகளின் மணாளனான தாமரைக் கண்ணனிற்கும் ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டது. அன்றும் என்றும் போல் கருநிற காயா மலர் மேனியினையுடைய பூமாதேவியிடம் பிரான் மிகுந்த ஈடுபாடு கொண்டதனைக் கண்டு திருமகள் வெகுண்டாள். துர்வாச முனிவரின் உதவியினை நாடினாள். அவரும் இசைந்தார்; புறப்பட்டார். பூதேவி பெருமானுடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருக்கையில் முனிவர் வந்தார். தன்னைப் பூதேவி புறக்கணித்து விட்டாள் எனச் சீற்றங் கொண்ட முனிவர், 'எவ்வழகு காரணமாக நீ செருக்குற்றாயோ அவ்வழகு இல்லாதொழிக' என சாபமிட்டார் அவனிமாது நிறமிழந்து பின் சாபவிமோசனமாக இத்திருப்பதியில் உள்ள நிகரில் முகில் வண்ணனின் கோயிலில் 'பேரை' என்னும் நாமம் தாங்கித் தவம் புரிந்து மீண்டும் தன் வண்ணத்தைப்பெற்றாள் என்பது வரலாறு
மகரக்குழை:
ஒரு பங்குனித் திங்கள் மதிநிறைந்த உத்திர மீன்கூடிய நன்னாளன்று தவமிருந்த திருப்பேரைச் செல்வி வழக்கம்போல் பெருநை நதியில் தீர்த்தமாடிவிட்டுத் திரு மந்திரத்தை உருவேற்றித் தீர்த்தத்தை அள்ளினாள். அதிலே துள்ளும் கயல் போல மகர வடிவமான இரு குழைகள் சுடர் விடுவதைக் கண்டாள். அவள் உடலும், உள்ளமும் விம்மிச் சிலிர்த்தன. திருப்பேரைச் செல்வி தன் நாயகனான முகில் வண்ணனின் நீண்ட காதுகள் இந்த மகரக் குண்டலங்களை யணிந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தாள். அவர் திருக்கழுத்தின் இரு மருங்கிலும் அழகாக அசைந்தாடுமே என்று பூமகள் எண்ணினாள். உடனே பிரானும் தோன்றி தம் நெடியசெவிகளில் அணிந்து பூதேவிக்கு மகிழ்ச்சியூட்டினாராம். இந்த இனிய, அரிய காட்சியினைத் தேவரும், முனிவரும் காணும் பேறு பெற்றனர். இவர்களும் இறைவனைப் போற்றிப்பரவினர்.
பெயர்க் காரணம்:
பேரையில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமான் அக்குழைகளை அணிந்த காரணத்தால் 'மகர நெடுங்குழைக் காதர்' என்னும் பெயர் பெற்றார். அக்குழைகள் கிடந்த தீர்த்தம் 'மகர தீர்த்தம்' எனப் பெயர் பெற்றது. நிலமகள் 'பேரை' என்னும் பெயருடன் பயன்பெற்ற இடமாதலால் அவ்வூரும் திருப்பேரை என்னும் பெயர் பெற்றது. இங்கு அதுமுதல் தன்நிறம் பெற்ற பூதேவியான திருப்பேரை நாச்சியாருடன், சீதேவியான குழைக்காத வல்லியுடனும் பிரான் கோயில் கொண்டு காட்சி தருகிறார். திருப்பேரை நாச்சியாரின் மற்றுமொரு திருநாமம் பேராபுரி நாயகி. இங்கு இறைவன் சங்கு, கதை, பதுமம் முதலியவற்றை யணிந்தவராய், ஏக வுருவமாய் எழுந்தருளியிருக்கிறார். இவரின் தன்னிகரில்லாத் தனிச்சிறப்பு மகர வடிவமான நீண்ட காதணிகளையணிந்து, குழைகின்ற காதுகளாக அமைந்து அடியார்களின் அல்லல்களை நீக்கும் அன்புத் திருவுருவமாக விளங்குவது இவ்வூரிலிருந்து எழும் வேத பாராயண ஒலியினையும் செந்தமிழ் வேதமாகிய திருவாய்மொழி, பாராயண ஒலியினையும் எக்காலத்தும், எப்போதும் குழைக்காதரின் நெடிய காதுகள் குளிரக் குளிர கேட்டுக்கொண்டேயிருக்குமாம். மகரக் குழையானின் காதுகளுக்கு மற்றுமொரு விருந்தினையும் ஆழ்வார் படைக்கிறார். அதுதான் 'பிள்ளைக்குழா விளையாட்டொலி' யாகும். சிறார் சிறுமணல் வீடுகட்டி அழகனை அதிலே நிறுத்திச் சேவிப்பார்களாம். அந்த மாயனும் இந்த இளம் நெஞ்சுகளுடன் கைகோர்த்தும், காலடித்தும் விளையாடுகிறான் என்பது மக்கள் நம்பிக்கை. விண்ணை முட்டும் இந்த விளையாட்டொலியினைக் கேட்டு மகிழத்தான் மகரக்குழைக் காதர் தம் கோயிலுக்கு முன் வீற்றிருக்கும் கெருடனை வாய்க்கால் கரைக்கு அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கூடுபுனல்துறை:
ஒரு தடவை தன் பாவம் தீருவதற்காகத் தென் திருப்பேரை மகரக்குழையானை வேண்டி மகரத் தீர்த்தத்தில் நின்று தவம் புரிந்தான். அன்று பங்குனி மாதம் முழு மதி நாள். அப்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடப் பகவானும் அம்மஞ்சன நீரில் சிறிது கையில் எடுத்துவிடவும் வருணன் தமது இழந்த படையினையும், நகரினையும் அசுரரிடம் இருந்து மீண்டும் பெற்றான் என்று இவ்வூர் தலபுராணம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே நாளன்று வருணன் பகவானுக்குத் திரு மஞ்சனம் செய்வதாக நம்பப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களும், தேவவுலகத் தீர்த்தங்களும், பொய்கை, கிணறு, குளத்துத் தீர்த்தங்களின் சிறப்பும் கூடுவதாக என்று பெருமான் அருள் புரிந்தமையால் இத்திருமஞ்சனத்துறை 'கூடுபுனற்றுறை' என்ற பெயர் பெற்றது. விதர்ப்ப நாட்டிலே ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. பருகவும் நீரில்லாமல் உயிர்கள் தவித்தன. விதர்ப்ப நாட்டரசனும் அவனது பரிவாரங்களும் தென்திருப்பேரை வந்து கூடுபுனல் துறையில் நீராடி குழைக்காதனை வழிபட, தீங்கின்றித் திங்கள் மும்மாரி பெய்து அவன் நாடெல்லாம் செல்வம் கொழித்தது என்பது வரலாறு. இப்பிரானைச் சென்று சேவித்தால் பசி நீங்கும். பொருள் பெருகும். பகவான் இரட்சிப்பார்.
மூலவரும், உற்சவரும் :
கருவறையில் கம்பீரமான தோற்றத்தில் மூலவரான 'மகராயுத கர்ணபாச்சர்' (மகர பூஷணம்) தமது தேவியர் இருவரான குழைக்காத வல்லித் தாயாருடனும், திருப்பேரை நாச்சியாருடனும் எழுந்தருளியுள்ளார். கிழக்கே திருமுக மண்டலம் நோக்க வீற்றிருந்த திருக்கோலத்தில் வலது காலைத் தொங்கவிட்ட வண்ணம், இடது காலை மடித்து வைத்தவராய் வீராசனம் செய்தபடி காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன் இருமருங்கிலும் பிருகுரிஷியும், மார்கண்ட ரிஷியும் வீற்றிருக்கின்றனர். மூலவரின் அருளாசியினைப் பெற முழங்கு சங்கக்கையனான கௌதுகபேரர் அமர்ந்திருக்கிறார். கருவரைக்கு முன்பு மண்டபத்தில் மாண்புற உற்சவ மூர்த்தியான முகில் வண்ணன் சீதேவி, பூதேவித் தாயாருடன் காட்சி தருகிறார்.
இலக்கியக் கொடை:
தண்டமிழ் சீர்கேடாத இப்பேரையில் சங்க காலந்தொட்டு இந்நாள் வரைத் தமிழ்புலவர் பரம்பரை இருந்து கொண்டே வருகிறது. நம்மாழ்வாருக்குக் குழைக்காதரிடம் மிகுந்த ஈடுபாடு என்பது ஊரரிந்த உண்மை. 'மாறன் அலங்காரம்' என்னும் இலக்கண நூலையளித்தவர் தமது ஊர் தென்திருப்பேரை என்று கூறியுள்ளார். ஸ்ரீராமப்பாவலர் என்பவர் தமக்குச் சாகாத சந்ததி தந்தருள வேண்டும் என்று செய்த பிரார்த்தனையே 'சந்தானப் பத்து' என்ற இனிய நூலாகும். குழைக்காதர் மீது இரண்டு கலம்பகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை 'குழைக்காதர் கலம்பகம்', 'திருப்பேரை கலம்பகம்' ஆகும். குழைக்காதர் மீது பாடப்பெற்ற சிறந்த சிற்றிலக்கியங்களில் ஒன்று குழைக்காதர் பாமாலையாகும். இது 103 பாடல்களைக் கொண்டது திங்கள் ஒன்றாகச் சிறையிருந்த நாராயண தீக்ஷதர் பூமாலை கட்டி வழிபட இயலாத நிலையில் குழைக்காதருக்குச் சூட்டிய மாலை இப்பாமாலை ஆகும். இதனைச் 'சிறை தந்த செல்வம்' என்றும் போற்றுவதுண்டு, இதனைத் தவிர மகரக் குழையன் மீது எண்ணற்ற ஊஞ்சல் பாட்டு, தாலாட்டு, கிளிக்கண்ணி, கீர்த்தனைகள் இராகத்துடன் இசைத்துப் பாடுவதற் கேற்றபடி எழுதப்பட்டுள்ளன. திரு பி.ஸ்ரீயின் தகப்பனாரான கவி பிச்சுவையங்கார் எழுதிய இரத பந்தனச் செய்யுள் ஒன்று மண்டப முகப்பினை இன்றும் அலங்கரிக்கிறது.
இரத பந்தனம்
இணையொத்து வாழ்வோர்க் கிடரைத் தவிர்க்கும் பணைகாண் சீர்செல்வம் பாலிக்குங் குணமீந்த வாதழைக்கு மெல்லோர்க்கும் ஆந்தன மிப்பார்வாழ் சுவாமி குழைக்காதர் துணை.
- கவி பிச்சு அய்யங்கார்
கல்வெட்டும் காலமும்:
தென்திருப்பேரை கோயிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் சிலவற்றை இந்திய அரசின் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையினர் எடுத்தெழுதிப் பதிப்பித்துள்ளனர். அவற்றில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் பின்வருமாறு காணப்படுகின்றது.
இராசகேசரி பன்மரான செயங்கொண்டான் தஞ்சாவூரிலிருந்து ஆண்ட முதலாம் இராச இராச சோழனின் 26-வது ஆட்சியாண்டில் (கி.பி. 1010-1011) திருவழுதி வளநாட்டில் கைதவ சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் குடநாட்டு கலித மங்கத்து மாதவன் உதயதிவசுரன் என்ற பிராமணுக்கு நிலம் விற்றுக் கொடுத்தார்கள். (கல் வெட்டு எண். 283-1949).
இக்கல்வெட்டு 11-ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது. இக் கல்வெட்டுச் செய்திக்கும், கோயிலுக்கும் உள்ள தொடர்பு தெளிவாக இல்லை. இராச ராசனுடைய ஆட்சிக்காலம் குறிக்கப்பட்டிருப்பதால் இத் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பும், தொன்மையும் பெற்றிருப்பதை காண்கிறோம்.
பெருமாள் : மகர நெடுங்குழைக்காதர்
தாயார் : குழைக்காதுவல்லி
விமானம் : பத்திர விமானம்
தீர்த்தம் : சுக்கிர புஷ்கரணி
வீற்றிருக்கும் திருக்கோலம் கிழக்கே பார்த்த சந்நிதி
சுக்கிரன், பிரமன், ஈசானியருக்கும், ருத்திரருக்கும், பிரத்யக்ஷம்.
குழைக்காதர் திருவடிகளே சரணம்.
எழுதியவர்.
திருநெல்வேலி திருமதி பத்மஜா அனந்தராமன்,
6-6-92.
------
வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித்
தாமரைக் கண்ணனென் நெஞ்சி னூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்”
-- திருவாய்மொழி.
ஸ்ரீ குழைக்காதர் கலம்பகம்
- நூல்முகம்
தமிழ் மொழியிலுள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று கலம்பகம் என்னும் பிரபந்தம் ஆகும். கலவைச் சுவை நிரம்பிய இப்பிரபந்தம் சற்றுப் பின்னர் தோன்றிய இலக்கியம் எனலாம். கலம்பகம் என்ற பெயரே இப்பிரபந்தத்தின் இயல்பை விளங்கச் செய்வதாயிருக்கிறது. இச்சொற்குக் கலவை என்பது பொருள். பல வகையான மலர்களைச் சேர்த்துக் கட்டிய மலர் மாலையினைக் கதம்பம் என்று கூறுவதுண்டு. இது 'கதம்பகம்' என வட மொழியில் வழங்கப் பெறும். பல்வேறு வகையான நிறமும், உருவமும், மணமும் கொண்ட மலர்களால் தொடுத்த மலர் மாலை போன்று இப்பிரபந்தமும் பல்வேறு வகைப் பாக்களையும், பொருள்களையும், சுவைகளையும் கொண்டு வரும் என்னும் உவமை நயம் பொருந்தவே இது 'கலம்பகம்' என்னும் பெயர் பெறுவதாயிற்று.
'களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலத் தொடையல் ..... .... ... '
என்ற தொண்டரடிப் பொடியார் பாத் தொடரால் இது புலப்படும்.
தமிழில் வைணவச் சார்புடைய கலம்பகங்கள் மிகக் குறைவு. தென் தமிழ் நாட்டில் நவதிருப்பதிகளுள் ஒன்றான தென் திருப்பேரை நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட வைணவத் தலமாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் பிரானின் திருநாமம் ஸ்ரீ மகராயுத கர்ண பாச: தமிழில் மகர நெடுங்குழைக்காதர் என்று வழங்கப்படுகிறார். இப்பதியின் தனிச் சிறப்பு என்னவென்றால் இங்கு இரண்டு கலம்பகங்கள் உள்ளன. ஒன்று அபிநவ காளமேக அநந்த கிருஷ்ணையங்கார் எழுதி வெளியிட்ட 'திருப்பேரைக் கலம்பக' மாகும். பிறிதொன்று தான் 'குழைக்காதர் கலம்பகம்'. இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் பற்றிய விவரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதுவரை அச்சிடப்பட்டதாகவும் தெரியவில்லை. எங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கைப்பிரதியின் படிவந்தான் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 'ஏற்கனவே ஒரு கலம்பகம் இருப்பது தெரிந்தால் இந்த திருப்பேரை கலம்பகத்தை எழுதியிருக்க மாட்டேன்' என எனது தாத்தா அநந்த கிருஷ்ணையங்கார் கூறியதுண்டு. தெரிந்திருந்தால் 26-உறுப்புக்களைக் கொண்ட 'திருப்பேரை கலம்பகம்' நமக்குக் கிடைத்திருக்குமா?
"பல்பூ மிடைந்த படலைக் கண்ணி"
(பெரும்பாண்: 174) என்ற வரிக்கு 'பல பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மாலை' என நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். யாப்பெருங்கல விருத்தியில் அடிகள் எழுத்து ஒவ்வாது வெவ்வேறு வகையில் அமைந்து வரும் கலிப்பாவிற்கு 'கலம்பகக் கவி' என்ற பெயர் தரப்படுகிறது. (யாப்.வி:95) இவையும் இப்பெயர் காரணத்தை இனிது விளக்குகின்றன.
'கலம்பகம்' என்ற சொற்றொடரினை கலப்பு + அகம் எனப் பிரித்துச் சொற்பொருள் கூறுவதுண்டு. கலப்பு என்பது கலம்பு என நின்றது. கலம்பகத்திற்கு உறுப்பாக அமைந்த பல துறைகள் கலத்தலைத் தன்னகத்தே கொண்ட நூல் எனப்பொருள் விரிப்பதுண்டு. சிலர் பன்னிரண்டு மரக்கால் என்னும் பொருள்படும் கலம் என்னும் சொல்லும், கடவுளின் ஆறு குணங்களைக் குறிக்கும் 'பகம்' என்னும் சொல்லும் உம்மைத் தொகையாகச் சேர்ந்து 18 உறுப்புக்களையுடைய நூல் என இப்பெயர் காரணப் பெயராயிற்று என்பர். புய வகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல், என்னும் பதிணெண் உறுப்புக்களைக் கொண்டு பலவகைப் பாக்களும், பாவினங்களும் விரவிவர, பல்வகை நயங்களும் செறிந்து வர அந்தாதித் தொடை அமையப் பாடப்படுவது கலம்பகம் ஆகும். நாளடைவில் பதினெட்டு என்ற வரையறையைத்தாண்டி இருபத்தாறு இலக்கிய உறுப்புக்கள் வரை கலம்பகத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. தெய்வங்களையும், மன்னர்களையும் தலைவர்களாகக் கொண்டு இப்பிரபந்த வகைகள் தோன்றின. தெய்வத்தைப் பொருளாகக் கொண்டு எழுந்த கலம்பக நூல் பெரும்பான்மையானவையாகும். 'அழகர் கலம்பகம்' ' திருப்பேரைக் கலம்பகம்' என்றார் போன்று தெய்வத்தினைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதுடன், தலத்தின் பெயரால் 'திருவரங்கக் கலம்பகம்' 'திருவேங்கடக் கலம்பகம்' போன்றன எழுதப்பட்டன. நந்திக் கலம்பகம் போன்று பிரபந்தத் தலைவர்கள் பெயரில் எழுதப்பட்ட கலம்பகங்களும் உண்டு. கி.பி.9-ஆம் நூற்றாண்டு துவங்கி இன்று வரை எண்ணற்ற கலம்பக நூல்கள் வெளி வந்துள்ளன. பிற்காலத்தில் கலம்பக உறுப்புகாளான அம்மானை, தூது ஊசல், குறம் போன்றவை தனித் தனி நூலாக விரிந்தன.
முதன் முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள 'குழைக்காதர் கலம்பகம்' இனிய எளிய 101 செய்யுட்களைக் கொண்டது. இது காப்புச் செய்யுளுடன் துவங்குகிறது. காப்பு என்றால் காத்தல் என்று பொருள். இது கவி தாம் எடுத்துக் கொண்ட நூல் இனிது முடியும் பொருட்டு ஆன்றோர் வழக்கப்படி வழிபடு கடவுளையாவது, ஏற்புடைக் கடவுளையாவது வணங்குவது ஆகும். இது காத்தருளும் கடவுள் பற்றிய வணக்கத்துக்கான தொழிலாகு பெயர் ஆகும். அடியார்களைப் பற்றிய நூல்களுக்கு கடவுள் வணக்கம் கூறுவது போல கடவுளைப் பற்றிக் கூறும் நூலுக்கு நம்மாழ்வாரைக் காப்புச் சொல்கிறார் ஆசிரியர். இந்நூலின் சொற்கள் பலர் காதில் போட்டுப் பார்த்து கனிவு பெற்றிருக்கின்றன என்பதனை இக்கலம்பகத்தின் முதல் வரியே காட்டுகிறது.
செவிதோறுங் கனிந்த செந்தேன்
தெளிந்த சொல்.........."
(செவிதோறும் கனிந்த சொல், செந்தேன் தெளிந்த சொல்' என்று கூட்டுக.)
புவியிலுள்ளோர் எடுத்துச் சொல்லிப் புகழ்கின்ற பேரையின் புகழினைப் பாடுவது இக்குழைக்ககாதர் கலம்பகமாகும். பராங்குசன் எனப்படும் நம்மாழ்வார் பிற சமயங்களாகிற யானைகளுக்கு அங்குசம் போன்றவன். ஆழ்வாரை யானையென்று உவமித்தற்கேற்ப கவிமதம் பொழியும் ஞானமாகிற அங்குசத்தை உடையது என்றும் கூறினார். பாகனைப் பற்றித் தொடர்கிறது. யானை விலங்கறுத்த பாகனல்லவா? பாகனென்ற சொன்னதற்கேற்ப புள்ளின் பாகனென்று கூறினார். இக்கலம்பகமும் பாகன் புகழைத் தானே சொல்கிறது. களிறு தானே காக்கும் என்ற தனிப் பொருளும் காண்க.
காப்புச் செய்யுளிற்குப் பிறகு அவையடக்கம் காணப்படுகிறது. நூலாசிரியர் கற்றோர் குழுமிய அவையில் தம்மியல்பை வெளியிட்டு அடங்கிப் பேசுதல் வழக்கம். எதற்காக இந்நூலைச் செய்தார் என்ற வினா எழும்பலாம். உலகம் தழைக்கவும், மன்னர்கள் நீதி நெறி தவறாமல் ஆட்சி புரியவும், வேதங்கள் நிலை பெறவும் இந்நூலினை எழுதினார்.
"குழைக்காதர் கலம் பகமென் றொரு பேர் நாட்டிக்
கொழித்த தமிழ் சுழித் தெடுத்துக் கூறும் பாடல்"
என்று கூறுவதின் மூலம் ஆசிரியர் தமது தமிழ்ப் பற்றே நூலினைப் படைத்ததற்குத் தலையாய காரணம் எனக் காட்டுகிறார். இந்நூலில் அவரது தமிழ் பற்று கொழிக்கின்றது. தமிழ்ப்பாடல்கள் சுழித்தெழுகின்றன! இந்நூலின் கண் சொற்குற்றங்கள் நிரம்பி வழிகின்றன. செய்யுள் உறுப்புகளாகிற சீர், தளை, அடி, தொடை போன்றவற்றில் எத்தனையோ பிழைகள் உள்ளன. அவை சுட்டிக் காட்டாமலே புலப்படுகின்றன. தமது கவிதை 'ஒருபொருட்கும் ஒவ்வாது; காசு பெறாது' என மிகத் தாழ்மையுடன் நூலாசிரியர் கூறிச் செல்வதைக் காணலாம். ஆனால் அவர் மகரக் குழையனின் திருநாமத்தை மாண்புடன் அல்லவா கூறுகிறார்.
'ஒரு பொருட்டு மொவ்வாத தேனினுமென் சொற்
பிழைக்காக இகழ்வரோ பெரியோர் ஞானப்
பெருமான்றன் திருநாமம் பெற்றக் காலே”
ஒருவரும் தனது சொல் புன் சொல் எனச் சொல்ல மாட்டார்கள் என நம்புகிறார் ஆசிரியர். ஏனென்றால் படிப்பவர் தம் பெருமையும் அதில் தானே அடங்கியிருக்கிறது. கற்றறிந்த பெரியோர் முன் எவ்வளவு தன் அடக்கத்துடன் பேசுகிறார் என்பது புலனாகிறது.
பாட்டியல் விதியின்படி பூ என்னும் மங்கலச் சொல்லுடன் “குழைக்காதர் கலம்பகம்” மங்களகரமாகத் துவங்கி இனிய எளிய ஆற்றொழுக்கு நடையில் கலம்பக உறுப்புக்கள் விரவிவர 100 செய்யுட்களைக் கொண்டு விளங்குகிறது. நூலின் இறுதியில் ஒரு வாழ்த்துப் பாடலுடன் நூல் முடிவடைகின்றது. இந்நூல் முழுவதையும் கற்றுணர்ந்தால் புலவர் பெருமாளிடம் கொண்ட ஈடுபாடும், தமிழின் மீது கொண்ட பற்றும், இத்திருப்பதியின் மீதுள்ள பக்தியும் நன்கு புலனாகின்றன. “பேரை மால் குழைக்காதர்” 'மகரக் குழையனே' 'பேரை வாழ் முகிலே' என்று பலவாறு எம்பெருமானை விளித்துப் பாடுகிறார். இராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதராத்திலும் நூலாசிரியர் கொண்ட மிகுந்த ஈடுபாட்டினை இக் கலம்பகம் எடுத்துக் காட்டுகிறது.
'கானகம் புகுந்து விராதனை வதைத்துக் கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பனகை கரிய மூக்கரிந்து கரனுயிர் குடித்துக் கருங்கடல் வழிபடக் கடந்து”
என இராமபிரானின் சாதனைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார். சகடம் உடைத்தவன், மருதிடைப் பாய்ந்தவன், நரசிம்மாவதாரம் எடுத்தவன், குறள் வடிவானவன், இராவணனை வென்றவன்...ஏன் எல்லாமே மகரக் குழையனே என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். மேலும் அப்பிரானைப் 'பேரேசர்', 'வழுதித் திருநாடன்' எனவும் போற்றிப் பரவுகின்றார். அப்பிரான் எழுந்தருளியிருக்கும் பதியானத் தென் திருப்பேரையின் செழிப்பினை அடிக்கடி நினைவு கூர்கிறார்:
"மேழி வலம் புரிபழனப் பேரை நாட்டில்" என்றும், (19)
"வாளைப் பகடு புகுந்தழக்கும் வயல் சூழ்
வழுதித் திருநாடன்" (17)
என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆசிரியர் தாமிரபரணி நதியினையும் பாராட்டத் தவறவில்லை.
"வணிகர் போற் கடை நிலம் புரக்க
வருபெரும் பொருநைத் துறைவனே"
அந்த நதியின் தென் கரையிலிருக்கும் இப் பேரையினைத் 'தமிழ்ப்பேரை' 'அறிபேரை' 'வண்டமிழ்ப் பேரை' எனப் பலவாறு போற்றுகின்றனர். மேலும் இப்பதியின் பெருமை வாய்ந்த தலவகார சாம வேதிகளைக் குறிப்பிடத் தவறவில்லை;
'நூற்றெட்டு வேதியர் தம் புகழ் பாடி யாடீரூசல்' (19)
மேலும் இங்கிருக்கும் ஆடவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் திருக்குறள் பாணியினைப் பின்பற்றுகிறார்.
"கானார் கருங்குழலார் காமத்தின் பால் மறந்து
பேரை அறத்தின் பொருட்டு பொருட்பாலே" (44)
அங்கிருக்கும் ஆடவர் காமத்தை மறந்து இல்லறத்தை நடத்தப் பொருள் தேடிச் சென்றனராம். திருக்குறளில் காணப்படுவது போல் காமத்துப் பால் சிறிது; அறத்துப் பால் நடுத்தரம்; பொருட்பால் அதிகமாக இந்நூலிலும் இடம் பெறுகின்றது.
இந்நூல் கற்றோரும், மற்றோரும் படித்து மகிழத்தக்க விதத்தில் சொற் சுவை, பொருட்சுவை, பக்திச் சுவை சொட்டச் சொட்ட அமைந்துள்ளது. இதனைப் படிக்கும் போதெல்லாம் அந்த ஊர் பேர் தெரியாத புலவரின் புலமைத் திறமை, கவிதையாற்றல், கற்பனை வளம் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. அணிகளும், கவிதை நயங்களும் விரவி நிற்க ஆசிரியர் கூறுவது போன்று, 'பாகையும் பிழிந்து தேனையுங் கவர்ந்து பாலுடன் கலந்த மொழி சேர்' ந்த நூலே இக்குழைக்காதர் கலம்பகமாகும். நலமிகும் பெருஞ்சுவையினை நமக்கு இனிதளிக்கும் குழைக்காதரை வாழ்த்தி வணங்குவோமாக:
"வாழி புகழ் பேரை மகரக் குழை வாழி
வாழி தமிழ் நூற்றெட்டு மாமறையோர் - வாழியவே"
காப்பு
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
செவிதொறுங் கனிந்த செந்தேன்
தெளிந்தசொல் தவறுண் டேனும்
புவிபுகழ்ந் தெடுத்த பேரைப்
புகழ்க்கலம் பகத்தைக் காக்க!
பவவிலங் கறுத்த புள்ளின்
பாகணைத் தொடர்ந்து பற்றிக்
கவிமதம் பொழியும் ஞானப்
பராங்குசக் களிறு தானே, -
அவையடக்கம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மழைக்காவல் புரந்துலகம் தழைப்ப நீதி
மன்னவர்செங் கோலளிப்ப மறைநூல் வாழக்
குழைக்காதர் கலம்பகமென் றொருபேர் நாட்டிக்
கொழித்ததமிழ் சுழித்தெடுத்துக் கூறும் பாட
லுழைக்காவ லடிதொடைசீர் தளைமா ருடல்
ஒருபொருட்டு மொவ்வாத தெனினு மென்சொற்
பிழைக்காக விகழ்வரோ பெரியோர் ஞானப்
பெருமான்றன் திருநாமம் பெற்றக் காலே -
நூல்
வண்ணக ஒத்தாழிசைக் கலைப்பா
பூமாது நலம்பெருக்கப் புவிமாது வளஞ்சுரப்பத்
தேமாலை புனைந்தேத்தித் தேவர்களும் தலைகுனிப்ப
நீதியரும் பிக்கருணை நிறைபுனலா நூற்றெட்டு
வேதியரும் திருப்பேரை வியனகநூற் தழைத்தோங்கக்
கவிச்செல்வர் மூதறிவிற் கனிந்துருகும் பழம்புலவர்
செவிச்செல்வந் தவறாது செந்தமிழின் தேனிறைப்ப
வரிவளைக்கை யரம்பையர்கள் மலர்க்கவரி யெடுத்தியக்கத்
தருமலர்ப்பூந் தாதருந்தித் தமிழ்த்தென்ற லடிவருட
வெளியகத்தே நின்றுயர்ந்த வீங்குமணித் தூணிரையின்
ஒளிகெழுமி யிருள்துடைத்த வோலங்கு மண்டபத்துட்
காய்சினத்த கோளரியின் கழுத்தளக்கச் சுமந்தேந்தும்
ஆசனத்துக் கடவுளருக் கரசெனவீற் றிருந்தனையே
இஃது பன்னீரடித்தரவு
கோதுபிடித் தரித்தமுதங் கொடுத்தநீ யளைகவர்ந்து
சூதுபிடித் தடிச்சுவடு தொடர்ந்துபிடித் தசோதையெனு
மாதுபிடித் தடித்தவுடன் மண்ணையுண்ட வாய்மலர்ந்து
காதுபிடித் தழுதுமலர்க் கைபிடிக்க நின்றனையே
பெருவிருந்தா யொருவரைப் பிறந்துவளர்ந் தெதிர்ப்படுமுன்
னருகிருந்த மதலையைமற் றவுணனழித் திடுமென்றே
திருவுளந்தான் விரைவிரைந்து சிறுபொழுது மொருவயிற்றிற்
கருவிருந்து வளராமற் கற்றூணிற் பிறந்தனையே.
விரிகடலும் புவியுமுண்டு விசும்பளக்க நின்றுயர்ந்து
தரும்பிரம னடிவீழ்ந்து தலைதாழுந் தன்மையினால்
பெருகிவரும் பிரளயமுன் பேருருவம் போன்றதென்னே
திருவுருவ மீனாகிச் செலுவிலெடுத் தடக்கினையே
இவை மூன்றும் நாலடித்தாழிசை
பயிரவி யெனவரு படுகொலை யலகையின்
உயிரையு முலையுட னொருவழி பருகினை
பிடியென நொடியினிற் பிறையெயி னருடிபட
வடிமத கரியொடு வலிகொடு பொருதனை
ஒருபத சிரமொடு மிருபது கரமுடன்
பருவரை புறமிடு பரிபவ மருளினை
இதுபொரு ளிதுதவ மிதுகதி யெனமுது
சதுமறை படவற சமயமு மருளினை.
இவை நான்கும் ஈரடி அராகம்
மலைகுனிய விசும்பளக்கு மதிவிலங்கை வழிதிறப்பச்
சிலைகுனியப் புயநிமிரத் திருச்சரமொன் றெடுத்தனையே
மூவடிகேட் டீரடியான் மூவுலகு மளந்தசெழும்
பூவடியிற் பிறந்த கங்கைப் புனலாட நின்றனையே.
இவையிரண்டும் ஈரடி அம்போதரங்கம்
துட்டவா ளரவவடந் துவக்கிவரை திரித்தனையே
வட்டவான் குறலாமை வடிவெடுத்துக் கிடந்தனையே
முட்டவான் முகடதிர முழங்குகடற் கடைந்தனையே
பட்டவா ரமுதமரர் பசிக்குவிருந் தளித்தனையே.
இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம்
மருதொடு சகட மொடித்தனை மணிமுடி யரவினடித்தனை
பருவரை நிமிர வெடுத்தனை பரிமள துளப முடித்தனை
இவை நான்கும் முச்சீரடி அம்போதரங்கம்
மயிலு மறிவுநீ மலரு மணமுநீ யியலு மிசையுநீ யெளிது மரிதுநீ
உயர்வு மிழிவுநீ யுடலு முயிருநீ புயலு மழையுநீ புறமு மகமுநீ
இவையெட்டும் இருசீரடி அம்போதரங்கம்
எனவாங்கு - இது தனிச் சொல்
அரும்பவிழ் குவளையும் சுரும்பவிழ் குமுதமும்
கருங்கொடி வள்ளையும் கமலமு மலர்ந்து
கண்ணும் வாயும் வண்ணவார் குழையும்
திருமுகச் செவ்வியு மொருமுகப் படுத்திக்
கண்டவர் துவளுங் காட்சியிற் றுவன்றி
நலங்கிளர் மணிநிறை நன்னீர்ப் பண்ணை
பொலங்கொடி மகளிரிற் பொலிந்த பேரையுண்
மகரக் குழையன் மலரடி நோக்கி
யுச்சியிற் றெழுதகை யுரியவ ருளரேல்
வச்சிரத் தடக்கை வருபெரு மன்னரிற்
சிறந்து விதிப்படி செங்கோ னடாத்தி
மதிக்குடை கவிப்ப மண்ணுமா கமுமே. - 1
இது பன்னீரடி நிலை மண்டிலவாசிரியச் சுரிதகம்
நேரிசை வெண்பா
மாகவலைப் பட்டழிந்து மங்கைமார் தங்களனு
போகவலைப் பட்டமனம் போதாதோ - நாகவணைக்
கொன்புரக்கு நேமிக் குழைக்காத ரேயடியேற்
கன்புரக்கு மோவொருகா லம். - 2
கட்டளைக் கலித்துறை
ஒருகை முகக்குஞ் சரஞ்சொன்ன பேரென் றுரைக்கும் பொற்கா
தருகை முகக்கு மயில்விழி யீரருட் பேரையின்மான்
முருகை முசுக்கும் பசுந்தண் டுழாயென்று மொய் குழலச்
சருகை முகக்கு மிருக்குமுள் ளாவி தழைக்குமென்றே - 3
பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
தழைத்தெழுங் கிரணப் பனிநிலா மதியந்
தடங்கற்கடற் பரிதியென் றுதிக்கும்
தமிழுடன் பிறந்த மந்த மாருதமும்
தமுற்குழம் பெடுத்தெடுத் திறைக்கும்
குழைத்தகுங் குமச்செங் களபலே பனமுங்
கொதித்துயிர் குடிக்குமென் னளவிற்
கொடுவினை விளைந்த காலநல் லனவுங்
கொடியவா மென்பதின் றறிந்தேன்.
கழைக்குலந் தடிந்து சந்தனந் திமிர்ந்து
காழகிற் குழாமுறித் தெதிர்ந்து
கரிமுக மருப்புங் கவரியுஞ் சுமந்து
கனகமுந் தரளமுங் கொழித்து
மழைக்குலம் பிளிறு நெடுஞ்சுரங் கடந்து
வணிகர்போற் கடைநிலம் புரக்க
வருபெரும் பொருளைத் துறைவனே குவளை
வளைவயற் பேரைமா தவனே. - 4
எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
தவசரியை குரியையிது தவிரவினை கொலைகளவு
தனைநினையு மறிவிலி யைமா
கவலைபடு விகடபக டனையகப டனையுனது
கழலிணைக ளடிமை கொளுவாய்
நவமணியு மலர்மகளு மிளமதியு மதகளிறு
நறைகமழு மமுது மெடவே
திவலையெறி கடல்கடையு நிகரில்முகல் வணவமரர்
தெளியுமரு மறைமு தல்வனே. - 5
சந்தத் தாழிசை
மறைமுடித் தலையி லுறமிதித் தபத மருதிடைத்
தவழு மாயனார்
வழுதிநா டர்மக ரக்குழைக் கடவுள் மழைகொழித்
தொழுகி யருவியாய்
நிறைமுடித் தலையி லருவிகுப் புறநி லாவுதித்
தொழுகு வெற்பனே
நீயளித் தவீவை வேயின் முத்தமென நிச்சயப்பட
மொழிந்த தேன்
பிறைமுடித் தலையில் வடியவிட் டதொரு பின்னல்
பட்டசடை யில்லையே
பிணையெ டுத்ததிலை திரிபு ரத்தையழல் பிழிய
விட்டநகை யில்லைமா
கறைமுடித் தமிட றில்லை முக்கணொடு கரது
பாலமிலை யெங்கள்மால்
கழலினைத் தொழ மறந்த தாலெமர்கள் கைவீசக்
கடவ தாகுமே - 6
சந்தவிருத்தம்.
ஆகமொன் றிரண்டு கூறுகண்டு பண்டை யாடகன்ற னங்க மடுபோர்
வாகைவென்றி கொண்டு பேரைவந்த கொண்டல் மாயவன் துயின்ற கடலே
பாகையும் பிழிந்து தேனையுங் கவர்ந்து பாலுடன் கலந்த மொழிசேர்
கோகிலங்க ளின்றென் னாவிமென்று தின்று கூவுகின்ற தன்பர் குறையே. - 7
கட்டளைக் கலித்துறை
குறைக்கொழுந் தாயமு தின்கொழுந்தாரை கொழிக்கு மந்திப்
பிறைக்கொழுந் தார்மதிட் பேரைப் பிரான்தம்பி பின்வரவென்
முறைக்கொழுந் தாவெனு மென்மொழிச் சீதை முலைமுயங்கி
மறைக்கொழுந் தாயன்று கைம்மாறு செய்தனன் வானவர்க்கே. - 8
வண்ண விருத்தம்
வானவர் தானவர் மாமனு ஜாதிகள் வாழ்வது சாவதுமேல்
வானுல காள்வது கீழ்நர காள்வதுன் மாயையி னாலலவோ
ஏனமு மாயொரு வாமன னாகிய ராமனு மானவனே
ஞானவ ரோதய பேரைய ராதிப நாரண காரணனே. - 9
சந்தவிருத்தம்
கார ணங்குறி யாய்வ ழங்கிவள் காதன் மங்கையரே
வார ணந்தனில் வீதி வந்தனன் மாலை தந்திலனே
நார ணன்ஜக பூர ணன்றிரு ஞான சிந்தனையால்
ஆர ணம்புகழ் பேரை யம்பதி யாழி யம்புயலே. - 10
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆழி மாதவன் பேரை மாலளந் தவனி யுண்டவன்
பவனி கண்டபின்
தோழி மீரவன் துளப மாலையென் துணைமு
லைக்கிடார் குழல்மு டிக்கிலார்
ஊழி வேர்விழுங் கங்கு னட்டதும் உடுப திக்குவே
றழல்கொ டுத்ததும்
கோழி வாயையுங் கூவொ ணாமல்மண் கூறு
கொண்டதும் கொடிய தாயரே. - 11
நேரிசை வெண்பா
ஏடவிழுங் கண்ணிக் கிரப்பா ளவள் கலைநாண்
கூடவிழுங் கண்ணீர் குறையாதோ - மாடமதில்
வீதிமக ரக்குழையும் வெண்மதியுந் தோய்பேரை
நீதிமக ரக்குழைய னே. - 12
கட்டளைக் கலித்துறை
குழைத்திருப் பாரமு தக்கனி வாயிற் குழல் பதிக்குங்
கழைத்திருப் பாலிசை கண்டருள் வோர்குழைக் காதர் நன்னாட
டிழைத்திருப் பார்மணற் கூடலென்றாலு மிறப் பதன்றிப்
பிழைத்திருப் பாருமுன் டோவென்பார் சூள்பொய்த்த பின்னையுமே. - 13
தாழிசை
பின்னை யைத்தழு விப்பு ணர்ந்தருள் பெற்ற
செங்கனி வாயிர்னா
பெருமி தத்தமிழ் முறைகொ ழித்தறி பேரை
யம்பதி யன்னமே
யன்னை யிப்படி மலர ணைக்கு ளணத்த கையி
னெகிழ்த்துவே
றடைகொ டுத்த கபாட நீவியடிச்சி லம்பொழி
யாமலர்
முன்ன டித்தெரி யாதி ருண்டு முகிழ்ந்து கண்புதை
கங்குல்வாய்
முளரி யம்பத நோவ வன்பினில் மூத றிந்தவர்
போலவந்
தென்னை யிப்படி வாழ வைத்தது மின்ப மோகநல்
வாழ்வுபற
றியான்ம னுக்கிலு நான்ம றைக்கும திப்பி
றப்பினி லில்லையே. - 14
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
ஏது காரணத் தெவர்க ளேருமற் றிழிகு லத்தெழும்
புலை ரேனுமுட்
சாதிபேதமற் றவர்கள் மிச்சிலைத் தருவ ராயினும்
புனித வாழ்வுதா
னாத லாலருட் பேரை நாரணர்க் கடிமை யானவுத்
தமர்ச ரோருகப்
பாத தூளிபட் டுலகம் வாழ்தலிற் பரவு வார்பதத்
தளவி லாததே. - 15
தரவு கொச்சகம்
அளவறியாப் புனலிடைப்பட் டழுந்தினர்போ லணியிழையீர்
விளைவறியாப் பேதைமயல் வெள்ளத்தி லழுந்துவளேற்
களவறியாத் தயிர்நுகர்செங் கனிவாயர் மணிப் புயத்திற்
றுளவறிவாள் பின்னையொன்றுஞ் சொலவறிய மாட்டாளே.. - 16
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
ஆளைப் பொருது கயங்கலக்கி யடியிற் படிந்து மதகிடிய
வாளைப் பகடு புகுந்துழக்கும் வயல்சூழ் வழுதித் திருநாடன்
ருளைத் தொழுது பசுந்துளபஸ் சருகுக் கிரந்து மடவீர்மா
றோளைக் கருதி மடலெழுதத் துணிவாள் விரைகொன் றறியாளே.. - 17
அருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
அறிவி லேனொடு மேய நீதியி னிடைவி லேதிரியேன்
நெறியி லேனுறு கதியி லேறுனை நினையு மாறுளதோ
யிறைவ னேமறை முதல்வ னேதொழு மெமது நாயகமே
மறுவி லாமர புடைய பேரையில் மருவி வாழ்முகிலே.. - 18
ஊசல் - கலித்தாழிசை
வாழிவலம் புரிந்துநெடுங் குழைக ளாட
மலர்க்காந்தள் செங்கைவரி வளைக ளாட
வனமுலையிற் குடைந்த முத்து வடங்க ளாட
மழைகவிந்த குழலவிழ்ந்து மருங்கி லாடச்
சூழிவலம் புரிகளிற்று மைந்த ராடச்
சுரர்முனிவ ருயிரனைத்துஞ் சூறை யாடச்
சுடர்வயிர வடம் பிணைத்துக் கமுகி னெற்றித்
தூங்குமணிப் பொன்னூசல் துவக்கி யாட
மேழிவலம் புரிபழனப் பேரை நாட்டில்
மேதகுசீர் வளம்பாடி யாடி ரூசல்
விரைத்துளபச் செழும்புயலைத் தொழுநூற் றெட்டு
வேதியர்தம் புகழ்பாடி யாடி ரூசல்
ஆழிவலம் புரிபாடி யாடி ரூசல்
அவங்கருடக் கொடிபாடி யாடி ரூசல்
ஆழ்வார்கள் தமிழ்பாடி யாடி ரூசல்
அமுதனையீ ரணியிழையீ ராடி ரூசல்.. - 19
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
ஆடி லாள்கழலாடி லாள்கனை யாடி லான்பனிநீர்
போடி லாள்கலைதேடி லாள்வளை பூனி லாளவடான்
பீடு லாவிய வீதி கோலிய பேரை வாழ்முகிலே
நாடு வாளிசை பாடு வாணம நார ணாவெனவே - 20
நாராய ணாயவென வோதாமல் வீண்மொழிகோ
ணாவாலு மேதுபய ணவர்புகழே
யாராலு மோதிலவை கேளாத மூடர்செவி
யானாலு மேதுபய னறிவிலிகாள்
காரான சோதியழ காராத காதலொடு
காணார்க ணாலுமொரு பயனுளதோ
வாராழி மீதுதுயில் பேரேசர் கோயில்வலம்
வாராத காலுமொரு பயனிலையே.. - 21
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
ஒருபிழைகண் டயர்ப்பா ருளாதாரவி லோதா
ருறவுநினைந் திருப்பார்கள் கோபமமை யாதோ
விருவருமிங் கிதத்தோடு கூடியணை யாநா
ளிளமைநலங் கிடைத்தாலிங் கேது பயனாமோ
முருகவிழ்செங்க கனிக்கோவை வாய்மொழியி னாலே
முனிவர்பெருங் குடித்தாழ்வு வளரதறி யீரோ
மருவியசந் தனக்காவின் மாமலர் கொய் வாரே
மகரநெடுங் குழைக்காதர் பேரையணை யாரே. - 22
கட்டளைக் கலித்துறை
ஆரய ராம லிருப்பா ரவருக் கருள் புரியும்
பேரைய ராதிபர் நங்குழைக் காதர் பிறங்கன் மின்னே
தாரை யராவிக் கடைந்தசெவ் வேலென்னஸ் சாய்ந்த குழற்
காரை யராவியென் னெஞ்சை யராவுங் கடைக் கண்களே. - 23
பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
கண்ணகம் புதைப்ப வெளியிடஞ்ச சுவறக்
கருந்தடத் திருட்படாய் விரித்துக்
கடல்வீடக் குழம்பை யள்ளியிட் டுலகங்
கரந்துகொண் டனவெனத் தணிந்து
விண்ணகம் புதைத்த பரிதியு மதியும்
விழுங்கியுண் டொருபுடை செறிப்ப
வேர்விழுந் தூழி முடிவிலாக் கங்குல்
விடிவிலாத் தகைமையே துரையாய்
மண்ணகம் புதைத்த துணையடி முனிவர்
மனத்தகம் புதைப்ப வேழ்புலியும்
வயிற்றகம் புதைத்த பெருமவென் றிடைச்சி
மார்க்கமும் புதைப்பநீ வெருவிப்
பண்ணகம் புதைத்த பவளவாய் புதைத்துப்
பருமணிக் குழைபிடித் தாடப்
படித்தவர் சுருதி முடித்தவர் பேரைப்
பதிவளம் புரக்குமா முகிலே. - 24
நேரிசை வெண்பா
மாவளர்த்த வன்னையரு மாரன் குயில்வளர்க்கக்
காவளர்த்தா ரென்று குழைக் காதரே - நாவளைத்துச்
செற்றார் நகைவடிப்பத் தீவெடிப்பப் பூந்துளவின்
முற்றார் நகைவெடிக்கு மோ. - 25
சுரம் போக்கு - கட்டளைக் கலித்துறை
வெடித்துச் சிவந்தவப் பாலைக்கப்பாலை வெளியில் வெப்பம்
பிடித்துச் சிவந்தன வோவந்த ணீர்கண்ணன் பேரைவெற்பில்
வடித்துச் சிவந்தசெம் பஞ்சோ டனிச்ச மலருறுத்தித்
தடித்துச் சிவந்தன கண்டீர் மடந்தைபொற் றாளினையே - 26
மறம் - சந்தத் தாழிசை
தாளெடுத்துல களந்தபேரைமுகி றனதருட்குறு
நிலத்துளோர்
தையலைப்புது மணங்குறித்தெழுது சருகுகொண்டு
வருதூதனே
வேளெடுத்தவடி வேல்படப்பொருது வினையெடுத்தவர சரையெலாம்
வெட்டிவிட்டதிரு முகமலாதுதிரு முகமும் வேறறிவதில்லையே
நாளெடுத்தபடை பாடெடுத்ததிலை நாணயப்பிழையி வின்னமு
நரபதித்தலைவர் தலையெடுத்ததிலை நமனெதிர்த்துவரு மாயினும்
வாளெடுத்துவரி சிலைகுனித்துவளை தடிபிடித்து மெமெர் வெல்வராம்
மனுவரம்பழியு நாளுமெங்கள்குல மறவரம்பழிவ தில்லையே. - 27
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
இல்லத் தடங்கா மடந்தையர்கற்
பெனவும் பசிக்கென் றிரந்தவர்கொன்
றீயா தவர்கைப் பொருள்போலு
மிரவிக் கிருள்போ லவுமடியார்
சொல்லத் தொலையா வெழுபிறப்புந்
துடைகுங் கருணைக் குழைக்காதர்
துணைத்தா ளளக்கும் புவிமருங்கிற்
சுற்றிக் கிடக்குங் கருங்கடலே
கொல்லத் துணியா தன்னையருங்
கொதியார் மதியு மதன்படையுங்
கூப்பிட் டழையாக் கருங்குயிலும்
கொடுமை படுத்தாக் குழலிசையு
மல்லற் படுத்தா வயலவரு
மளித்துப் பிரியீ ரெனவுரையா
தயர்த்துக் கொடுத்த மனமிருக்க
வாரை வெறுக்கக் கடவேமால். - 28
சம்பிரதம்
கடல டங்கவுறு மொருசி றங்கைபுனல்
கடுகி லும்புகுது மூசிவே
ரிடம்வ லஞ்சுழலும் வடத டங்கிரியு
மெமது சம்பிரத மீதெலா
முடனி ருந்துமகிழ் குருப ரன்பரவை
யுலக ளந்தமுகில் பேரைமா
லடல்பு ரிந்துபக லிரவு கொண்டதுவு
மரிய சம்பிரத மானதே. - 29
நேரிசை வெண்பா
தேவகியார் பெற்ற திருவருத்தம் பாராமல்
கோவியர்தா மன்றுகுழைக் காதரே - தாவி
யடிக்குங்கைம் மாறோநீ ரஞ்சினர்போற் காது
பிடிக்கும்கைம் மாறோ பெரிது. - 30
கலிவிருத்தம்
பெருவிட வரவணைப் பேரை மாதவன்
மருவிட நினைகிலான் மங்கை மாதரே
தருவிட வெண்ணிலாத் தழைத்த தெங்கணு
மொருவிட மிலைநமக் குறைவி டங்களே. - 31
கட்டளைக் கலித்துறை
உறைக்கோடு மாடவர் வாளா லொருகொம் பிறந்து மற்றைக்
குறைக் கோடு கொண்டுழல் குஞ்சரம் போலும் கொடியிடையீர்
துறைக் கோடு வாய்வைத்த மால்பே ரையிற் றென்னர் சூழ்ந்த பண்டைச்
சிறைக்கோடு மேகம் பிறைக்கோடு தாங்கிச் சிறக்கின்றதே. - 32
தூது - எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
சிறந்தார் தொழத்தரு மருந்தா மழைப்புயல்
செழும்பே ரையுத் தமர்பால்
அறந்தா னுறக்குரு கினங்காண் மடப்பெடை
யனங்கா ளுரைத் தருள்வீர்
இறந்தா மெனிற்பிழை யிருந்தா மெனிற்பழு
திரங்கா மனத்தவர் போன்
மறந்தான் மறக்கவு நினைந்தா னினைக்கவு
மனந்தா னெமக் கிலையே. - 33
வெண்பா
எமக்குமுகம் வாட விருந்தா மரைகள்
தமக்குமுகம் வாடுஞ் சலிப்பென் - அமைத்துரையும்
பெண்மதியென் றோதாமற் பேதைநாட் டன்னங்காள்
தன்மதியி லுண்டோ தழல். - 34
பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
தழல்பிழிந்து சாறுகொண்டு சந்தனத்தி லிட்டதார்
தண்ணிலாவை யெரியெழஸ் சமைத்துவிட்ட பாவியார்
குழல் பிழிந்த விசையிலே குளிர்ந்தசிங்கி வைத்ததார்
கொடுமைவந்த காலமாசை கொண்டிருக்க வல்லமோ
நிழல்பிழிந்து பருகவென்று நினையுமசுர மருதமும்
நெறியவென்ற குரிசில்பேரை நீர்குளிக்கு நாரைகா
ளழல்பிழிந்த வேலரெம்மை யாணையிட் டகன்றதா
லந்தவாய்மை யுடல்பிழிந்தே னாவியுண்டு விட்டதே. - 35
பின்முடுகு வெண்பா
ஆவியுண்டு மையுண் டறிவையுண்டு நிற்குமிரு
காவியுண்டு தாமரைக்கே கண்டீரோ - தேவியுடன்
மால்வளர்ந்த பேரையின்கண் வாவிகண்டு பூவையுண்டு
கால்கிளர்ந்த நீலவண்டு காள். - 36
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
வண்டிருக்குங் குழற்புறத்து வாட்டிமடித் துப்பிடித்து வடிந்த வள்ளைத்
தண்டிருக்குங் குழைமடவீர் குழைக்காதர் பேரையின் முத் தமிழே போல
வுண்டிருக்க வுவட்டாத விதழமுது மிள நீரு முங்கள் பாலிற்
கொண்டிருக்கப் பெருங்காமப் பசிக்குதவா திருப்பதுவுங் கொடுமை தானே. - 37
வஞ்சி விருத்தம்
கொடித்தேரினர் குழைக்காதினர் குலக்கார்வரை மேற்
பிடித்தீர்தழை கெடுத்தீர்கரி பிணைத்தேடுவ தேன்
அடித்தாமரை நடப்பீரவை யடைத்தாளுவ தோர்
தொடித்தோழியர் புனச்சார்பொரு தொழுத்தாலை வே - 38
கட்டளைக் கலித்துறை
தொழும்பாக்கி யண்டர் தொழக்கற்ப காடவி சூழலர்த்தே
னெழும்பாக் கியமென் றிருப்பதெல் லாமிந்து விட்டந்தட்டித்
தழும்பாக் கியபொழில் சூழ்பேரை மால்சர ணாரவிந்தச்
செழும்பாக் கியமென் றவனடி யார்பண்டு செய்தவமே - 39
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
செய்யிற் கரும்பு வளர்பேரைத் திருமா றிருநா டனையீரும்
தொய்யிற் கரும்பு மலர்க்கணையுந் தொழிலுக் கரும்பு விழியுமதன்
கையிற் கரும்பு மலர்க்கணையுங் கைக்கொண் டதுபோற் கண்டவென்மேல்
எய்யிற் கரும்புங் கணையுமிலை இன்றைக் கிறவா திருப்பேனே. - 40
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
இரும்பை நெறித்துத் துதிக்கைமடுத்
திளங்கோ மகளிர் வீரனெறிப்ப
வெதிர்த்தார் சிரத்தை நெறித்துமலை
யிடறி நெறித்துக் கடர்புறத்துச்
சுரும்பை நெறித்து வழிகறங்கச்
சுற்றும் தழைக்குஞ் செவிப்படலத்
துங்கக் களிற்றின் மிசைப்பவனி
தொழுதாள் விரகம் தொலையாதோ?
கரும்பை நெறித்து முடப்பலவின்
கனியை நெறித்து மடைமுதுகிற்
கதலிப் படலைக் குலைநெறித்துக்
கன்னிக் கமுகின் மடனெறித்துக்
குரும்பை நெறித்துத் தேனொழுகுங்
குவளை நெறித்துப் புடைத்துவரால்
குதிக்கும் புனற்பே ரையின் மகரக்
குழையே யெவர்க்குங் கோமானே. - 41
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
மானென்பார் கலையென்பார் தொடுக்க லாகு
மலர்த்தழையா லெய்ததொரு மத்த வேழந்
தானென்பார் பதியென்பார் வழியே தென்பார்
தாமரைப்பூங் கோயிலென்று தவிர்ந்த தென்பார்
கோனென்பார் குலத்துதிக்குங் கருணை மேகங்
குழைக்காதர் பேரையிளங் கொம்பே வம்பே
யானென்பா ரல்லவென்பா ரில்லை யென்பா
ரிவர்கோட்டிக் கெதிருரைப்பார் யாவர் தாமே. - 42
கழித் தாழிசை
தாமோதரர் மதுசூதனர் தருபேரையின் மடவீர்
நாமோதர மாமோகினி நலமோதர மறியீர்
ஆமோதர மலவோவெளி தடியேறுடன் முனிவாய்ப்
போமோதர நினையீர்கமழ் புதுவாய் மல ரமுதே. - 43
கலிவிருத்தம்
தேனார் பொருனைத் திருமால் தமிழ்ப்பேரை
யானாத கல்வி யறிவார் பயனன்றோ
கானார் கருங்குழலார் காமத்தின் பால்மறந்து
போனாரறத்தின் பொருட்டுப் பொருட்பாலே. - 44
கலித்தாழிசை
பால்வடியுந் திரண்முலையும் பச்சுடம்பும் பசுநரம்புஞ்
சூலவடிவுந் தோன்றாமற் றூண்வயிற்றிற் றோன்றியநாண்
மேல்வடிவா மிரணியனை வினைதொலைக்குந் தமிழ்ப்பேரை
மால்வடிவாந் திருவடிவ மரகதத்தின் மணிவடிவே. - 45
கட்டளைக் கலித்துறை
வடித்தூது சங்கொப்ப வண்டோட்டு மல்லிகை வாயிற்கௌவிப்
பிடித்தூது வண்டோடும் பேசுகிலேன் பிரியாத வைவர்
குடித்தூது சென்ற குழைக்காதர்க் கென்மயல் கூறிவரும்
படித்தூது நீசெல்லு வாய்மழை சாடும் பனிக் கொண்டலே - 46
கழித்தாழிசை
கொண்டலைக் கோதி வகிரிட் டிருண்ட குழலாரே
குங்குமச் சேறு பூசித் திரண்ட முலையாரே
தெண்டிரைப் பாயல் மீதிற் றுயின்ற ருளுமாமால்
தென்திருப் பேரை மீதிற் சிறந்த மடவீரே
அண்டற்பொற் பூமி தான்விட் டெழுந்த ருளினீரோ
அம்புயக் கோயில் வாழப் பிறந்த வருநாமோ
தண்டமிழ்ப் பாகி னூறிக் கனிந்த மொழிதாரீர்
சந்தனக் காவி னீழற் பொழிந்து மருவீரே. - 47
மருத்தேற லுண்ணுங் களிவண்டு காள்வம்மின் மாலறிந்து
கருத்தே மகிழவுங் கண்களி கூரவுங் காய்கதலிக்
குருத்தே விசும்பளக் கும்பேரை மால்குழைக்காதர்செம்பொற்
றிருந்தே ரிலுங்கடி தாய்வரு மோவன்பர் தேர்வரவே - 48
எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
வரம்பறுங் கடற்பாயல் பிரிந்தநங் குழைக்காதர்
மகிழ்ந்ததென் திருப்பேரை வளவயல்சூழ்
கரும்பையுங் கசப்பாக விளைந்தமென் சுவைப்பாகு
கனிந்தசெந் தமிழ்ப்போலு மொழிமடவீர்
இரும்புநெஞ் சவர்க்காக நெகிழ்ந்தநெஞ் செமக்காக
விருந்துசஞ் சரித்தாவி யவர்பிறகே
வீரும்புநெஞ் செமக்காக மறந்தவன் பவர்க்காக
விரிஞ்சலும் படைத்தானென் விதிவசமே - 49
பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
விதிக்குந் தொழிலாற் பலகோலம்
வெவ்வே றெடுத்து நடித்தொருவன்
விளையா டுவபோற் றொலையாத
வினையிற் சுழன்று தடுமாறி
எதிற்குந் சிறிதா மெறும்புகடை
யானை முதலாந் தொல்குலத்தி
லெல்லாப் பிறப்பும் பிறந்தலுத்தே
னினியுன் திருத்தா ளெனக்கருள்வாய்
குதிக்குங் கலுழிப் பெருஞ்சுவட்டுக்
குறுங்கட் பெருவான் மழைமதித்துக்
கொலைவேட் டெழுதெவ் வுடல்பிளக்கக்
குத்தும் பிறைக்கிம் புரியெயிற்று
மதிக்கும் புகர்மத் தகமுகத்து
வரிவண் டிரைக்கும் பணைக்கரத்து
மதவா ரணத்துக் கருள்புரியும்
மகரக் குழையெம் பெருமானே. - 50
எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
மகரக்குழை மாயன் பொருனைத்துறை நாடன்
மண்டங்குடி யாளுந் தொண்டன்பணி வாதன்
பகதற்கரி தாகும் பரதத்துவ போதன்
பைம்பொற்கிரி வாழுஞ் செம்பொற்கொடி போல்வாய்
சிகரத்தன பாரங் குழையக்குறு வேர்வுஞ்
சிந்துங்கனி வாயின் பந்தத்துரை மாறுந்
தகரக்குழல் சோருங் களவித்தொழில் போகந்
தங்குஞ்சுனை தானிங் கெங்குங்கிடை யாதே. - 51
சந்தக்கலி விருத்தம்
எங்குங்கிடை யாதபே ரின்பந்தரு பேரைமால்
வெங்கண்களி யானைபோம் வேள்கண்டெழு மாதரார்
சங்கங்களை வாருகே சந்தத்துழல் வருமா
தங்கங்கணி யாகவே ளம்பின்னுயிர் வாடுமே. - 52
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
வாடு மனைத்துயிர் வாழ வளிப்பவர் மாமக
ரக்குழைமால்
கூடு புனற்றுறை யாடி யிளைத்துடல் கூறு
நரைக்குருகீர்
பேடையை விட்டக லாதிரு முத்தமிழ் பேரறி
விற்குணமே
யாடவ ரிப்படி போன பிழைக்கினி யாரை
வெறுப்பதுவே. - 53
பதினாங்கு சீர்ச் சந்த விருத்தம்
ஆர்வெறுப்பினு மயல் வெறுப்பினு மன்னைமார்கள் வெறுப்பினு
மமுதசந்திர கலைவெறுப்பினு மந்திமாலை வெதுப்ப வேள்
போர்வெறுப்பினு மறலிவந்தொரு புடைவெறுப் பினும் வளைகடற்
புடவியேழும் வெறுப்பினுமொரு பொருளதாக நினைப்பனோ
வார்வெறுத்தெழு கொங்கையீமக ரக்குழைத்திரு
மாயனார்
மார்பிடத்தும் வரைப்புயத்தும் மணந்தணைந்து
முயங்குபைந்
தார்வெறித்துள வாயினுஞ் சருகாயினும்
பெற விட்டதோர்
சாமகீத மொழிச்சுரும்பொடு தான்வெறுப்பில
தாகியே. - 54
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
இலதாகி யுளதாகி யுடலாகி யுயிராகி யிருளாகி
யொளியாகநீ
பலதாரை வெகுமாயை விளையாடு குணநீதி
பலதேவ ரறிவார்களோ
மலருடு கயல்சாட மதகூரு புனல்சாடி வருபேரை
நகராளனே
சிலபேர்க ளறிவார்கள் சதுவேத முதுபோத
தெளிஞான முடையோர்களே. - 55
புய வகுப்பு
முப்பத்திரண்டு சீர்க் கழிநெடிலடியாசிரியச் சந்த விருத்தம்
உடையக் கலசத் தயிர் கொட் டியெடுத்
திதழ்வழி யொழுகிய திவலை பொழிந்தன
உரலைக் கதவுக் கடையிட் டுயரத்
துறிபல தடவிய நறுநெய் கவர்ந்தன
உடல்கட் டிறுகத் தொழில் மற் பிடியிட்
டசுரரை யெமபுர மளவு துரந்தன
உயிரைப் பருகக் களவிட் டலகைப்
பணைவரை முலைமுக நெருடி யிருந்தன.
படியிற் றுடைபட் டுழலக் கனகனை
நகநுனி யுழுதிடு செருவி யிடந்தன
பனையிற் கனியொத் திருபது முடியத்
தலையுருள் படவடு பகழி சொரிந்தன
பரிதிக் கதிருட்புதையத் தமணப்
படநிழல் கெழுமிய திகிரி சுமந்தன
பருமச் சிகரக் கயிலைப் பரனுக்
கிடுபலி கெடநிறை பரிசில் வழங்கின
கடலைக் கடையப் பருமத் துவலித்
திமையவர் பசியற வமுதம் விளம்பின
களபத் தெளியிற் றுளபத் தொடையில்
பரிமள ம்ருகபத முழுகி யளந்தன
கனவட் டமுலைத் திரள்பட் டுருவிப்
பொதுவியர் வரிவளை பொருது சிவந்தன
கமலத் தவளைத் தழுவிக் களவியி
லிளகிய புளகம தொழுகி மலிந்தன
மடையிற் கழியிற் பொருனைத் திரையினி
லுதறிய வரிமண லலகு நெடும்புழை
மதகிற் கதலிப் படலைக் குலையினில்
வளமுக கடவியில் மருவி வலம்புரி
வயலெக் கரிடப் புதுமுத் தமிழ்சொற்
குருகைய ரதிபதி பரவு நெடுந்தகை
மகரக் குழையுத் தமனித் தியனுயர்
பரகதி முத்லவ னணிபொற் புயங்களே. - 56
குறம் - பதினான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
புயங்க சேகர முயங்கு நாடதி
புகழ்ந்த பேரையை வணங்கியே
புரிந்த வாய்மையி னிகழ்ந்த மாகுறி
புகன்று வாழ்குற மடந்தை நான்
இயங்கு மாகெவு ளியும்பொ லாதல
விருந்த மாநில மிணங்கவே
யிசைந்து மாநிதி துலங்க வேயருள்
பொருந்தி வாழுவை யிலங்கிழாய்
வயங்கு மாதலை வரைந்து பேரதில்
வளங்கொள் சேவக ரிரண்டுபேர்
வளர்ந்த நாவல ரிரண்டு பேரோரு
வனுந்த ராதலம் வணங்குவோ
னுயங்கி நானுடல் வருந்தி னேனெழு
குழந்தை வாய்பசி யடங்கவே
யுடந்தை யாயொரு சிறங்கை கூழிடு
கிழிந்த தூசுரு ளுறங்கவே. - 57
கொற்றியார் - எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
அரங்கத்து ளேதுயிலு மருஞ்சக்ர பாணிவய
லகஞ்சுற்று பேரை நகர்வாய்
விரும்புற்ற தாமமுலை யரும்பித் தாமரையில்
விளைந்துக்க மாமணி கொலோ
கருங்கற்றை வார்குழலை முடிந்திட்ட நாமமொடு
கலந்திட்ட தாவடமு மாய்
வருங்கொற்றி யாரழகி னரங்கொற்றி யாடலது
மருங்கொற்றி யாரறி வரே - 58
சந்தக்கலி விருத்தம்
வருகார்முகில திருபேரையி லமர்பூ வணைசேர்
பெருவாழ்வொடு மொருநாளவை பிரிவோ மலவே
திருவேயமு துருவேபொரு சிலைவேள் குருவா
முருவேறெம துடல் வேறெம துயிரோ குயிசரே. - 59
நேரிசை வெண்பா
உயிர்முடிக்குஞ் செவ்வந்தி யுண்டெனவே கோதை
மயிர்முடிக்குஞ் செவ்வந்தி வையாள் - அயனார்
பெருந்துளதிக் கேகமும் பேரைமால் சாத்து
மருத்துளதிக் கேமயலா வாள். - 60
எழுசீர்க் கழிநெடிலடி சந்த விருத்தம்
மயலற் றவைக்கருள்செய் மகரக் குழைக் கடவுள்
வயிரப் பொருப்பி னயல்சூழ்
முயலைத் துடைத்துமதி யதனைப் பதித்ததென
முகவட்ட மிட்டு வருவீர்
புயலிற் கறுத்தகுழல் வரையிற் பணைத்தமுலை
புளகிக்கி விற்று வீடும்வே
ரயலற்ற வற்பவிடை திருநெற்றி யிற்றலதே
மழியத் துடைப்ப தழகே. - 61
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
அழகு தங்கிய மகர வண்குழை யமலர் தண்கிரிவாய்
நுழை நுழைந்தென துயிரை யுண்டது நுவல வும்படுமோ
மழை சுமந்தலை கடல் சுமந்திணை மலை சுமந்தருளே
தழைய வந்தொரு பொழிலி னின்றது தனியிளங் கொடியே - 62
ஒன்பது சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்
இளங்கொடி யிணங்குமுது சூழல்
நெருங்கிய பொதும்பர்வெளி நீழல்
இதண்புடை யிருந்து விளையாடி நீர்
விளம்பிய குளிர்ந்த மொழி யூடு
கரைந்தது கருங்கலினை வீசி
வெறுங்கவ ணெறிந்துபய னாகுமோ
வளந்தலை மயங்குதமிழ் நாடர்
செகந்தனில் முகுந்தர்வரு பேரை
மடந்தையர் வணங்கு மபிஷேகமே
தெளிந்தசொ லினிங்களென நூறு
பசுங்கிளி விழுந்தபுன மீது
செழுந்தினை விளைந்துகரை யேறுமே. - 63
களி - பதினான்குசீர்க் கழிநெடிலடிச் சந்தத் தாழிசை
கரைபடைத் தமடைமுது குடைப்ப வொரு
கயல் படைத் துலவு பேரை மால்
கருணையைப் புகழ வரு பரப்பிரமர்
களியர்கா னறியு நறவுமாய்
வரிசையிட்டன ளிலச்சி யாகினி
வலைச்சியைத் தொழு மடத்துளே
மதுக்குடந்தனை யெடுத்துவைத் ததனை
வளைய வைத்து நட மாடுவோம்
விரிசடைக் கடவுள் புரமெரித் ததுவும்
விடமிடற் றிடை செறித்ததும்
வேலுடைக் கடவுள் சூரனைச் சமரில்
வென்றதும் பொருது கொன்றதும்
அரிமலர்ப் பிரமனறுதலைக் குடுமி
யறுதலைக் குறை முளைத்ததும்
அன்று பஞ்சமிதன் மந்திரப் பெருமை
யன்றி வேறு வரமல்லவே. - 64
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
அல்லிக் கமல மடிபெயர வருகிற் குவளைக்
கழுத்தொடிய
வாம்பற் குழுவின் மடலுடைய வலையிற்
றுளைத்து கரையேறி
நெல்லிற் புகுந்து கொடிவள்ளை நெரியத் தவழ்ந்து
பணிலமணி
நிலவைப் பொழியுந் தமிழ்ப் பேரை நெடுமால்
பொருனைத் திருநாட்டின்
வல்லிக் கொடியே மடப்பிடியே வனசத் திருவே
யமுதுருவே
வயிரக் கொழுந்தே மரகதமே மயிலே யனையீர்
மழையருவி
கல்லிற் பொருத வரைச் சாரல் கடிகாவனைத்துந்
தொலைத்தன னென்
கையுந் தழையுமுகம் பார்த்துக் கருணை புரியக்
கடவீரே. - 65
வஞ்சித்துறை
வீர மாரனா
லார மாலை வேம்
நேர மாலை தா
நேர மாலை தா
பேரை மாயனே. - 66
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியத் தாழிசை
பேரை வளம்பதி மாலே பேதையை வந்தணை யாநா
ளீர நறுங்குழ லாரே பேதை நினைந்தினி நோவேன்
மார சரம்படு பூவோ வாரி விடும்பனி நீரோ
ஆர வடம்படு தூளோ வாவியை யுண்டது தானே. - 67
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
கார் காலம்
தான் குதிக்கு மந்தியுமீ றந்தி மாலைத்
தழல் குதிக்கு மெனத் துணையே தழுவுங்காலம்
தேன் குதிக்கு மிதழியும் பொன் சிதறுங் காலம்
திருந்திழையார் விழித்தாளஞ் சிந்துங் காலம்
நாங்குதிக்கு மொழுங் குதிக்கும் படியே வந்த
ஞானவரோ தயன்பேரை நகர்வாய் வட்ட
வான் குதிக்குங் காலமவர் மறந்த காலம். - 68
தரவு கொச்சகக் கலிப்பா
மறம் புரியுந் திகிரியுடன் வலம்புரியுந்தரித்து நமக்
கறம் புரியுங் குழைக்காத ரருட்டேரை யுயர் நகர் வாய்ப்
புறம் புரிய மணிப் புரிசைப் பொறி சுமக்குந் துகிற் கொடிக
ணிறம் புரியும் புயல் குளித்து நீணிலவிந் துவக்குமே. - 69
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
நீணி லாவெழும் பளிக்குமண் டபத்திடை
நின்றுதன் னிழற் கோலங்
காணி லாயிழை யொருத்தியென் றழைக்குமென்
கன்னியைத் தழுவாயோ
தூணி லாடக னுரம் பிளந் துயிருணத்
தோன்றிய நெடுமாலே
கேணுலாவிய தடம் பொழிற் பேரைவாழ்
திருந் தெழிற் குரியானே. - 70
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
உரிசை மாவுள வொழுகு தேனுள வுறைகொள் கூவலின் வாய்
விரியு நீருள பதியி னீரினி விடிய வேகுகவே
யரிவை வாடின ளிறைவ பேரையி லமர மால்வரைவா
யிரவி போனடி னொருவர் போகில ரெயினரோ கொடிதே. - 71
கட்டளைக் கலிப்பா
கொடியளந்த வசோதைகை மாறஞ்சிக்
குழை தொடுங் கைக்குழைக்காத ரேயும
தடியளந்த வுயிர் யாவும் வாழவன்
றாழிகொண்ட மரக்கால் பதித்துநீர்
படியளந்தது போதாம லன்னமும்
படைத்திருப்பது பாலனென்றோதலால்
மிடியளந்த வறிஞரைப் போலன்று
வெண்ணெய் தொட்டுண்ட தென்ன விநோதமே - 72
பன்னிரு கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
என்னைத் தனியே புதுநிலவுக் கிரையிட்டிருக்கக் கடவீரோ
எரிவாய் மடுக்கும் பணிவாடை யிளமைப் பயனு மடநாணுந்
தின்னக் கொடுத்து விடுவீரோ தீரா விடும்பை யிவை யனைத்துந்
தீர்க்கும்படியே செழுந்துளபத் திருத்தார் கொடுத்து விடுவீரோ
கன்னற் கனிவாய்ப் பாலொழுகக் கதலிக் குலைவா யமுதொழுகக்
கருங்காவியின் வாய்த் தேனொழுகக் கமலத்தவர் வாய்த் தாதொழுகச்
செந்நெற் குலைவாய்ப் பாலொழுகச் செழுந்தாண் மேதி புகுந்து முக்குந்
திரைநீர் பெருகு வயற்பேரைச் செல்வக் கருணைப் பெருமாளே. - 73
கட்டளைக் கலித்துறை
மாவாய்க் கிழிக்குங் குழைக்காதர் பேரை வளை கடனீர்
நாவாய் படைத்துப் பயனென் கொலோ நடுச் சொல்லறியாப்
பூவாய் குடைந்து செழுந்தா தளைந்து பொதிந்த தென்றற்
றீவாய் மறலி யெனவந் துலாவுமித் தென்றிசைக்கே - 74
எண்சீர்க் கழிநெடிலடி சந்தத் தாழிசை
தெற்குத் திசை நோக்கித்திரு வரங்கத்திடைத் துயில்மால்
தென்பேரையி லன்பாகிய செம்பொற்கிரி மடவீர்
அற்பத்தழை கண்டான்முலை யாளுக்கி டொணாதோ
அருமைப் பணி விடைபோதவு மடியேனுள நலனோ
கற்பித்தன செய்வேன்கடி காவிற்றழை கொய்வேன்
காமன்கையில் விலையோவிரு காதோலை யிலெழுதா
விற்கத்திரு வுளமோவெனை மேவத்திரு வுளமோ
வினையேனொரு பிழைநூறிது விண்ணப்ப முமக்கே. - 75
அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்
கேச வாமழை வள்ளலே கேழ லாயதிர் கொண்டலே
யீச னேதிகழ் பேரைவா யிறைவனேயென வெண்ணியே
நாச வாழ்வை முனிந்துநீர் நாரணா நமவென்றுவாய்
பேசு வீரறி கின்றதே பிறவி வேரரிகின்றதே. - 76
சித்து
ஐம்பத்து நான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
அரிபாளை நறவூறு முதுதாழை கொண்டல்
முடிசூடி வெளிகீறு சுடர்கால் குடைந்து
புனல்வேலி வலிஞாழல் கனிசூ ரலம்பு
முழுமூடு படமோதி வரைவா யிறங்கி
யழல்சீறி நிழல்மாறி மலைவேக வெம்பு
சுரமாறி நிரையாயர் நிலமே கடந்து
தத்திவீழ் பொருநை வந்தநாள்
அலையேறு புதுநீரி லெதிரேறி நின்று
வலைவாணர் புனல்சாய மணிவா லறைந்து\
கழைபாற விடுதோணி தடுமாற வுந்தி
வளர்யானை கொடுபோன சுழியூடலம்பி
யகிலார மணநாறு வெகுசே றளைந்து
முடிகூடு நரைபோலு நுரைமாலை சிந்த
முத்த வால்வளை கறங்கவே
மருவீதி மலராடை புனைமார் பணிந்து
துறைதோறு மருகோடி விளையாடி யங்க
ணலையாத கயமூழ்கி யணைகோடு கண்டு
மதகோடு மடைதாழ வினைமேலெழுந்து
வயலாமை கொழுமேழி முகவாய் முறிந்து
கடுமேதி தடுமாற வுளவான் மலங்க
வெக்கர் பாய்மணல் மருங்குறா
மடவாழை குலைசாய நிலைசூழ் கரும்பு
புடை போல வளர்பூக முடல்கூன மந்தி
தளை மீறி யுமிழ்தேனின் மறுகா றதும்ப
மடநாரை பெடையோடு மலர்மே லொதுங்க
வரிவாளை குதிபாயும் வளநா டுகந்த
நெடுமாய னருள்பேரை நகர் வாழ் வுகந்த
சித்தரேமடி பணிந்து கேள்
திருமாது பிரியாத மடமாது செம் பொன்
றுருவான தொருவேரி லதுமா லறிந்த
வொருமூலி தடவாமு னரனார் பசும்பொன்
னிறமான பிரமாண மறைநூலி லுண்டு
சிலையான வடமேரு வரனா ருகந்த
துரையாணி யொருகோடி யிழையாத செம்பொன்
வைத்த தார்பெருமை யும்பரூர்
சிறுகாலை நிறமான கனகாதி யெங்கள்
குருநாதர் பரிவான மதிபார முண்டு
மதராஜ னுபதேச மொருபூ மருந்து
மடமாத குறவோடு விளைபா டகங்கள்
திரைதாவு கடலூடு படுதீவி லொன்று
பெயரீழ நவகோடி மணிசாடு கின்ற
வித்தையோ புதுமை யின்று நீ
சருவாம லொருபூத ரணுகாம லஞ்சு
தலைவாச லடைதாழி டருகே யிருந்து
குகைமூடு யுமிபோடு கரிபோடு செம்பி
லரிதார மிடுதார முதலா மிரும்பு
தனிலூத விடிவேறு தவறாது செம்பொ
னதுவார முடனோது முபதேச மந்த்ரம்
அப்பனே அமுது கொண்டுவா.
தலைவாழை யிலைமீது படைகோழி கொன்று
பொரிகாடை கதுவாலி மிளகான நன்று
சருகாமை கொடுனாவென் றுயிர்கா னுடும்புசாளை
கயல்தேளி சிறுசாளை பொடிபாதி நண்டு
தயிர்மாறி பருமாறு திரன்பால் சொரிந்து
பணியார வகைபோடு நளபாக முண்ட
தப்படா களப சந்தமே. - 77
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
சந்தனக் காவில் வந்துநிற் பீ்ர்தம் டங்குளித் தாசலாடுவீர்
பந்தடித் தானும் மருங்குபற் றாது பண்பலக காணுமாதரே
தெந்திருப் பேரை வண்குழைகா காதர் திண்கிரிச் சாரல்மீதிலே*
மைந்தரைச் சீறி யுங்கள் நீட்டுர வஞ்சகக்காவி தாவுமே* - 78
மடக்கு-கட்டளைக் கலிப்பா
தாவு யுண்ப துறிமுகப் பாலையே
சயன போகத் தலமுகப் பாலையே
தேவி யென்பது பங்கயத் தாளையே
தேவர் கோன்விரும் பங்கையத்தாளையே
யாவு மாய்வந் துதிப்பது மாயனே
யென்று பன்னித் துதிப்பது மாயனே.
நாவி லோதுவ துன்றிருப் பேரையே
நான் வணங்குவ துன்றிருப் பேரையே. - 79
வஞ்சி விருத்தம்
பேரி யம்பிலன் பேரைமால்
வேரி யம்புனல் வெற்பில் வேள்
காரி யம்பறை கண்கள் வேல்
வாரி யம்பெனன் மாறுமே. - 80
பதினான்கு சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
மானுடன் பிறந்து கலையுடன் வளர்ந்து
மதியுடம் பழுக்கறத் துடைத்து
வள்ளையுங் குமிழுங் குமுதமும் பதித்து
மாசறக் கடைந்தவேல் கிடத்திக்
கூனுடன் கிடந்த தடஞ்சிலை தொடுத்துக்
கொடுங் கொலைத் திலதமிட் டெழுதிக்
குருகுலப் பிரமன் பெருமையிற் படைத்த
குளிர்முகத் திருவை நீ தருவாய்
கானகம் புகுந்து வீராதனை வதைத்துக்
கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பனகை
கரியமூக் கரிந்து கரனுக்குயிர் குடித்துக்
கருங்கடல் வழிபடக் கடந்து
போனது மரக்கன் புகுந்தது முடிவிற்
புரந்தரன் பெருந்தவ மெனமுன்
பொருதவா மகரக் குழையனே கருணைப்
புனல்வளம் பொழிந்தகார் முகிலே. - 81
அம்மானை - கலித்தாழிசை
காரையூர் வண்ணர் குழைக் காதர்சிலைப் போர் விசயன்
தேரையூர் மாலாய்த் திரிந்தனர்கா ணம்மானை
பேரையூ ரென்றிவர்தாம் பேசுவதே னம்மானை
பின்னைமால் கொண்டிருந்தாற் பேசாரோ வம்மானை - 82
கைக்கிளை மருட்பா
அம்மா னகையு மடுகின்ற மால்பேரை
யெம்மாவி கொண்ட திவணகையே - பெம்மான்
வரிசிலை வடவரை வளைத்த பின்றைத்
திரிபுரஞ் செற்றதுந் திருமுன் னகையே - 83
நேரிசை வெண்பா
நகைத்தா மரைபுரைதாள் நாயகனார் பேரை
யகத்தா மரையமுதே மன்னாள்--முதத்தழகு
தான் பிடித்த செல்வம் தாம் பிடிக்க மாட்டாமல்
வான் பிடித்த தன்றோ மதி - 84
ஒன்பதின்சீர் வண்ண விருத்தம்
மதிக்கும்பெரு மாள்மதி வார்சடை
முடிக்கும்பெரு மாளய னாரிரு
வருக்கும்பெரு மானெனு மாமறைநூல்
துதிக்கும்பெரு மானெளி யோர்பிழை
பொறுக்கும்பெரு மாளடி யார்வினை
தொலைக்கும்பெரு மாள்வரு பேரையிலே
குதிக்குங்கயல் போல்விழி யீரினி
யிறக்குங்குழை யார்முனம் வார்மனங்
கொதிக்கும்பத மானது தானறியீர்
அதிக்கும்பசி யென்னது தூதையில்
வடிக்குஞ்சிறு சோறிடு மாறிடும்
அறத்தின்பய னாவது தானிதுவே - 85
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
வேயிருந் திசைத்த செவ்வாய் விண்ணொடு பிறந்த மேகம்
பேயிருந் தலறக் கொங்கை பிசைந்துண்ட பேரை மாயர்
தூயபைந் துளப நாறுந் துணையடிக் கமலப் பூவே
மாயவெம் பிறவி நோய்க்கு வாகட மருந்து தானே. - 86
மதங்கியார் - எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
மருதொடித்து நெடியசாடு மடிபடத் தவழ்ந்த மால்
வழுதிநாடு பாடியாடி வந்தமா மதங்கியார்
முருகெழக் கிடந்தலைந்து முகிலுலாவு மளகமும்
முனிவருக்கு மயலளித்த முகிழ்நகை ப்ரதாபமும்
இருகவட்டு முலைமுகத்தி லெழுதிவிட்ட தொய்யிலும்
இளைஞரைத் தொடர்ந்துகொல்லு மின்பவே லிரண்டுமற்
றொருபிறைக் கொழுந்திலன்னை ஓதியிட்ட திலகமும்
உயிர்பறிக்கு மியமனுக்கு பாயவித்தை காணுமே. - 87
மேற்படி விருத்தம்
மேலிருக்கு மதிக்குழவி முடித்தார் போற்ற
வீற்றிருக்குங் குழைக்ககாதர் விமலர் நாட்டிற்
சேலிருக்கும் விழியணங்கே நின்னை யல்லாற்
றெய்வ மாமகளிரையும் தீண்டு வேனோ
மாலிருக்கு மின்பதுன்ப மறிந்தா ரந்தோ
மணிவயிரங் குன்றவெள்ளி வள்ளத் துள்ளே
பாலிருக்க முகஞ்சுளிப்பப் பருவாய் கைப்பப்
படுகொலைசூழ் நஞ்சையள்ளிப் பருகுவாரே. - 88
பருந்தாட் கொடியதென் றோகுழைக் காதர் பதிப்புரிசைப்
பெருந்தாட் கொடியை யணங்கே தண்சாரற் பிடியணங்கு
மிருந்தாட் கொடிய கடாயானை போலு மிறைவர் தம்மைக்
கருந்தாட் கொடியிற் றுவக்குநும் மூரிக் கழைக்குறவே சுரம் போக்கு - 89
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
கழைக்காவ லானதழல் கொதித்தேறு பாலைவழி
கழித்தோமிராமல் மயிலே
தழைக்காவ லார்கமல மலர்த்தாளு றாமலொரு
சரத்தூர மேகி லுளவே
குழைக்காதர் நாடுமவர் திருப்பேரை யூருமணி
கொழித்தேரு வாவி களுநீள்
மழைக்கா ருலாவும் வரி மணற்சூழல் வாவுமிள
மரச்சோலை நீழல் களுமே. - 90
எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
மேதி பாசடைக் குவளை தின்றுவாய்
வேரி பாய்புனற் பேரை மாயனே
தீது போகவும் பிறவி போகவுந்
தேவ ரேதொழுஞ் செல்வ மானதாள்
ஓதி மாதராற் கயிற்றி லிட்டதால்
உரல்பி ணிக்கவுஞ் சகடு தைக்கவும்
தூது போகவுங் கடவ தோவெனாத்
தொழுது மாமறைச் சுருதி பாடுமே - 91
நேரிசை வெண்பா
பாடு குரலறியாப் பைங்கிளியே செந்தினையின்
காடு பூங்காலறியாக் காவலார் - நீடசுரர்
வேரரிந்த மால்பேரை வெற்பிற் சிலகுறவ
ராரரிந்த வாரறியா ரோ. - 92
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
அறிவிருந்த சிறுமதலைக் கிர்ணியனா ரடர்த்தநாள்
வெடித்த தூணிற்
பிறிவிருந்த தேவகிபாற் கருவிருந்த திருவயிறும்
பிரிந்த வன்றே
செறிதரங்க நிறைபொருநைத் திருப்பேரை
வளநகருஞ் சேடன் மீதி
லெறிதரங்கப் பாற்கடலு மென்னெஞ்சு மவர்க்கலா
திடம தாமே. - 93
எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்.
ககனர்முக் கணர்காண மதலையைச் சலியாது
தலையறுத துடல்வேறு கறிசமைத் தவள் பாவியோ
விகடமிட் டொருதேவி தசரதற் கினிதான
மகன்வனத் திடையேக விளைய வைத் தவள் பாவியோ
மகனெனக் கருதாம னிலவிலிட் டிளவாடை
வளையவிட் டநியாய மதனைவிட் டவள் பாவியோ
பகருமுத் தமிழ்ஞான கருணைபெற் றவர்பேரை
மடநடைப் பெடைநாரை பதிலினிச் சொலவேணுமே. - 94
பாண் - மேற்படி விருத்தம்
மேருவைப் பிளந்தெடுத்து வேறுகூறு செய்தபோல்
வெஞ்சினத்தி லிரண்யன்றன் மேனியைப் பிளந்து பேர்
கூருகிர்தி தடக்கை கொண்டு கூறு செய்த பேரைமால்
குரைகழற் புகழ்ந்துபாடல் கொண்டு பெற்ற வரிசையோ
மூரியற்ற விறலியர்க்கு முன்னடைந்து செல்கையால்
மொய்வினைத் துதிக்கை கொண்டு மூடிகளைச் சரிக்கையால்
பாரியற்கை கொண்டழிந்து பலகடம் பெருக்கையால்
பரிசில் பெற்ற யானைநீதி பாணருக்கு மொக்குமே. - 95
பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
பாண்வாய் மிழற்றுஞ் சுரும்பின் தொடரவிரி
பங்கயத் தாதிறைத்தும்
பனிமலர்க் குவளையஞ் சேயிதழ் சுரக்கும்
பசுந்துளித் தேனை மாந்திச்
கேண்வாய் தொடுத்தமதி வண்டுளியி னிற்சிதறு
மல்லிகை யவிழ்த்தும் வாகச்
செம்பொற்றகட்டுக் கருந்தாழை மடலிற்
செறித்த பொற் சுண்ணமாடித்
தூண்வாய் சுமக்கும் பளிக்கறைப் பத்திச்
சுவர்ப்புறத் திடைகு யிற்றுஞ்
சுடர்மணிச் சாளரக் கண்வழி நுழைந்துபைந்
துளவைப் பெறாத மடவார்
நாண்வாய் கிழித்துவேள் சிறுநா ணிறுக்கிட
நடக்குஞ் செழுந்தென் றல்பார்
ஞானபுங் கவவிறைவ பேரையம் பதிமுதல்வ
நந்தா வளக் கொண்டலே. - 96
நேரிசை வெண்பா
நந்தா வளம்பிறந்த நம் பேரை மால்பவனி
வந்தார் வளம்பிறந்த வார்த்தைக்கே - செந்தழல்போல்
வண்ணமா யங்குதித்த மாமதிகண் டென்பசலைக்
கென்னமா யங்குதித்த தே. - 97
எழுசீர்ச் சந்த விருத்தம்
குதிக்குங்கவுள் மதத்தண்டுளி மழைக்குஞ்சர மழைக்கும் புயல்
கொழிக்குந்தமிழ் வளர்பே ரையிலே
மதிக்கும்பொருள் மிகப் பெண்டுகள் வெறுக்குங்குடி தழைக்கும்படி
வளர்க்குந்திரு மடமா மயிலே
வறிக்கும்படி படிக்குஞ்சிறி தனிச்சங்களும் பணிப்பஞ்சிலும்
வெறுக்கும்பத முனதா கையினால்
உதிக்குங்கதிர் வெறுக்கும்பால் கொதிக்குஞ்சுடர் நடக்குந்தொறு
முறைக்கும்பொழு துயிர்வா டுவையே. - 98
இருபத்தைந்தடி நேரிசை யாசிரியப்பா
வாடைவந் தியங்கப் பீடைகொண் டுளதே
தென்றலங் கன்று மென்றுதின் றுமிழ்ந்து
கோதுபட வாருயிர்க் குறையையுஞ் சுழித்துக்
குழித்துவிரல் குழைத்துச் சுழித்தமணற் கூடலும்
அள்ளி யிட்ட புள்ளியம் பசலையும்
துயிற்சுவை யறியாப் பயிர்ப்புறு தடங்களும்
மறவா வன்புந் துறவா வுள்ளமும்
அன்னப் பேடும் புன்னையங் காவும்
துணைபட விரிந்து துயர்படுங் காலத்தும்
பழுதிலா துயர்ந்த வழுதிநாட் டெவையும்
யாரையுந் தமிழ்ப் பேரயும் புரக்க
வளநகர் வார்குழைச் சிகரபூ தரத்தோன்
தெய்வ நாயக னைவர்தேர்ப் பாகன்
மலைமால் வரைத்தல மலைச்சா ரலின்கண்
மணங்கொள் பூங்கொடி யணங்குதண் பொதும்பரிற்
சிறந்த காட்சியிற் பிறந்ததண் ணளிபோற்
கைதொட்டுத் தலைவர் மெய்தொட்டூப் பியின்று
பணைமுலைக் குரும்பை பிணைமலைப் புயத்தின்
ஊடுறப் பொருது பாடுறக் கிடப்ப
வரிவளைத் தழும்பு மார்பிடத் தழுந்தப்
பரிபுரச் சில்லொலி பல்கல னொலிப்பப்
புலவியுங் கலவியும் பொருந்திநற் சீருள்
நலமிகு பெருஞ்சுவை நமக்கினி தளிக்கச்
சிறுதுயிற் கனவுதந் தருளு
மகர நெடுங்குழை வாழிவா ழியவே. - 99
நேரிசை வெண்பா
வாழிபுகழ்ப் பேரை மகரக் குழைவாழி
வாழிதமிழ் நூற்றெட்டு மாமறையோர் -வாழியவே
தேக்கும் பதகமலந் தீர்த்தெனது சிந்தையுள்ளே
பூக்கும் பதகமலப் பூ. - 100
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பதித்தநவ ரத்னமணி மோலி வாழி
பங்கயப்பூந் திருமுகச்செம் பவளம் வாழி
கதித்தசீர் நெற்றியில்வெண் டிருமண் காப்பு
கத்தூரித் திலகமிரு கண்கள்
துதித்தநறும் பசுந்துபைத் தோள்கள் வாழி
சுரிமுகச்சங் காழிவான் கதைவில் வாழி
மதித்தபீ தாம்பரஞ்சேர் அரைநூல் வாழி
மகரநெடுங் குழைக்காதர் வாழி வாழி. - 101
முற்றும்.
- குழைக்காதர் கலம்பகம்
காப்பு- எடுத்துக் கொண்ட நூல் இனிது முடியும் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகிறார். காக்க-காவலாக இருக்கட்டும். வியங்கோள் வினைமுற்று. பராங்குசக் களிறு காக்க! பவம்-பிறப்பு, விலங்கறுத்த-பற்று நீக்கின, புள்ளின் பாகன்-கருடனை ஊர்ந்து செல்வோன். தொடர்ந்து பற்றி- பற்றித் தொடர்ந்து; கவி பொழியும்-கவிதையை மிகுதியாகச் செய்யும். பராங்குசன்-நம்மாழ்வார், தான், ஏ-அசை, பிற சமயங்களாகிற யானைகளுக்கு அங்குசம் போன்றவன். ஆழ்வாரை யானையென்று உவமித்ததற்கேற்ப, கவிமதம் பொழியும் என்றும், அவையடக்கம்; புரந்து காவல் செய்து
வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு:
குளிப்ப- வணங்க, புனல்-நீர்; வியன்-இடமகன்ற,கெழுமி-நெருங்கி, ஒலக்கம்-கோஷ்டி.
தாழிசை;
அளை-வெண்ணெய், சூது பிடித்து-களவைக் கண்டுபிடித்து;
பெருவிருந்தாய்-பெறுதற்கரிய விருந்து (அவதாரம்) மதலை-பிரகலாதன்; அவுணன்-இரணியன்.
விசும்பு-ஆகாயம், தரு-நீ படைத்த, செலு-செதிள் (மீன் உறுப்பு)
அராகம்:
பைரவி-காளி, அலகை-பேய்ச்சி (பூதனை) பிடி என- "பிடி" என்று சொல்லு முன்; பரிபவம்-அவமானம், பருவரை-மலை போன்ற இராவணன், அறு சமயம்-வைணவம், சைவம், சௌரம், சாக்தம், கௌமாரம். காணாபத்யம், முதுசதுமறைபட-பழைய நான்கு வேதங்களோடு பொருந்த.
அம்போதரங்கம்:
பூவடியில் - தாமரை போன்ற அடிகளில்.
சுரிதகம்:
அரும்பவீழ் - மொட்டு விரிந்த, சுரும்பு - வண்டு, அவிழ்- மலர்த்தும்; வார் குழை- நீண்ட குழையணிந்த காது, செவ்வி - அழகு, ஒருமுகத்து - ஒரு சேரக்காட்டி, பொலங்கொடி- அழகிய கொடி, மகளிரில் - பெண்கள் போன்று, கவிப்ப - கவிப்பார்கள். (ஒரு குடைக்கீழ் ஆள்பவர்கள்) மாகம் - விண்ணுலகு.
2. மா கவலை-மிகுந்த கவலை, கொன்புரக்கும் - பெருமையுடன் காக்கும், நேமி - சக்கரம், உரக்கும்-திடம் பெறும்.
3. ஒருகைமுகக்குஞ்சரம் - முகத்தில் துதிக்கையுடைய ஒப்பற்ற யானை (கஜேந்திரன்), காதருகை முசக்கும் அயல்விழி - காதளவோடிய வேல் போன்ற கண், மான்- மான் போன்ற விழியுடைய என் மகள், முருகு- மணம், முகத்தல் - மோந்து பார்த்தல், சருகு - வாடல், மொய் குழல் - நெருங்கிய கூந்தலையுடைய பெண், என்றும் - என்று சொல்லுவாள், உண்ணாவிதழைக்கும் என்றே இருக்கு - உயிர் மட்டும் இருக்கிறது என்று சொல்லும்படி தளர்வுற்றிருக்கிறாள்.
4. மதியம்: பரிதியென்றுதிக்கும் - சந்திரன் சூரியன் போன்று சுடுகின்ற கிரணங்களோடு உதிக்கும், களப லேபனம் - சந்தனப் பூச்சு, கொடுவினை விளைந்தகாலம் - போதாத காலம், கழைக்குலம் தடிந்து - மூங்கில் கூட்டத்தை ஒடித்து, சந்தனம் திமிர்ந்து - சந்தான மரத்தை முறித்து, காழகில் குழாம் - வயிரம் கொண்ட அகில் மரத்தொகுதி, கரிமுக மருப்பு - யானைக் கொம்பு, தரளம் - முத்து சுரம் - பாலைவனம், கடை நிலம் - நெய்தல்.
5. தவசரியை - தவம், சரியை: விகடபகடு - நகைக்கிடமான மதயானை, கபடனை - வஞ்சகனை, மதகளிறு - ஐராவதம், நறை - வாசனை, திவலை - துளி, முகில்வண - முகில்வண்ணனே.
6. மறைமுடி-உபநிடதம், உற-பொருந்த, வெற்பன்- குறிஞ்சி நிலத்தலைவன், வேயின் முத்தம்-மூங்கிலில் உள்ள முத்து; சிவபெருமான்; பிணை-மான், மிடறு-கழுத்து, மாகறை முடித்த மிடறு-நீலகண்டம் கரகபாலம்-கையில் தலை யோடு.
7. ஆகம்-மார்பு, ஆடகன்-இரணியன், கொண்டல்- மேகம் போன்ற நிறமுடைய திருமால், கோகிலம்- குயில், அன்பர் குறை-தலைவர் குற்றம்.
8. குறைக்கொழுந்தாய்-குறைந்த கலைகளோடு கொழுந்து போன்று, தாரை-கிரணங்கள், பிறைக் கொழுந்து ஆர்-சந்திரமண்டலம் தொடும், தம்பி- இலக்குவன்.
9. ஏனம்-வராகம்.
10. வாரணம்-யானை, மாலை-துளவ மாலை ஆரணம், வேதம்.
11. ஊழி வேல் விழும் கங்குல்-யுகமாக வேரூன்றிவிட்ட இரவு, உடுபதி-சந்திரன், அழல்-வெப்பம், மண் கூறு கொண்டது - மண்ணைக் கொண்டு அடைத்தது ஒப்பு: "கோழி வாய் மண் கூறு கொண்டதோ!"
12. ஏடு-புற இதழ், கண்ணி-துளவ மாலை, மகரக்குழை-மகர தோரணம்..
13. குழல்-புல்லாங்குழல், கழை - மூங்கில், பால் இசை- பால் போல இனிய கீதம், கூடல் இழைத்தல்- பிரிந்த தலைவி மணலில் கோடு இழைத்துத வருவனா என்று குறி பார்த்தல், சூள்- சபதம்; வருவதாக ஆணையிட்ட சொல்.
14. பின்னை-நப்பின்னை, பெருமித்தமிழ்முறை கொழித்து அறிபேரை-தமிழை முறையாகக் கற்று
அதன் பெருமையை ஆராய்ந்து அறிந்த தென் திருப் பேரை, கபாலம் நீவி-தாழ்ப்பாளைத் திறந்து
15. மிச்சில்-உண்ட மிச்சம், சரோருகம்-தாமரை.
16. அளவு அறியாப் புனல்-ஆழம் தெரியாத வெள்ளம், விளவு அறியாப் பேதை-வாய் விட்டுச் சொல்லத் தெரியாத இளம்பெண், மயல் வெள்ளம் -காதல் வெள்ளம்.
17. வாளைப் பகடு-ஆண் வாளை மீன், பிரகு-வேறு உபாயம்.
18. மறு-குற்றம், மரபு-ஆன்றோர் ஒழுக்கம்.
19. வாழி-அசை, குடைந்த முத்து-முத்தைக் குடைந்து செய்த, மருங்குல்-இடை, சூழி-நெற்றிப் பட்டம், துவக்கி-கட்டி, மேழி-கலப்பை, ஆழிவலம்புரி- சக்கரம், சங்கு.
20. கழல் ஆடிலாள்- கழற்காய் விளையாடவில்லை. சுனை ஆடிலாள்-நீராடவில்லை, கடை போடிலாள்- மேகலை அணியவில்லை, பீடு-பெருமை.
21. வீண் மொழி கொள்- வீம் வார்த்தை பேசுகின்ற, ஆராத-திருப்தி அடையாத, பேரேசர்-தென் திருப்பேரைக் கடவுள்.
22. செங்கனிக் கோவை வாய்-கோவைப் பழம் போல் சிவந்த வாய்.
23. அயராமல்-மறவாமல், பிறங்கலமின்னே-மலையிலுள்ள பெண்ணே, தாரை-முனை, குழல் காரை- கார் போன்ற கூந்தல்.
24. படாம்-துணி, குழை பிடித்து-குழையணிந்த காதை பிடித்து.
25. மாரன்-மன்மதன், கா-சோலை, செற்றார்- பகைவன், தீ வெடிப்ப வெடிக்குமோ-தீத் தோன்றுவது போலத் துளவ மலர்கள் சிவந்து தோன்றும்.
26. வெடித்து - வெடிப்புகள் தோன்றி, பாலைக்கப் பாலை - பாலை நிலத்துக்கப்பாற்பட்ட, அந்தணீர் - முக்கோல் பகவர்களே, செம்பஞ்சு - மருதோன்றி பூசிய சிவந்த நிறம், அனிச்ச மலர் - மென்மையான ஒரு வகைப் பூ, தடித்துச் சிவந்தது - வீங்கிச் சிவந்து போயின, மடந்தை - என் மகள். முக்கோல் பகவரை வழிவினாதல் என்னும் அகப்பொருள் துறை.
27. மறம்: இது கலம்பகத்தின் ஒரு துறை. மணம் பேசத் தூது வந்தவனை மறவர்தம் குலப் பெருமை சொல்லி மகட்கொடை மறுத்தல். அரிட்குறு - அருளைப் பெற்ற, தையலை - பெண்ணை, சருகு - ஓலை, வேள் - முருகன், வேல்பட - வேலாயுதமும் தோற்க, வினையொத்த - போர்த் தொழிலைச் செய்த, நாகொடுத்த படை பாடெடுத்த நிலை - நாள் முழுவதும் எடுத்த ஆயுதத்தைப் பக்கத்தில் வைத்து விடுவதில்லை. நாணயப்பிழை - நா நயப் பிழை; பேசுந்திறமையிலுள்ள பிழை. நரபதித் தலைவர் - தலைமை பெற்ற அரசர்கள், நமனெதிர்த்து வருமாயினும் - எதிரி எமனேயாயினும், மனு வரம்பு - மனித ஜாதியின் வரம்பு, மற வரம்பு - வீர மறவர் குலத்தின் ஒழுங்கு.
28. இல்லத்தடங்கா - வீட்டினுள்ளே தங்கியிராத, பசிக்கென்று - பசி என்று, ஒன்று - ஒரு பொருளும், சொல்லத் தொலையா - சொல்லி முடிவு காணாத, எழு பிறப்பு - எழுவகைக் கதி, துடைக்கும் - நீக்கும், தாள் அளக்கும் - தாள்களால் அளந்து கொண்ட, புவி மருங்கில் - பூமியின் எல்லாப் புறங்களிலும், கொதியார் - கோபிக்கமாட்டார். மதன்படை - மன்மதன் படைக்கலங்கள், குழலிசை - வேய்ங்குழல் ஓசை, அளித்து - தலையளி செய்து, அயர்த்துக் கொடுத்த - மறந்து பிரிவுக்குச் சம்மதித்த.
29. சம்பிரதம் - ஜால வித்தை, கடலடங்கலுழிதொறு சிறங்காக புனல் கடுகிலும் புகுதும் - கடல் நீர் முழுவதும் ஒரு கைக்குள் அடக்குவோம்; கடுகிலும் புகுவோம் என்றும், கடல் எல்லாவற்றிலும் ஒரு கை தண்ணீர் மொண்டு விரைந்து வந்திடுவோம் என்றும் பொருள் கொள்க. வடமேருவும் ஊசிவேருடன் இடது புறமும், வலது புறமும் சுழலும்படி செய்வோம் என்றும் ஊசிவேரைக் கொண்டு வடமேருவை இடது புறமும் வலது புறமும் சுற்றிச் செல்வோம் என்றும் பொருள் கொள்க. பரவையுலகு - கடல் சூழ்ந்த உலகம், பகலிரவு கொண்டதும் - பகலை இரவாக்கியதும்.
30.சோவியர் - இடைப் பெண்கள், அடிக்குங் கை மானோ - அடிப்பதற்குக் கையில் எடுத்த கோலோ, காது பிடிக்கும் - தோப்புக்கரணம் போடுவதற்கு இரு கைகளால் காதுகளை மாற்றிப் பிடிக்கும், கைம்மாறு - உதவி.
31.தருவிட - விடத்தைத் தருகின்ற
32. உறைக் கோடும் வாள் - உறையில் விரைந்து புகும்வாள், ஒரு கொம்பிறந்து - கொம்பு வெட்டப்பெற்று, குறைக் கோடு - கோடு, உழல் குஞ்சரம் - திரிகின்ற யானை, துறைக்கோடு - நீர்த் துறையில் கிடந்த சங்கு, தென்னர் - பாண்டியர், பண்டைச் சிறைக்கோடு மேகம் - பாண்டியர் சிறை வைத்த மேகம், பாண்டியர் மேகங்களைச் சிறையிலிட்ட திருவிளையாடல், பிறைக்கோடு - பிறை போலும் கொம்பு.
33. அறந்தானுற உரைத்தருள்வீர் - இப்பறவொழுங்கைப் பொருந்த எடுத்துரைப்பீர்.
34. அழைத்துரையும் - பொருந்தச் சொல்லுங்கள், பெண் மதி - பெண்ணின் பேதைமை, பேதை நாட்டு - பேதைமையுடைய என்னுடைய நாட்டிலுள்ள.
35. நிழல் பிழிந்து பருகவென்று நினையும் அசுர மருதம் -நிழலிலே* உயிரைப் பிழிந்து குடிக்க வேண்டுமென்று நினைத்த அசுரர்களாகிய மருத மரங்கள், குரிசில் - சிறந்தவன், அழல் பிழிந்த வேலர் - நெருப்பைக் கக்குகின்ற வேலையுடையவர், ஆணை - சூள், சபதம் அந்த வாய்மை - தவறாத அந்தச் சொல்.
36. மையுண்டு - மை தீட்டப் பெற்று, அறிவுண்டு - மதியை மயக்கி, ஆவியுண்டு - உயிரைக் குடித்து; காவி - நீலோத்பல மலர் போன்ற கண்கள், தாமரைக்கே - தாமரை போன்ற முகத்தில், வளர்ந்த - நீண்டகாலம் தங்கிய, வாவி - குளம், பூவை - பூவிலுள்ள மதுவை, கால் கிளர்ந்த - சென்ற.
37. புறத்து - அருகில், வள்ளைத் தண்டு - வள்ளைத் தண்டு போன்ற காதுகள், வடித்து - பெருக்கி, உவட்டாத - தெவிட்டாத, உங்கள் பாலில் - உங்களிடத்தில்.
38. பிடித்தீர்தழை - வில்லையொழித்துக் கையில் தழையை வைத்திருக்கிறீர், கெடுத்தீர் கரி - யானையைத் தவறவிட்ட தாகக் கூறிக்கொள்கிறீர். பிணைத்தேடுவதேன் - ஆனால் ஏன் மானைத் தேடுகிறீர். அடித்தாமரை - தாமரை போன்ற மெல்லிய கால்கள் வருந்த, அடைத்தாளுவதோர் தொழு - அடைத்துக் காக்கின்ற தொழுவம், புனச் சார்பு - தினைப்புனம், தொடி - வளையலணிந்த.
39. அண்டர் - தேவர்கள், தொரும்பாக்கி - அடிமையாகி, அடவி - சோலை, அலர் - மலர், எழும் பாக்கியம் - பாக்கியம் கிட்டும், இந்து - சந்திரன், விட்டம் - அடிப்பாகம், சரணாரவிந்தம் - பாத தாமரைகள், பண்டு - முள்.
40. செய் - வயல், தொய்யில் - மங்கையர் மார்பில் சந்தனத்தால் போடும் கோலம், தொழிலுக்கு - என்னை வருத்தும் செயலுக்கு, அரும்பும் - தோன்றும், மதன் - மன்மதன், எய்தில் - எய்தால் (என்னைத் தழுவிக் கொண்டால்), கரும்பும் கணையும் இலை - எனை வருத்தும் படைகள் உங்களிடம் இல்லாது போகும், இறவாதிருப்பன் - பிழைத்துப் போவேன்.
41. இரும்பு - அங்குசம், துதிக்கை மடுத்து - யானைத் துதிக்கையில் மாட்டி, கோ மகளிர் - அரசகுலத்துப் பெண்கள், விரல் - விரலால், எதிர்த்தார் - பகைவர். சுரும்பு - வண்டு, வழிகறங்க - வழியில் சுழலும்படி, செவிப்படலம் - செவியின் பரப்பு, துங்கம் - சிறப்பு, பவனி - குழைக்காதர் வரும் வீதியுலா, விரசம் - காதல் துன்பம், தொழுதாள் - தொழுத தலைவி, முடப்பலவு - வளைந்த பலா, படலைக் குலை - பரந்த குலை, மடல் - பாளை, குரும்பை - இளநீர், வரால் - மீன்.
42. மத்த வேழம் - மதம் பிடித்த யானை, பதி - தலைவியின் ஊர், தாமரைப் பூ - இலக்குமி உறையுமிடம், கோனென்பார் - தலைவர்கள், கொம்பே - பெண்ணே, வம்பே - வீணாக,அல்ல - வேறொருவன், இல்லை - ஒன்றுமேயில்லை, கோட்டி - வார்த்தை,எதிருரைப்பார் - பதில் சொல்வார்.
43. நலம் - அழகு, முனிவாய் - கோபங் கொண்டு.
44. அமுதுர நினையீர் என்று கூட்டுக.* ஆனாத - அழியாத, கானார் - மானம் நிறைந்த, காமத்தின் பால் -காதலின் பகுதி, அறத்தின் பொருட்டு - இல்லறம் நடத்த விரும்பி, பொருட்பால் - பொருளைத் தேடி, திருக்குறளில் காமத்துப்பால் சிறிது, அறத்துப்பால் நடுத்தரம், பொருட்பால் மிகப் பெரிது.
45. சூல் - கருப்பம், மேல் வடிவு - பெரிய வடிவம், வினை தொலைக்கும் - அழிக்கும்.
46. தோடு - புற இதழ், ஐவர் - பஞ்ச பாண்டவர், சாடும் - சொரியும்.
47. கொண்டல் - மேகம், அண்டர் பூமி - தேவலோகம், நாமோ - நீங்களோ - முன்னிலைப் பொருளில் வந்த தன்மை.
48. மருந்தேறல் - மணம் பொருந்திய தேன், மால் - ஆசை, கதலிக்குருத்தே விசும்பளக்கும் பேரை - வாழைக் குருத்துக்களே ஆகாயத்தை எட்டிப் பிடிக்கிற - உயர்வு நவிற்சி அணி. கடிதாய் - விரைவாய், அன்பர் -தலைவர்.
49. பாயல் - படுக்கை, மகிழ்ந்த - விரும்பின, திருப்பேரையை மகிழ்ந்து பாற்கடலை விட்டு வந்தார் என்று பொருள் கொள்க. கசப்பாக - கசப்பாக்கி, பாகு - தேன்பாகு, ஆவியிலிருந்து - உயிர் வாழ்ந்து, சஞ்சரித்து - நடந்து - திரிந்து, விரிஞ்சன் - பிரமன், விரிஞ்சனும் படைத்தான்.
50. விதிக்கும் தொழில் - பிரமன் படைத்த செய்கையியினால், வெவ்வேறுபல - வேறுவேறானபல, கோலம் -வேடம், ஒருவனே பல கோலங்களில் நடிக்கிறான், அதுபோல ஒரு உயிர் பல உடல்களில் பிறக்கிறது, எதிர்க்கும் -எதற்கும், யானை முதல் எறும் பீறாக, குதிக்கும் கலுழி - வெள்ளமாகப் பொங்கி வரும், சுவடு - கால், குறுங்கள் - சிறிய கள், வேட்டு - விரும்பிதெவ் - பகைவர், மத்தகம் - யானைத் தலை, பனை - பெருத்த.
51. தொண்டன் - தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
52. வேள் - விருப்பம், சங்கம் - சங்கு வளையல், மாது - மாதர், அணி -வரிசை, வேள் - மன்மதன்.
53 . ஆடவர் - தலைவர்.
54. அயல் - அயலார், வெதுப்ப - சுட, வேள்போர் -மன்மதன் செய்யும் போர், மறலி - எமன், புடை -பக்கத்தில், கடல் வளை - கடல்சூழ்ந்த, புடவி - பூமியிலுள்ளார், முயங்கு -உடலிற் கலந்த, வெறி -மணம், பெறவிட்டது - தலைவி பெறத் தலைவன் அளித்தது, சுரும்பு - வண்டு, வெறுப்பிலதாகி -விருப்பங்கொண்டு.
55. தாரை -ஒழுங்குமுறை.
56. திவலை - தயிர்த்துளி, கதவுக்கடை - கதவின் அருகில், உயரத்து - உயர்ந்த இடத்திலுள்ள, மல்தொழில் பிடி - மற்போரில் செய்கின்ற பிடிகள், துரந்தன - செலுத்தின, களவிட்டு - வஞ்சகமாக வந்த, அலகை - பேய்ப்பெண் பூதனை, பணைவரை - பெருத்த மலை, படியில் - பூமியில், துடை - தொடை, கனகன் - இரணியன், உருள்பட - உருள, பகழி - அம்பு, கதிருட் புதை அத்தமனம் - சூரியன் மறைந்த அந்திப் பொழுது, நிழல் கெழுமிய - ஒளி நிறைந்த, திகிரி - சக்கரம், பருமச் சிகரம் - உயர்ந்த உச்சி, பலி - பிச்சை, பரிசில் - வெகுமதி, பருமத்து வலித்து - பெரிய மத்தை இழுத்து, விளம்பின -பறிமாறின, தெளி - குழம்பு, தொடை - மாலை, மிருகமதம் - மான் மதம், கத்தூரி, பொதுவியர் - இடைச்சியர், கமலத்தவள் - இலக்குமி, புளசம் - மயிர்க்கூச்செறிதல், புழை - துவாரம். வலம்புரி - சங்கு, எக்கர் -மணல், குருகையரதிபதி - நம்மாழ்வார். பரவுநெடுந்தகை - போற்றப்படும் பெரியோன், பரகதி - மோட்சம், முதலவன் - முதன்மையானவன், அளி - அழசிய.
57. புயங்க சேகரம் - அரவளிந்த, முயங்கு - பொருந்திய, நாடகி - நடிக்கின்ற பெண், காளி, புரிந்த வாய்மை -சொன்ன சொல், கெவுளி - பல்லி சொல், பொலாதல - நன்மை செய்யும் குறிதான், இருந்த மாநிலம் - வாழ்கின்ற ஊர், இணங்கவேயிசைந்து - சம்மதம் பொருந்தி, இலங்கிழாய் - விளங்கும் ஆபரணத்தையுடைய பெண்ணே, சேவகர் - வேலை செய்வோர், நாவலர் - புலவர், உயங்கி - வருந்தி, உடந்தையாய் - மனமிசைந்து, சிறங்கை - கைகொள்ளுமளவு, தூசு - கூட்டத் தலவர் ஐந்து பேர் - நன்கு விளங்கவில்லை, திருமால், சிவன், அயன், விநாயகன், முருகன் இவர்களைக் குறிக்கலாம். பசியால் அழுத குழந்தை வாய்மூடச் சிறங்கை கூழிடு; உறங்கக் கந்தை கொடு என்பது பொருள்,
58. கொற்றியரா - கலம்பகத்தின் உறுப்பு, வைணவ சின்னம் பூண்டு பிச்சைக்கு வருவோர்கள் மீது காதல் கொண்டு ஒரு காமுகன் கூறுவதாகச் சிலேடை பொருள்பட வருவது இச்செய்யுள். வயலகம் - வயலிடம், தாமம் - மாலை, தாமரையின் மாமணி - தாமரைக்காய் மாலை, அரும்பித்த - மலர்ந்த, நாமம் -திருமண் காப்பு, தாவடம் - முத்து மாலை, அரங்கு - நாடக மேடை, ஒற்றி - இசைந்து, மருங்கொற்றி - அருகேயிருந்து கவனித்து.
59. பூவணை - மலர்ப்படுக்கை, அமுதுரு - அமுதம் போன்ற வடிவம்.
60. உயிர் முடிக்கும் - உயிரை அழிக்கும், செவ்வந்தி - சிவந்த அந்தி மாலை, மயிர் முடி - கூந்தல், செவ்வந்தி - செவந்திப்பூ, மருந்துளதி - வாசனை பொருந்திய துளசி, மயல் - ஆசை.
61. பொருப்பின் - மலையிடத்தே, முயல் - சந்திரன் கறை, மதி - சந்திரன், முகவட்டம் - முகத்தில்பொட்டு, புயல் - மேகம், புளகிக்கில் - புளகித்தால், கூச்சமடைந்தால், அற்பஇடைவேரற்றுவிடும்; ஆகையால் திலகத்தை அழித்துவிடுவீர், அழகு - நல்லது.
62. நுவலவும் படுமோ - சொல்லும் தரமோ. மழை - கூந்தல், கடல் - கண், மலை - கொங்கை, கொடி -பெண் கொடி காட்சி யென்னும் துறை.
63. பொதும்பர் - சோலை, இதண் - பரண், அபிஷேகம் - முடிபோறாள், புனம் - திணைப்புனம், கறையேறுமே - மாசூல் கைக்குக் கிடைக்குமோ?
64. களி - குடியர் கள்ளைச் சிறப்பித்துக் கூறுவது, களியர் - குடிகாரர், நறவு - கள், இலச்சி யாகினி வலச்சி - பரவும் தெய்வம், பஞ்சமி - கள், மந்திரப் பெருமை - மந்திர சக்தி.
65. அல்லி - அகவிதழ், பணிலம் - சங்கு, மணி - முத்து, வனசம் - தாமரை.
66. ஆரம் - முத்து, வேம் - வெப்பந்தரும், நேர - எனக்குக் கிடைக்கும்படி.
67. மாரசரம் படு பூ - மன்மதன் அம்பாக விடுகின்ற பூ, ஆரவடம் - முத்துமாலை.
68. மந்தி - பெண் குரங்கு, இதழி - கொன்றை, தரளம் - முத்துப்போன்ற கண்ணீர், ஒழுங்கு - நியாயம், ஞான வரோதயன் - சிறந்த ஞானத்தால் அறியப் படுவோன்.
69. புரிசை - மதில், புயல் - மேகம், துவக்கும் - கட்டும்.
70. எழும் - செய்யும், பளிங்கு மண்டபம் - கண்ணாடி மண்டபம், நிழற்கோலம் - பிரதிபிம்பம், ஆயிழை ஒருத்தி - வேறு ஒரு பெண், ஆடகன் - இரணியன், உரம் - மார்பு, திருந்தெழில் - சிறந்த அழகு.
71. உரிசை - ருசி, உறை - கிணற்று விரிசுவராகிய உறை, கூவல் - கிணறு, பதியில் - ஊரில் தங்கி, எயினர் ஒருவர் போகிலர் - வேடர் ஒருவர் கூடப் போகவில்லை, ஓ!கொடிது - மிகவும் கஷ்டம்,
72. கொடியள் அந்த அசோதை - கொடுமை செய்து பிரசித்தி பெற்ற அசோதை , மாறு - விளார், பிரம்பு; குழைதொடும் - தோப்புக்கரணம் போடக் காதைப் பிடிக்கும், அடியளந்த - காலால் அளந்த, ஆழி - சக்கரம், அமரக்கால் - தெய்வத்தன்மை வாய்ந்த கால், படியளந்தது - பூமியை அளந்தது உணவு கொடுத்தது, பாலன் - காத்தற் கடவுள், மிடியளந்த - வறுமையிலே வளர்ந்த, தொட்டுண்டது - களவிலுண்டது,
73. வாய் மடுக்கும் - வாயிற் கொண்ட, இடும்பை - துன்பம், கனிவாய் - கனிந்து, செழுந்தாள் - பெருத்த கால்கள்
74. வளை - வளைந்த, நாவாய் - நாக்கையுடையவாய், தோணி, நடு - நடுவுநிலைமை.
75. எழுதா -எழுதி.
76. கேடில் - வராகம், அறிகின்றதே பேசுவீர்.
77. தாழை - தென்னை, ஞாழல் - குங்கும மரம், சூர் - மூங்கில், மூடு - மரம், சுரம் - பாலை நிலம், ஆயர் நிலம் - முல்லை, வலைவாணர் - நெய்தல் நில மக்கள், கழை - தோணியைத் தள்ளும் மூங்கில் கம்பு, உந்தி - தள்ளி, ஆரம் - சந்தனம், முடிகூடு - மயிர் முடியில் ஏற்படும், வால் வளை - வெள்ளிய சங்கு,கோடு - உச்சி, மேழி - கலப்பை, மேதி - எருமை, ஆன் - பசு, மலங்க - வருந்த, எக்கர் - மணல்மேடு, மறுகால் - நிறைந்த தண்ணீர் வடியுமிடம், உரையாளி - மாற்று அறிவிக்கும் ஆளி, உம்பரூர் - தேவ லோகம், சருவாமல் - திகைக்காமல். ஒரு பூதர் - ஒரு மனிதர், அஞ்சுதலை வாசல் - ஐம்பொறி, தாழிடு - தாழ்ப்பாள் போடு, குகை - பொன்னையுருக்குங் கூடு, அரிதாரம் -உருக்குவதற்குப் பொன்னுடன் கலக்கும் மருந்து, விடிவேறு - விடியும் பொழுது, வாரம் - பட்சம், அமுது - உணவு, தலைவாழையிலை - பெரிய வாழையிலை, என்னுயிர் - எனக்கு மிகுந்த விருப்பம், கயல், தேளி, சாளை - மீன்வகை, மாரி - மழைபோல, பணியாரம் - பட்சணம், அப்பு - பூசு, சந்தரம் - சந்தனம்.
78. தடம் - சுனை, மருங்கு - இடை, நீட்டுரம் -கொடுமை, காவி - கண்கள்.
79. உறிமுகப் பாலையே - உறியிலுள்ள பாலையே, சயன போகம் உகப்புத் தலம் - படுக்க இனிதாய் மகிழ்ச்சி தரும் இடம், ஆலையே - ஆலிலையையே, பங்கயத்தாளையே - தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமியையே, தேவர் கோன் அங்கை அத்தாளையே விரும்பும் என்று பொருள், ஆயனேயென்ற உதிப்பதும் - கண்ணனாக வந்து அவதரிப்பது. பன்னி - சொல்லி, மாயனே - மாயையுடையவனே, திருப்பேரையே - அழகிய திருநாமங்களையே; திருப்பேரையென்னும் ஊரையே.
80. இச்செய்யுள் கடைமடக்கு. வேரி - மணம், வேள் காரியம் பறை - மன்மதன் தொழிலைக் கூறும், வாரி - கடலை, மானுமே - நிகராகுமே.
81. மதி, வள்ளை, குமிழ், குமுதம், வேல், சிலை இவை முறையே முகம், காது, மூக்கு, வாய், கண், புருவம் இவற்றுக்கு உவமை. மான் - சந்திரன் களங்கம், கலை - சந்திரகலை, குருகுலம் - குருகுல வாசம் பண்ணி, திரு -இலக்குமி போன்ற மகள், வழிபட -வணங்கி வழிபட.
82. காரை ஊர் - மேகத்தில் பொருந்திய, வண்ணர் - நிறத்தை உடையவர். விசயன் - அருச்சுனன், தேரையூர்மால் - தேரை ஓட்டுகிற கண்ணன், தேரையூரிலுள்ள விஷ்ணு; பின்னை மால் - நப்பின்னைப் பிராட்டியிடம் காதல், மால் கொண்டிருந்தால் - அறிவு மயக்கம் கொண்டிருந்தால், பின்னைப் பேசாரோ - அதன் காரணமாகப் பேசமாட்டாரோ?
83. அம்மான் - மாமனாகிய கம்சம், நகையும் சுடுகின்ற -சிரிப்பையும் ஒழித்துக் கொன்ற, பேரை - பேரையில், இவள் தலைவி, ஆவியுண்டது - உயிர் கவர்ந்தது, பெம்மான் - சிவபெருமான், சிலை - வில்லாக, வடவரை - மகா மேருமலை, செற்றது - அழித்தது, முன் - முன்னே, தோன்றின, திருநகை - அழகிய சிரிப்பு.
84. நகை - ஒளி, புரையும் - ஒக்கும், பேரையகம் - பேரைத்தலம், தாமரையமுதம் - தாமரையில்
இருக்கும் இனிய இலக்குமி அன்னாள் - ஒபபானவள். பிடித்த - கொண்ட, தரம் பிடிக்க மாட்டாமல் -
அழகின் தன்மையறிந்து ஒப்பாக மாட்டாமல், வாள் பிடித்தது - வானத்தில் ஓடி ஒளிந்தது.
85. மதிக்கும் - எல்லோரும் பாராட்டும், மதிவார் சடை முடிக்கும் பெருமான் - சந்திரனை நீண்ட சடையிலே சூடும் சிவபெருமான், அயனார் - பிரமன், எனும் - என்று தலபுராணம் கூறும். மறைநூல் - வேதம். துதிக்கும் புகழைக் கூறும், தொலைக்கும் - தீர்க்கும், இறக்கும் குழை - நீண்டு தொங்கும் காதணி, கொதிக்கும் பதம் - மிகுந்த வெப்பம் தரும் நிலை, அதிக்கும் - அதிகரித்துக்கொண்டே வரும். தூதை - பானை சோறிடும், பசி மாறிடும்; அறத்தின் பயனாவது இது தான். அறம் - இல்லறம்.
86. வேயிருந்திசைத்த - புல்லாங்குழலை வைத்து ஊதின, விண்ணொடு - விண்ணில், மேகம் - மேகம் போன்றவன், பேய் - பூதனை, நாறும் - கமழும், துணை -இரண்டு, வாசடம் - வைத்திய நூல்.
87. மதங்கியார் - வாளைக் கையில் பிடித்துச் சுழற்றியிடுகின்ற பெண், சாடு - சகடு, வண்டி; மடிபட - இறந்து வீழ, முருகு - வாசனை, உலாவும் - போன்ற. ப்ரதாபம் - புகழ், இருவெட்டு - இரண்டாகப் பிரிந்த தொய்யில் - மகளிர் மார்பில் அணியும் சந்தனக் கோலம், பிறைக் கொழுந்து - சிறு பிறை போன்ற நெற்றி, திலகம் - பொட்டு, இயமனுக்கு உயிர் பறிக்கும் உபாய வித்தையென்று கூட்டுக.
88. மதிக்குழவி - பிறை, முடித்தார் - சிவபெருமான், மால் - விஷ்ணு, ஆசை; வயிரங்குன்ற - வயிரமும் ஒப்பாகாத, வள்ளம் - கிண்ணம், சுளிப்ப - கோண, கைப்ப-கசப்பாக. படுகொலைசூழ்-கொடுமையான கொலையைச் செய்கிற, அள்ளி-முகந்து.
89. புரிசை-மதில், அணங்கு-பெண், சுணங்கும்-வருந்தும், பிடி-பெண் யானை, கடா யானை -ஆண் யானை, இறைவர்-தலைவன், கொடியில் -பூங்கொடி போல, துவக்கும்-கட்டும், மூரிக்கழை -வலிய மூங்கில், கழைக்கு-கழையில்,. உறவே-பொருந்தும்படி, அணங்கே, நும் தாள் சாரல் கழைக்கு உறவே, புரிசைக் கொடியைத் துவக்கும், இறைவர் தம்மை கருந்தாள் கொடி துவக்குவது போலத் துவக்கும். ஏன்? பருந்தாட் கொடிய தென்றோ? என முடிவு காண்க, தலைவனுடன் சுரம் போக்குக்கு உடன்பட்ட தலைவியைத் தலைவன் ஊர் அதி சமீபத்தில் இருக்கிறதென்றுதோழி தேற்றுதல், ஊரளித் தென்றல் என்ற அகப் பொருள் துறை.
90 கழைக்கு ஆவலான தழல்-மூங்கிலை விரும்பிப் பற்றுகிற தீ, கொதித்தேறு-வளர்ந்து கொண்டே செல்லுகிற, பாலை வழி-பாலை நிலத்தினூடே போகிற பாதை. இராமல்-உட்கார்நது இளைப் பாறாமல். சரத்தூரம் அம்பு போடுகிற, கமல மலர்த்தாளுருமல்-தாமரை போன்ற அடிகள் வருந்தாமல்.மணி-இரத்தினங்கள். மழைக்கார்-மழை மேகங்கள் சூழல்-மேடுகள், வாவும்-தாவி வருகின்ற, நீழல்களும் உளவே என்று முடிவு காண்க.
1 மேதி-எருமை, பாசடை-பசிய இலை, வேரி-தேன், தீது-தீவினை, ஓதி-கூந்தல், கயிற்றில்...................உரல் பிணிக்கவும்-கயிற்றின் ஒரு நுனியைக் காலில் கட்டி, மற்றொரு நுனியை உரலைச் சுற்றிக் கட்டவும், சுருதி-வேதம். கேட்கப்படுவது.
2 காடு-புனம், பூங்கால்-பூவைப்போல மென்மையான கால், காவலார்-காவல் செய்பவர், ஆரரிந்த-ஆர முழுவதும் அரிந்த.
93. சிறுமதலை - சிறுபிள்ளை, மதலை - பிள்ளையின் பொருட்டு, தரங்கம் - அலை, பொருனை - தாமிரளருணி நதி.
94. ககனர் - ஆகாயத்திலுள்ளவர், முக்கணர் - சிவ பெருமான், மதலை - சிறுதொண்டன்பிள்ளை, கறி சமைத்தவள் சிறுத்தொண்டன் மகன் இராமன், விளையவைத்தவள் - கைகேயி, மதனைவிட்டவள் -தலைவன் தாய்.
95. முரி - சோம்பல், விறலியர் - பாணன் மனைவிகள், பெருமையுடைய அரசியர்; துதிக்கை கொண்டு -துதிப்பதினால், தும்பிக்கையினால்; முடிகளைச் சரிக்கையால் - அரசர்களை வெல்லுகையால், தலைகளை வணங்கச் செய்கையால், கடம் - மதஜலம், கடன்.
96. பாண் - பண், இசை; மிழற்றும் - மழலையிற்பேசும், சுரும்பு - வண்டு, மாந்தி -குடித்து, மதிவண் குளி - சந்திகளின் துண்டுகள், அவிழ்த்தும் - மலரச் செய்தும், சுண்ணம் - வாசனைப்பொடி, பளிக்கறை - பளிங்கு மண்டபம், குயிற்றும் - அமைத்திருக்கிற, சாளரம் - பலகணி, நாண் - நாணத்தை, வேள் - மன்மதன். நாண் - வில்லின் நாண், ஞான புங்கவ - அறிவிற் சிறந்தவனே, நந்தா - அழியாத.
97. நந்தா வளம் - அழியாத வளப்பம், பிறந்த - தோன்றிய மால் - குழைக்காதர், வந்தார் - வந்தார் என்ற, வளம் பிறந்த - பெருமை தோன்றும், வார்த்தைக்கே -பேச்சுக்கே, வண்ணம் - நிறம், உதித்த - எழுந்த, மாமதி - பூர்ண சந்திரன். பசலை - நிற வேறுபாடு, மாயம் - காரணம் அறிய முடியாத கொடுமை, குதித்தது - திடீரென்று தோன்றிற்று.
98. கவுள் கன்னம் - கவுளிலிருந்து குதிக்கும், துளிமழை -தூற்றல் முற்றிச் சொரியும் மழை, குஞ்சரன் - கஜேந்திரன் என்னும் யானை, அழைக்கும் - ஆதிமூலமே என்று கூப்பிடும், புயல் - மேகம் போன்ற குழைக்காதர், கொழிக்கும் தமிழ் வளர்-தமிழ் செழித்து வளர்கின்ற, பேரை-தென்திருப்பேரை, தழைக்கும்படி-மதிப்பில்லாத குடும்பம் சிறந்த மதிப்படையும்படி, பெண்டுகள் வளர்க்கும் - பெண்களால் வளர்க்கப்பெற்ற, மயில்-மயில் போன்ற பெண்ணே, சிறிதென்று விதிக்கும்படி படிக்கும் அனிச்சங்களும் -சிறிதென்று தீர்மானிக்கும்படி நாமறிந்த மென்மையான அனிச்சப் பூக்களிலும், பஞ்சினும் உற-பஞ்சிலும், பட்டாலும், உனது பதம் வெறுக்கும்-உனது கால்கள் நோகும், "அனிச்சமும், அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெரிஞ்சிப்பழம்," என்ற குறளைக் காண்க. உதிக்கும் கதிர் கொதிக்கும் சுடர் நடக்குந்தொறும், வெறுக்கும் பரல் உறைக்கும் பொழுது நீ உயிர் வாடுவை என்று கூட்டுக. உயிர்வாடுவையே-தாங்கிக் கொண்டு உயிர் வாழ முடியுமா?
99. வாடை-வடக்கேயிருந்து வரும் காற்று, இயங்க-வீச, பீடை-வருத்தம், தென்றலங்கன்று-இளந்தென்றல், தென்றல்-தெற்கேயிருந்து வரும்காற்று. கோதுபட-கொத்தென்று நீக்கவைத்த, கூடல் - கூடலிழைத்தல், அள்ளியிட்ட-வாரிச் சொரிந்த, பயிர்ப்பு-பிறர் பொருளைத் தீண்டின வெறுப்பு,துணைபட-உயிர்த்துணை பிரிந்தால், இரிந்து- ஓடி, புரக்க-காக்க, வார்-நீண்ட, பூதரம்-மலை போன்ற தோள், ஐவர்-பஞ்ச பாண்டவர், அணங்கு-படர்ந்து வருத்தம் செய்கிற, பொதும்பர் - சோலை, தண்ணளி-தலையளி, குரும்பை-இளநீர் புயம்-தோள், பாகுற-பக்கத்தில் பொருந்த, பரிபுரம் -பாதசரம், சில்லொலி-சில்லென்ற ஒலி, பல்கலன்- பல ஆபரணங்கள், புலவி-ஊடல், கலவி-புணர்ச்சி,
100. பதக மலம்-குற்றமாகிய அழுக்கு, பத கமலம்-அடித்தாமரை, பூக்கும்-தோன்றும்.
101. மோலி-கிரீடம், பவளம்-இதழ், சுரிமுகம்-வளைந்த அடிப்புறம், ஆழி-சக்கரம். கதை-தண்டாயுதம், பீதாம்பரம்-பொன்னாடை.
This file was last updated on 4 August 2011.
.
ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு
(நூல்கள், பதவுரை, விசேடவுரை முதலியவற்றுடன் கூடியது.)
(Sri Kuzhaikathar Prabandha Thirattu)
உரையாசிரியர் - பதிப்பாசிரியர்
திருமதி பத்மஜா அனந்தராமன் எம்.ஏ.
ஆங்கிலப் பேராசிரியர், மதிதா இந்துக் கல்லூரி,
பேட்டை, திருநெல்வேலி - 10
கிடைக்குமிடம்:
1, சிவபுரம் தெரு, திருநெல்வேலி ஜங்ஷன், 627001.
பொருளடக்கம்
-
ஸ்ரீமுகம்
முன்னுரை - ஆங்கிலத்தில்
அணிந்துரை
என்னுரை
முகவுரை
நூல்கள்:- ஸ்ரீ குழைக்காதர் கலம்பகம்.
ஸ்ரீ குழைக்காதர் பிள்ளைத்தமிழ்.
ஸ்ரீ குழைக்காதர் சோபனம்.
சந்தானப் பத்து.
இதரப் பாடல்கள் - தென்திருப்பேரைப் பதிகம்.
தனிப்பாடல்கள்.
கீர்த்தனைகள்.
மங்களம்.
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ வானமாமலை மடத்தின் ஸ்ரீ ராமாநுஜ ஜீயர் ஸ்ரீமுகம்
நமது மடத்தில் நித்யததீயாராதனக்ரந்த கால க்ஷேபாதிகளும் நமது மடம் அரங்க நகரப்பன் திருவாராதனமும் அவிச்சின்னமாக நடந்து வருகிறபடி தாங்கள் அனுப்பிய 'குழைக்காதர் பிரபந்தத் திரட்டு' என்ற நூலினைக் கடாக்ஷித்தோம். தமிழுக்கு உரையாணி போன்ற பல பெரியோர்கள் வாழ்ந்த தெந்திருப்பேரையில் எழுந்தருளியுள்ள மகரநெடுங்குழைக்காதரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற சிறு பிரபந்தங்கள் தோன்றியுள்ளன. அவைகளில் இதுவரை அச்சேறாத 'குழைக்காதர்கலம்பக'மும், 'குழைக்காதர் சோபன'மும் வெளிவந்துள்ளமை பற்றி மிக்க சந்தோஷமானதே. இந்நூலாசிரியர் பெயர் குறிக்கப் பெறவில்லை. ஆயினும் ஆசிரியர் ஆழ்வார்களின் அருளிச் செயலாழ்கடலில் திளைத்தவர் என்பது படிப்போருக்குப் புலனாகும்.
நம் மடம் ஆஸ்தான வித்வான் அபிநவ காளமேகம் அனந்த கிருஷ்ணய்யங்கார் மரபில் தோன்றி தமக்குக் கிடைத்த ஞானத்தை பகவத் விஷயத்தில் ஈடுபடுத்தி இந்நூலை வெளியிட்ட பதிப்பாசிரியர் திருமதி பத்மஜா அனந்தராமன் அம்மையார் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து பகவத் கைங்கர்யங்களைச் செய்து எல்லாவகையான நன்மைகளைப் பெற நம் மடத்துப் பெருமாளான அரங்கநாதரப்பனையும், ஸ்ரீவரமங்களா சமேத ஸ்ரீ தெய்வனாயகப் பெருமாளையும் பிரார்தித்து மங்களாசாஸனம் செய்கிறோம்.
வானமாமலை
(10-4-1992) ஸ்ரீராமாநுஜர்
பிரஜோத்பத்தி (கையொப்பம்)
பங்குனி - 28
-----------------------------------------------------------
PREFACE
'Then felt I like some watcher of the sky
When a new planet swims into his ken'
John Keats thus described his joy on first looking into Chpman's Homer. I had a similar feeling when by chance I came across a few wornout scripts in Tamil language in my village house. They were brittle yellowise brown paper - manuscripts partly moth-eaten and partly destroyed by silver-fish (LAPISMA), a tiny insect that drills holes in papers. At once I rescued and resurrected them from oblivion and planned to give them when to the Tamil speaking world. The timely help of Thirumalai -Thiruppathi Devasthanam's financial help was in fact a blessing in guise. It encouraged and induced me to publish a good and devotional hymn book to sing in praise the glory of Sri Mahara Nedumkuzaikathar of the celebrated Vishnavite Pilgrim Center Thenthiruperai in Tamil Nadu. The outcome is this Onthology 'Kuzhaikather Prabandha Thirattu'. May the Lord of the Seven Hills guide and guard me in this divine attempt.
This present verse collection is a rare and rich compilation of devotional hymns in the form of minor Prabandhams. Some of them like 'Kuzaikathar Kalampagam' ' Sobanam', 'Kirthanas', 'Santhada pathu' and 'Thirupani Malai' are not yet published. Other works like the decade of 'Nammalvar', 'Thenthiruperai Pasuram' is added as it forms Part and Parcel of the life of the inhabitants of Thenthiruperai. A number of lyrics are compiled lest they should be forgotten. Both 'Kuzhaikathar Pillai Tamil', and 'Kuzhaikathar Kalambagam' are directly copied from old manuscripts with stress and strain where the author's names were not found. Though 'Kuzhaikathar Pillai - Tamil' has been printed once it is not popular in the home town. But here it is added. Each and every prabandham is preceded by a foreword and succeeded by a glossary. The foreword in Tamil introduces the literary work. There is a general introduction in regional language about this anthology. A brief account of the tiny village of Thenthiruparai and the deity there will be a valuable guide to the readers.
An introduction from Sri. Pattar-Piran Ramanuja Swami, the present Jeer of Vanamamalai Mutt adorns this collection at the outset. It is being followed by an introductory message from Thiru T.V. Makara Bhushanam, the retired assistant collector of customs; well-versed in Tamil,English and Sanskrit. His love for Vaishnavism is enffable.
The aim in compiling this authology is to put into print the varied literary blossoms with religious aroma and to weave them into a garland of Poesy. This humble literary attempt has been dedicated to the memory of my beloved paternal uncle, Sri.P. Sri Acharya, the veteran Tamil Scholar. A learned man like him needs no introduction to the students of Tamil literature. His was a life devoted to the studies and research in Kamba Ramayanam and Vaishnavite Literature. His magnum opus Sri. RAMANUJA' won him the Sahitya Academy Award. He was the author of the celbrated serial Chithira Ramayana (awaiting publication). His 'Chithira Thiruppavai' has already been published by the T.T. Devasthanam. He has hundred of books and essays written in Tamil to his credit. Hence it is my bounden duty to dedicate this anthology to him from whom I inherited the love and taste for my mother tongue.
There are 96 kinds of minor literary poetic compositions according to Tamil tradition. More and more are added to them. The folk-song motif is the striking theme in them. One of the most popular forms of these prabandhams is 'Kalampagam'. It means a godevil of flowers of many hues. Learned people as the custodiens of literary traditions have no sympathy for folk-songs. But sometimes the folk-motif enters into the main literary stream. It also rejuvenates and enriches it into a minor literature or Prabandham. Poetry and folk songs are fused together and set in harmony in Kalambagam. Generally Kalampagam is a minor prabandham consisting of 100 Poems composed with the 18 parts of Kalampagam. Slowly this number of metrical devices increased from 18. But the style remains simple and appealing. Even today it retains its youthful charm and vigour. As per tradition Kalampagams are written to sing in praise of the deity of a temple such as Anzhahar Kalampagam or the place where the temple is situated such as 'Thiruvengada Kalampagam'. Sometimes they are sung in honour of a sing or a spiritual guru. But none of these rises to the height of 'Nandi-Kalampagam'.
This tiny village of Thenthiruperai has the unique honour of having two Kalampagams to its credit. One is 'Thiruperai Kalampagam' already published by its author, Sri. Anantha Krisha Iyengar and the other is 'Kuzhaikadhar Kalampagam' which is now being published for the first time. It appears to be an anonymous work. But its poetic merit speaks volumes about the unknown and unheard author. In brief it is a beautiful literary poetic price 'Kuzhaikadar Kalampagam' is a wonderful collection of 100 poems. It commences with 'Kappidal' or 'the song of Protection'. The Kappu Poem is followed by a Poem of worship to Nammalvar addressing his spiritual guru, Nammalvar as Parankusan the author makes an appeal to him. He wants his religion's leader to control other religions first as the elephant is controlled by the spear known as 'Ankusam'. The poet requests the reader to put up with him for what he lisped in verse may have flaw. Yet he has tested his poetic skill by making many to listen to his composition. The humility of the poet is obvious. The varied metrical devices and patterns reveal his poetic genius. His simple style flows fluently like the meanderings of the perennial river Thamirabarani. It is a pity that many a scholar of the past missed this noble piece of literature with its divine message to have faith in God and translate this faith however limited with constructive actions.
'Kuzhaikadhar Pillai Tamil' occupies the second place in this edition. It has been taken down from an old worn out manuscript. This rich piece of literature is little known to villagers. It is said to have been published once from Dr. U.V.S.'s manuscript library. It has been added here to make it popular among the devotees of Kuzhaikadhar. 'Pillai - Tamil' is another popular type of literature. It is believed to be the first and foremost of the varied types of minor literature. Its seed is embedded in Tolkappiyam. But the real father of this kind of poetry is the great Vaishnava saint Perialvar. The poet describes Krishna's nativity making Thirukkottiyur in Tamil Nadu as the birth place of Krishna.
Generally 'Pillai Tamil' is a graphic account of the childhood games and sports of the poetic hero in verse. It is in praise of the childhood in all its varying stages. The rapid growth and development of the child with its pranks and mischiefs are well brought-out as beautiful pen-pictures. In fact 'Pillai Tamil' is a lovely piece of poetic art making the reader become one with the child. The innocence, the gaiety and the sportive spirit of the infant enchants one and all. 'Pillai Tamil' starts singing of the child from its third month to twenty-first month. The hero of the poem is either God or King. Imagining the hero as a child, the poet sings of the ten stages of its growth with ten songs for a stage sung on every alternate month from the third to the twenty-first month. 'Kuzhaikadhar Pillai - Tamil' is no exception to this. It sings in praise of Lord Kuzhaikadhar in His infancy.
The first stage of Kuzhaikadhar 'Pillai Tamil' offers prayer for the welfare of the child in 14 poems seeking the blessings of Saraswathi, the Goddess of Learning, Sri. Ramanuja, the spiritual guru of Vaishnavites and all the twelve Alvars. This section is known as 'Kappu' or 'the song of Protection'. The rest of the poem shows the beautiful and captivating gestures of the various games of the child. The to and from wavy movements of the child are quite picturesque. Lulllaby follows. The mother lulls the child to sleep by her melodious songs. The next few stages really enchant us. The Song of clapping hands and the song of kisses thrill us. In the welcome song the mother cheers up the tiny toddler to catch-hold of her to move forward. Next is the song of the Moon. Here we find the mother making a plea to the moon to come down to appease the crying child. All these songs are common to both the sexes. If it is a female child, the last stages are the songs of swing, bath and ammanai. As the child is a male one here, these are in addition the songs of destroying playfully the sand castles built by the female children, the song of beating the kettle drum and finally the song of pulling the toy- cart playfully. the spontaneous outpourings of the mother about her child's naughty games andmis- chievous tricks, capture our heart, mind and soul. The poet takes us from the world of the child to that of a divine one. The language describing these divine activities rises naturally to a grand and majestic tenor. In such a mood the poetry becomes genuine and sincere elevating us to a nobler plane. The words of Reed seem to endorse this view for he says:
The experience of Poetry is in the art of creation; the experience is the poetry and is wholly a mental units. In the unconscious mind it may strike root: from that hidden source it may send up a shoot, strike with the conscious brain unasked'.
Kuzhaikadhar Pillai Tamil is followed by 'Kuzhai kadhar Sobanam'. It is a piece of folk-lore taken down directly from the oral literature of the women-folk of Thenthiruperai. It is like a ballad poem with the two striking themes of the love and courage of Kuzhaikadhar. Then comes the collection of the simple but effective 13 poems entitled 'Santhana Pathu'. It is quite popular among the inhabitants of this village as an elixir for the childless couples. A sincere and pious recital of this piece has been rewarding to issueless couples as born in testimony to the people of Thenthiruperai. This oral piece in verse is being published for the first time. 'Santhana* Pathu' is followed by a variety of songs like 'Kirthanas'. These lyrics are short and sweet and can be set to music.
A number of miscellaneous rural songs are also compiled here. The celebrated 11 pasurams of Nammalvar known as 'Thenthiruperai Pathigam' precede this collection of minor poems. Most of them are part and parcel of the daily rituals of worship in Kuzhaikadhar temple and also in the sweet homes of these villagers. A fairly good collection of various metrical pieces on the verge of being forgotten after their first publication are collected and compiled in this anthology. Some of them are prison-poems. Once many of the people from Thenthiruperai were arrested and imprisoned in Tirunelveli Town which part is even today remembered as Prison Street. (KAVAL PURAI THERU). The reason was non-payment of taxes due to the failure of monsoon. Their chief grief was not for leaving behind their kith and kin but because of their inability to worship their Lord Kuzhaikadhar every day and to proceed to the neighbouring village Alwar Thirunagari to offer their obeisance to Nammalvar Die-hards. As they were deprived of this divine opportunity, their sorrow and sadness burst out. Their outpourings in verse are reprinted here. The most prominent of these compositions is 'Kuzhaikadhar Pamalai', a poetic garland of 103 Poems by Narayana Dishadhar. It was published byDr. U. V. Swaminatha Iyer as 'Poem of the Prison' (Chirai Thantha Chenkuyil) with a valuable introduction. Already it has been published by me separately as a hymn-book for daily worship. Some of the remarkable single pieces in metre added here were written by my grand - father Sri. Anantha Krishna Iyengar, a native of this village. An anonymous interrogative poem in 4 lines decorates the front wall of the first Mantapam of Kuzaikadhar temple. The poet wonders if there is anything equal to the eternal, never fading red-lotus face of Lord Kuzhaikadhar addressed as Vadatha Chenthamarai. The poet poses the problem to the Sun - god for He has visited all the planets of the universe. This enigmatic poem is also noted down in this edition. A mural poem presented in the form of the temple-car adorning the front part of the temple is also recorded here in its pictorial form 'Radha Banthanam'. The design or the verse is known as 'Chakra Banda (and anybody deciphred it used to get a reward in those days of yore).
The contribution was made by my paternal grand-father, Kavi Pitchu Iyengar. The present Anthology is concluded with a song of blessing called Mangalam.
In the days of my childhood my house used to rumble with the pasurams of Alars. The lively literary debates and discussions of my paternal circle with its pals left a deep impact on me. The musical recital of the gymns of 'Nalayira Divya Prabandam' in the Vaishnavite temples and in our sweet homes strengthened my mind, heart and soul. It often haunted me like a passion and kindled my religious fervour. Already I had been born and brought upin a literary atmosphere surcharged with the singing of these poetic compositions. No doubt God is present in several forms with different names. In the name of Swami Makara Nedumkuzhaikadhar I got the inspiration of undertaking this divine work and in the form of the Lord of Thiruvenkadam I received the financial assistance to complete it. In honour of Lord Kuzhaikadhar the minor works and sundry poems on Him are collected and compiled as a living monument to posterity that will not willingly let it die.
May the Lord guide and guard us all.
A. Padmaja Anantharaman.
Printed by: Sri. Ratnam Press, Tin. - 6
-----------------------------------------------------------
THENTHIRUPERAI SRI SWAMI MAKARA NEDUN KUZHAIKATHAR
Thenthiruperai, situated on the trunk road connecting Tirunelveli and Tiruchendur in Tamil Nadu is a small village lying on the banks of river Tambirabarani (also known as porunai). The village has traditionally nurtured Tamil literature with religious fervour.
Thenthiruperai is one of the 108 vaishnavite pilgrim centres and also forms part of the Nava Thirupathy of South Tamil Nadu. The name ' Thenthiruperai' is derived from 'Per Aiel' which in Tamil connotes the lofty and majestic castles and forts.
Nammalwar, the mystic saint has immortalised the village with his 'MANGALA SASANAM' (10 Tamil verses in "Thiruvaimozhi", one of the four parts of "Nalayra Divya Prabantham"). These poems describe Nammalwar's passionate love for the Lord of Thenthiruperai in the Nayaki - Nayaka bhava, endeared as Parankusa Nayaki.
Makara Nedunkuzhaikathar is the presiding deity. The Lord's name might have been a Tamil rendering of the original Sanskrit version "Makarayutha karna pasan" or simply Makara Bhushanam. The legend goes that on a full moon day in the month of Panguni under the star 'UTHIRAM', Neela Devi (Mother Earth) who was doing penance on the banks of the river found a pair of glittering fish-like ear rings (Makara). Devi felt that they would well-adorn the long and big ears of her Lord, her lover, Mukil Vannan, the cloud-hued. The Lord appeared before her and made her happy by wearing them. Hence the name Makara Nedunkuzhaikathar. The place where the ear-studs were found is known as "Kudupunalthurai". It is believed that the long and beautiful ears of the Lord of Thenthiruperai relish the vedic recitation, festive sound, and the yell of the merry-making children. This is the reason why the "Garuda Sannathi" is not situated in front of the Lord but situated at some distance which is a peculiar feature not seen in any other Vaishnavite temple.
The present resident community owe their origin to a holy ancestry which specialised a branch of Sama vedha, known as Jaimini Sama vedha. The swara recitation is unique to Thalavakara Jaimini Sama vedha. Thalavaikara was the chief disciple of Rishi Jaimini. Kenoupanishad is also known as Thalavakara upanishad. Presently there is only one patasala at Thogur in Tanjore District offering Jaimini saka of samaveda.
Madurakaviyar the celebrated hagiographer of Nammalvar is believed to be the ancestor of the residents. The village had been made holy and divine by the visit to Sri Ramanuja. Thenthiruperai is also the birth place of many reputed poets, scholars, and freedom-fighters. It possesses a number of literary compositions like "Kuzhaikathar Pillai Tamil", "KUZHAIKATHAR KALAMBAKAM" and "SANTHANA PATHU". The pamalai, garland of 100 verses on Kuzhaikathar written in sweet and simple Tamil is being recited by all everyday.
May Lord MAKARA NEDUN KUZHAIKATHAR Bless All.
-----------------------------------------------------------
அணிந்துரை
"ஆடி ஆடி அகங்கரைந்து இசை
பாடிபாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று
பாடி வாடும் இவ்வாணுதலே".
என்று ஆரவாரத்துடன் பக்தி வெள்ளத்தில் பூரித்துக் கொண்டிருந்த நம்மாழ்வாருக்கு தன்னால் முடியாததொரு ஒன்றுமில்லை என்ற எண்ணமும் ஊர்ஜிதமாகிவிட்டது - "என் முன்னைக் கோளரியே! முடியாதது என் எனக்கே?" அப்படியிருந்தும், எம்பெருமானைக் காண்பதற்குத் தகுதியான கர்மயோகம் முதலான உபாயங்கள் ஒன்றுமில்லாத தனக்கு "தடவிகின்றேன் எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே?" என்ற ஐயமும் உண்டாகிறது. திருமாலிடம் கொண்ட காதல் பித்து - பிரமானந்த பித்து - அவரை ஆட்கொண்டது. பராங்குச நாயகியாகி தன் ஆறாக்காதலை அப்பட்டமாகத் தன் தோழிகளிடமும், அன்னைகளிடமும் சொல்லி, தெளிவு படுத்தி மனச் சோர்வும் அடைகிறாள்:
"நாணியினியோர் கருமமில்லை
நாலயலாருமறிந் தொழிந்தார்."
* * * *
உற்றார்கள் தன் காதல் வேகத்தைத் தணிக்கச் சொன்ன வழிகளையும் ஒத்துக்கொள்ளவில்லை, செவி சாய்த்துக் கேட்கவுமில்லை. ஒரே பிடிவாதமாகத் தன் காதல் சுரம் நிவர்த்தியாக வேண்டுமென்றால், தன்னைகாக்க வேண்டில் "ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்", என்று கோதையைப்போல் அங்கலாய்க்கிறாள்.
காதலினால் பரமனை அடையலாமென்ற சித்தாந்தம் நமது வைணவ, சமய பூர்வாச்சாரியார்களின் பாக்கனிலிருந்து தெளிவாகிறது. நாயகி நாயக பாவத்தினால் ஜீவாத்மா பரமாத்மாவைத் தேடித் திரிந்து ஒன்றுசேர்கிறது.
பராங்குச நாயகியும் இதற்கு விலக்கில்லை. தேடித் தேடி அலைந்து தன் மனம் குருகூருக்குக் கிழக்கே மூன்று கல்தொலைவில் தாமிரவருணி ஆற்றங்கரையில் இருக்கும் தெந்திருப்பேரை நகரில் வீற்றிருந்த திருக்கோலத்தில் இருக்கும் நிகரில்முகில்வண்ணணான, மகரக்குழைக்காதனிடம் சென்றுவிட்டது என்றும், இனி ஒரு கணம்கூட தாமதிக்காமல் அவனிடம் செல்லவேண்டியதுதான் என்றும் உரைக்கிறாள்.
-
"வண்ணம் திரிவும் மனம் குழைவும்
மானமில்லாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல் உருமையும் உள் மெலிவும்
ஓதநீர் வண்ணனென்பான் னொருவன்
தண்ணந் துழாய்யன்னும் மாலைகொண்டு
சூட்டத்தணியும் பிலம்பன்றன்னைப்
பண்ணழிய பலதேவன் வென்ற
பாண்டி வடதென்னை உய்த்திடுமின்". (நா.தி)
இப்படிப் புகழ் பெற்ற மகர நெடுங்குழைக்காதனைப் பற்றிய பாட்டுகள்தான் இந்த பிரபந்தத்திரட்டாகிய களஞ்சியத்தில், திருமதி பத்மஜா அனந்தராமன் அவர்களால் தொகுத்துப் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களுக்கு அமுதமாக அளிக்கப்பட்டிருக்கிறது. வைணவ சமய கருத்துக்கள், பொதுக் கருத்துக்கள் இவைகளின் உயிரோட்டத்தை இதில் காணலாம். எம்பெருமானை வாயாரத் துதித்து, தலையார வணங்கி பாக்களை ஓதுவதே நமக்குத் தவம் என்பது இப்பிரபந்தத் திரட்டிலிருந்து தெளிவாகிறது. இத்தகைய பக்தியே நாட்டு மக்களுக்குத் தவம் என்பதும் புலப்படுகிறது. பூதத்தாழ்வாரின்,
"ஏந்திப் பணிந்து அவன் பேர்
ஈரைஞ்நூறு எப்பொழுதும்
சாற்றியுரைத்தல் தவம்."
- என்பதை நினைவூட்டுகிறது. கீதா சாரியனின் 'ஸததம் கீர்த்தயந்தோ மாம்', என்பதும் பொருந்தும். புலன்களை அடக்குவதற்று வழி பக்தி ஒன்றேதான். வேறு வழியொன்றும் தெரியவில்லை; 'நான்யப் பந்தா வித்யதே' என்கிறது புருஷஸுக்தம். உண்மையாக உள்ளம் உருகி உவப்புடன் அந்த மகர நெடுங்குழைக்காதனை வழிபடும்போது உள்ளம் தூய்மை பெற்று பூரிக்கிறது.
திருமதி பத்மஜா அனந்தராமன் அம்மையார் ஓர் ஆங்கிலப் பேராசிரியை. இருந்தும் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு அதிகம். தன் கல்லூரிப் பணிகளையும், குடும்பத் தலைவி என்ற பொறுப்பையும் செவ்வனே செய்து கொண்டு, தன் ஆற்றலின் வேகத்தில் தமிழையும், அதன் நடை, ரசனையும் அனுபவித்து,"தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்ற நோக்கத்துடன் இப்பிரபந்தத் திரட்டை அளித்திருக்கிறார். ஏற்கனவே அவர் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நற்பணிக்கு திருவேங்கட முடையானே முன்வந்து பணமுதலீடும் செய்து, ஊக்குவித்து 'முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கேற்ப அம்மையாரின் தெய்வீகத் தொண்டு ஓர் எடுத்துக்காட்டாகும். இப்படி ஓர் பிரபந்தக் களஞ்சியம் நமக்குக் கிட்டாவிடில், குழைக்காதனைப் பற்றியும், சிற்றூராகிய தென்திருப்பேரையைப் பற்றியும், அங்கு வாழும் மக்கள் பக்தி நெறியைப் பற்றியும் நமக்கு எங்கு தெரியப்போகிறது? அன்னாருடைய பணிக்கு என் ஆசியும் அன்பும். பெருமாளை வழிபடுவது அவர், இவர்களை காப்பதும் அவரவர் கடமையாகி விடுகிறது. எப்படி எல்லாம் பேரை மக்கள் குழைக்காதனைக் கொண்டாடி இருக்கிறார்கள்! - பாமாலை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் என்றெல்லாம். தங்கள் ஊர் தெய்வம் அல்லவா? மற்றும் குடும்பத்தலைவனும் கூட. அவனை விட்டுப் பிரிய மனமில்லாமல் வேதனைப் படுகிறார்கள்.
சிறையிலிருந்து மீட்டிய செல்வனல்லவா அவன்! தான் செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவித்து வரும் தீட்சதர்,"என் சிறை நீக்கிவித்தாயிலையே" என்று கண்ணீர் விட்டுக் கதறி அழும்பொழுது நம்மையும் அறியாமல் நம் கண்களில் நீர் மல்கின்றன. என்ன உருக்கம்! இனி பாசுரத்தைப் பார்ப்போம்:-
"பொன்சிறை நீக்கிவித்தே பறக்கின்ற புள் அரசே
என் சிறை நீக்குவித்தாயிலையே இகல் ஆடரவ
வன்சிறை நீக்கினை வானவர்க்காக மகிழ் வினதை
தன் சிறை நீக்கினை ஆரா அமுதமும் தந்தனையே."
(கு.பா.)
அவனைத் தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே கருதி அவனைச் சீராட்டித் தாலாட்டி, சப்பாணி கொட்டி இரசிக்கிறார்கள். குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிலாவைக் கூப்பிடுகிறார்கள். அவன் விளையாட்டுத் தேரை இழுத்துவரும்பொழுது அவன் நடையைக்கண்டு உள்ளம் பூரிக்கிறார்கள். இவையெல்லாம் நமக்கு பெரியாழ்வாரின் பாசுரங்களை நினைவூட்டுகின்றன.
***
திரு வானமாமலை ஜீயரின் ஆசியைப் பெற்ற இந்த அம்மையாருக்கு என் வாழ்த்துக்கள். ஆரா அமுதமாக இனிக்கும் இவ்வரியப் பிரபந்தத் திரட்டுக்கு அணிந்துரை வழங்கும் வாய்ப்பைக் கிடைத்தற்கரிய பேறாகக் கருதுகிறேன். இதுவும் குழைக்காதனின் செயலாகவே கொள்கிறேன்.
"ஆழியங்கையனை ஏத்தா வல்லா ரவர்
அடிமைத்திறத் தாழியரே"
*என்று நாமும் பாடிப் பயனடைவோமே!
எழுதியவர்:
தூத்துக்குடி T.V. மகரபூஷணம்
16-4-1992. (ஓய்வு பெற்ற) உதவி சுங்க இலாகா கலெக்டர்
-----------------------------------------------------------
என்னுரை
--------
"பாமாலை போன்ற பக்திப் பனுவல்கள் இல்லாவிட்டால் தமிழகம் சம்பந்தப்பட்ட வரையில் சமயம் ஊமைதான்; தத்துவம் நொண்டியாகிவிடும், அறிவு குருடாகி, அருள் இருளாகும்; கோயில்களில் தெய்வம் கல்லாகவும், செம்பா கவும் நின்று கொண்டிருக்கும்" என்று கம்ப மேதை திரு பி.ஸ்ரீ. ஆசார்யா பன்முறை குறிப்பிடக் கேட்டதுண்டு. ஆனால் அக்கூற்றின் ஆழ்ந்த பொருளை அண்மையில் தென்திருப்பேரை ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதரின் பாடல்களைக் கற்றுணர்ந்த பின்னரே அறிந்தேன்.
அறியா இளமையிலே, எனது ஊராகிய தென்திருப்பேரையில் வயது வேறுபாடின்றி இருபாலரும் குழைக்காதரின் பாடல்களை இனிமையாகப் பாடக் கேட்டதுண்டு; பலர் பாராயணம் செய்யப் பார்த்ததுண்டு. கற்றலினும் கேட்டல் நன்று என்ற அரிய உண்மைக்கேற்ப பழக்கத்தின் காரணமாக எனது மனத்திலும் பல பாசுரங்கள் பசுமரத்தாணி போல் பதிந்தன. வீட்டில் இடையறாது குழைக்காதர் பெருமையினைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்த தால் தினம் தவறாமல் அவர்மீது எழுதப்பெற்ற பாசுரங்களைப் பாராயணம் செய்யத் தொடங்கினேன். நாளடைவில் எனக்குக் குழைக்காதரிடம் நெருங்கிய ஈடுபாடு ஏற்பட்டது. அவரிடம் கொண்ட பிணைப்பும், இணைப்பும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வந்தன. நாளடைவில் அவரே 'எனது உள்ளங்கவர் கள்வன்' எனச் சிறிது சிறிதாக உணர்ந்தேன். பாராயணம் பல புரிந்து தழும்பேறிய என் நா, கற்றறிந்த பிறகு அவர் மீது பாடப்பெற்ற பாசுரங்களைச் சுவைக்கத் தொடங்கியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உணர்வின் விளைவால் குழைக்காதர் புகழினைப் பாரத மெங்கும் பரப்ப வேண்டுமென நினைத்தேன். சம்ப்ரோக்ஷணம் காணவிருக்கும் இப்பிரானும் அடியேனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அளித்ததாகக் கருதினேன்.
இத்திருப்பணிக்காக எல்லோரையும் போன்று பொற்காசுகள் மாத்திரம் கொடுத்தால் போதாது, காலவெள்ளம் அடித்துச் செல்ல முடியாத அழியாச் செல்வத்தினைக் கொடுத்தல் நலம் என எனது உள்ளுணர்வு உணர்த்தியது. தமிழ்க் குடும்பத்தினைச் சேர்ந்த நான் இலக்கிய முத்திரை பொறித்து இச்செல்வத்தினைக் கொடுக்க விழைந்தேன். எனவே நான் அசைபோட்டுக் கொண்டிருந்த, ஆழங்கால் பட்ட பாடல்களைப் பிறரும் அறிந்து கொள்ளும்படி உரைவளத்துடன் கொடுக்கும் பணியில் ஈடு பட்டேன்.
'நன்னெஞ்சே! நம்பெருமான்
நமக்கருள்தான் செய்வானே!'
என்ற நம்மாழ்வார் வாக்கினில் முழு நம்பிக்கை கொண்டு குழைக்காதர் பற்றிய பிரபந்தங்களைத் திரட்டினேன்.
இராமபாணப் பூச்சிக்கு இரையாகிக்கொண்டிருந்த 'குழைக்காதர் பிள்ளைத்தமிழ்' 'குழைக்காதர் கலம்பகம்' போன்றவற்றிற்கான கைப்பிரதிகளைத் தற்செயலாக வீட்டில் கண்டெடுக்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. எனது தாத்தாவான அபிநவ காளமேகம் திரு. அனந்த கிருஷ்ணய்யங்கார் 1946-ம் ஆண்டு தாம் பாடிய 'திருப்பேரைக் கலம்பக'த்தினை வெளியிட்டார். இதுவரை அச்சிடப்படாத ஆசிரியர் பெயர் தெரியாத குழைக்காதர் கலம்பகத்தின் கைப்பிரதியினை கற்று மகிழ்ந்ததுடன் பிறரும் படித்தறிய வேண்டுமென்ற வேணவா என்னை உந்தியது. குழைக்காதர் பற்றிய பாடல்கள் அழிந்து விடாமலிருக்க அவற்றைப் பதிப்பிக்கும் பணியில் முனைந்தேன். மேலும் அங்கிருக்கும் மகளிரின் வாய்மொழி இலக்கியமாக விளங்கிய குழைக்காதர் சோபனம், ஊஞ்சல் பாட்டுக்கள், கீர்த்தனைகளை நேரில் சென்று திரட்டினேன். ஏற்கனவே ஒருதடவை அச்சிட்டு மக்களால் மறக்கப்பட்டிருந்த வேறு சில தனிப்பாடல்களையும் இத்துடன் இணைத்தேன். தற்செயலாக 'குழைக்காதர் பிள்ளைத் தமிழி'ன் கைப்பிரதியும் கிடைத்தது. இதிலும் ஆசிரியர் பெயர்பற்றிய விவரங்கள்காணப்படவில்லை. இப்பகுதியினருக்கே இவ்விரு நூல்களும் புதுமை விருந்தாக இருந்தன. ஆனால் உ.வே.சா. நூலகத்திலுள்ள ஏட்டுச்சுவடியில் இப்பிள்ளைத் தமிழின் ஆசிரியர் திருமேனி கவிராயர் எனக் குறிப்பிடப் பெற்றிருந்தது. கோயில் மண்டபக் குறட்டில் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படாத, மிக அழகான, சிந்தனையைத் தூண்டும் 'கண்டாயோ' எனத் துவங்கும் பாடல் ஒன்று காணப்படுகிறது. இது தலநாயகனின் வாடாமரையான திருமுகப் பொலிவினைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இத்துடன் மண்டபச் சுவரினை அலங்கரிக்கும் 'இரத பந்தனம்' என்ற சித்திரக் கவியும் இதில் இணைக்கப் பட்டுள்ளது. 'குழைக்காதர் மங்களத்துடன்' இனிது முடித்தேன். இத்தருணத்தில் எதிர்பாராத விதமாக திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தினரின் நிதி உதவி கிடைக்கப்பெற்றேன். எனது உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற என் குலநாதனான திருவேங்கட நாதனே என் திருப்பணிக் காரியத்திற்கு அருளாசி வழங்கியது போன்று பக்திப் பரவசம் அடைந்தேன். அடியேன் என்றென்றும் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்திற்குக் கடமைப் பட்டிருக்கிறேன்.
குழைக்காதர் மீது பாடப்பெற்ற மலர்ச்சரங்களைக் கட்டிக் காத்து வரப்போகும் இளைய தலைமுறையினருக்குத்தருவது கடமையென எண்ணினேன். ஏனென்றால் இத்தகைய திருப்பணிகள் மூலம்தான் சமயம் ஊமையாகி விடாமலும், தத்துவம் நொண்டியாகிவிடாமலும், அருள் இருளாகி, தெய்வங்கள் வெறும் சிலையாக நிற்காமலும் தடுக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து. இதனால் இப்பணியினைத் தொடர்ந்தேன். மேலும், அடியேன் பூமாலை தொடுக்கவில்லை. பாமாலை புனைய வில்லை. பொன் மாலை அளிக்கவுமில்லை. நம் பெரியோர் வழித்தடம் சென்று அவர்கள் விட்டுச் சென்ற பக்தி மணம் கமழும் இலக்கிய மலர்களைத் தொகுத்து சம்ப்ரோஷனம் காணவிருக்கும் மகரக்குழையனுக்கு இவ்வாடாத மலர் மாலையினைச் சூட்டி மகிழ விழைந்தேன், துணிந்தேன், செயல்பட்டேன். இப்பிரானின் அருளால் முயற்சி திருவினையாகியது. அதன் விளைவே இவ்விழாவின் இனிய வெளியீடாக மலரவிருக்கும் இந்த 'குழைக்காதர் பிரபந்தத் திரட்டு' என்ற நூலாகும்.
இவ்வாடா மலர் மாலையில் இடம்பெற்றுள்ள 'குழைக்காதர் கலம்பகம்' 'குழைக்காதர் பிள்ளைத் தமிழ்' 'சந்தானப்பத்து' , தென்திருப்பேரைப் பாசுரம், தனிப் பாடல்கள், 'சோபனம்' போன்ற ஒவ்வொரு சிறு பிரபந்தத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு நூல்முகம் எழுதப்பட்டுள்ளது. பிரபந்தத்தின் இறுதியில் இந்நூலிலிருக்கும் பாடல்களுக்கான அரும்பதச் சொற்கள் அடங்கிய குறிப்புரை ஒன்று விளக்கமாகவும், விரிவாகவும் தரப்பட்டுள்ளது. இந்நூலின் முகப்பில் காணப்படும் முன்னுரை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தென்திருப்பேரை என்னும் பதியின் சிறப்பினையும், குழைக்காதரின் பெருமையினையும் கூறுவதாக அமைந்துள்ளது.
ஓராண் வழிக் கிராமமாகத் தற்போது 29வது பட்டத்தை அலங்கரிக்கும் நம்வர்த்தமான ஸ்வாமியான பட்டர்பிரான் இராமனுஜ ஜீயர் ஸ்வாமிகள் துவங்கி வைத்த தென்திருப்பேரையில் எழுந்தருளியிருக்கும் மகர நெடுங்குழைக் காதரின் சம்ப்ரோஷணத்திற்கு இவ்விழாவின் இனிய வெளியீடாக வரும் நூலாகிய 'குழைக்காதர் பிரபந்தத் திரட்டு' ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளின் மங்களாஸாஸனத்துடன் பொலிவு பெற்று விளங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் ஊறித் திளைத்த எனது பெரிய தந்தையாரான கம்பச் சக்கரவர்த்தி திரு. பி. ஸ்ரீ ஆச்சார்யா எனக்குத் தமிழ்ப் பற்றினை ஊட்டினார். எனவே அன்னாருக்கு இந்நூலினை அன்பு காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன். எனது தந்தையார் நெல்லை வக்கீல் அ. நா. மகரபூஷணம் அடிக்கடி கூறியபடி ஆங்கிலத் துறையைச் சேர்ந்த அடியேன் ஆங்கிலத்தில் ஒரு சிறிய அறிமுகம் எழுதுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணி அதனை இந்நூலில் இணைத்திருக்கிறேன்.இந்நூலினை நல்லமுறையில் அச்சிட்டுத் தந்த ஸ்ரீ ரத்னம் அச்சகத்தினருக்கு நன்றி. இந்நூல் வெளியிடுவதற்கு நிதி உதவி புரிந்த திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தினருக்கும் அடியேனுடைய அன்பு கலந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலிற்கு அணிந்துரை வழங்கிய பன்மொழி இலக்கியச் செல்வர் திரு டி. வி. மகாபூஷணம் அவர்கட்கும், ஆலோசனை பல கூறி உடனிருந்து உதவிய பண்டிதர் திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கட்கும், எனக்கு உறுதுணையாயிருந்து உற்சாகப்படுத்தி இலக்கியப் பணீயாற்றுவதற்கான சூழ்நிலையினை அமைத்துக் கொடுத்த என் வாழ்க்கைத் துணைவர் திரு. நா. அனந்தராமன் அவர்கட்கும் எனது நன்றி உரித்தாகுக.
இக்கலியுகத்தில் பிறவிப் பெருங்கடலில் அல்லல்பட்டு அவதியுறுங்காலையில் மயர்வற மதிநலம் அருளிய தென் திருப்பேரை ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திரட்டிலுள்ள பாடல்களை மானிடத்தோர் பொருள் புரிந்து கற்றுணர்ந்து இப்புவியில் நீங்காத செல்வம் பெற்று நிறை வாழ்வு வாழத் திருவருள் புரிவாராக. இந்நூல் 'வணக்குடை தவநெறி வழி' நின்று புறநெறிகளைக் கட்டுவதற்கு வழித்துணையாக இருக்குமானால் அதுவே அடியேன் பெற்ற நற்பேறாகும். இந்நூலைக் கற்பதின் வாயிலாக நம்மையறியாமலே நாம் இப்பெருமானின் அழகிலும், இப்பதியின் பெருமையிலும், வளமையிலும் ஈடுபட்டு நம்மை மறக்கிறோம். நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வழியறியாது 'கார் வாழி பேரைகுழைக்காதர் வாழியினிக்காசினிக்கே' என வாயார வாழ்த்துகிறோம்.
குற்றம் நீக்கி குணம் பெருக்கி என்கிற முறையில் அடியேனை ஆசீர்வதிக்குமாறு அனைவரையும் அடிபணிந்து பிரார்த்திக்கிறேன்.
குழைக்காதர் திருவடிகளே சரணம்.
தாஸன்:
திருமதி பத்மஜா அனந்தராமன்.
-----------------------------------------------------------
முகவுரை
தென்டிருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில்.
'தென் பாண்டி நாட்டில் வளம் பல கொழித்துப் பாயும் பொருநை நதிக்கரையின் வலப் பகுதியிலே அமைந்துள்ள பேரூரே தென்திருப்பேரை. இது பக்தியோடு தமிழ் வளர்த்த பண்ணைகளில் ஒன்று. திருமால் கோயில் கொண்டுள்ள பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பதினெட்டுள் நம்மாழ்வார் உகந்த நவதிருப்பதிகள் குறிப்பிடத் தக்கவை. அவற்றுள் பழமையும், பெருமையும் மிக்கது தெந்திருப்பேரை.
"வேத வொலியும் விழா வொலியும் பிள்ளைக் குழாவிளையாட்டொலியும் அறாத்" திருப்பேரை என்று நம்மாழ்வாரால் போற்றப்பட்ட இத்திருப்பதியின் சிறப்பினையும், இங்குள்ள மகர நெடுங் குழைக்காதரின் மாண்பிணையும் இவண் காண்போம்.
தென்திருப்பேரை - அமைவிடம்:
தமிழ் நாட்டில் சிதம்பரனார் மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரிக்குக் கிழக்கே மூன்று கல் தொலைவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் பாதையில் திருச்செந்தூருக்கு மேற்கே தென்திருப்பேரை உள்ளது. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இவ்வூர் இருக்கிறது. இவ்வூரை 'தென்திருப்பேரை' "திருப்பேரை" என்ற பெயர்களால் திருவாய் மொழி குறிப்பிடுகின்றது. தென்திருப்பேரைப் பாசுரங்களிலிருந்து இவ்வூர் அக்காலத்திலே கழனிகளும் பொழில்களுமாய், படிப்பும், ஆற்றங்கரைப் பண்பாடும் உடையதாய் நம் தாய்மொழிக்கும், வடமொழிக்கும் வளமான ஒரு விளைநிலமாய்த் திகழ்ந்ததென்று தெறிகிறது. மேலும் இப்பதி திருப்பேரெயில், திருப்பேரை, வரலாறு கண்ட பேரை, தண்டமிழ்ப் பேரை, தென்பேரை எனப் பலவாறாகப் பாராட்டப் பெற்ற 'கலைமல்கு பேரை'யாகும். 'பேரெயில்' என்பது 'பேரை' என்று மருவி வழங்கி வருகிறது.
வரலாற்றுச் சிறப்பு:
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தில் தென்திருப்பேரை சீரும், சிறப்பும் பெற்றிருந்தது என நம்மாழ்வார் திருவாய்மொழியிலிருந்து தெளிவாகிறது. ஆழ்வார் காலத்திற்கு 175 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய தென்திருப்பேரையின் வயது ஏறத் தாழ 1250 ஆண்டுகள் என்பதற்கான வரலாற்றுச் செய்திகள் கிடைத்துள்ளன. நவதிருப்பதிகளைக் கண்டு மகிழ்ந்த இராமாநுசரின் பாதத்துளியும் பட்ட பெருமை இம் மண்ணிற்கு உண்டு. இப்பதி வரலாற்றுத் தொன்மையும், சமயப் பெருமையும், வேதசாத்திரத்தின் பழமையும், ஒருங்கே வாய்ந்தது. வைணவர்களால் போற்றப்படும் நூற்றெட்டு திருப்பதிகளில் ஒன்று இப்பதி. உபயகவி அப்பா எழுதிய 'நம்மாழ்வார் தாலாட்டும்', சடகோப திவ்ய சரிதமும் இவ்வூரைத் திருப்பேரை என்றே குறிப்பிடுகின்றன. அஷ்டப்பிரபந்த ஆசிரியர் இவ்வூரைத் 'தென்திருப்பேரை' என்றே குறிப்பிடுகின்றார். மணவாள மாமுனிகள் தமது வியாக்கியானத்தில் 'மகாநகரமான தென்திருப்பேரையிலே' என்று குறிப்பிட்டுள்ளார். நம் மாழ்வார் பராங்குச நாயகியாகத் தான் மகரநெடுங்குழை காதரிடம் கொண்டிருந்த தீராக்காதலைத் திருவாய் மொழியில் 'வெள்ளைச் சுரிசங்கோடு ஆழி ஏந்தி' எனத் துவங்கும் பதினொறு பாடல்களில் எழுதியுள்ளார்.
பதியின் மாண்பு:
இராமவதாரத்தில் வெற்றியடைந்த ஜெயராமன் சோழநாட்டில் காவிரிநதி தீரத்தின் வடகரையிலும் தென் கரையிலும் உள்ள பதினெட்டு ஊர்களைத் தலவகார சாமவேதிகளுக்குத் தானம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த பதினெட்டு ஊர்கள் காவிரிக்கு வடகரையில்எட்டும், தென்கரையில் பத்தும் என வெண்பாவே அறிவிக்கிறது. "திட்டைக்குடி அன்பில் திரு பூறையூர் அதனூர் மட்டவிழ்பூந் தோகூர் வயவாலி---சிட்டர் திருக்குன்ற மருதூர் குறைதீர்த்தார் அப்பனூர் என்று வடகரையில் எட்டு"
"இடையாற்றி னங்குடிசீர் எப்போதும் வாழூர் மிடைமணலூர் ஈரைந்தாம் வேலி ---- இடைமருதூர் நாணமங்கை பிள்ளைமங்கை நல்லபெருமாள் மங்கை பரணமங்கை தென்கரையிற் பத்து"
சுந்தர பாண்டியவழுதி இத்தீரத்தில் வாழ்ந்த நூற்றெட்டுக் குடும்பங்களைத் தென் பேரைக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு வேண்டிய வீடு, நிலபுலன்களை வழங்கிக் குடியேற்றம் செய்தாராம். குடியேற்ற விழாவின்போது ஒருவர் காணாமற் போகவே, கலங்கிய மன்னனின் கனவில் தோன்றித் தாமே நூற்றெட்டா மவர் என குழைக்காதர் ஆறுதலளித்தார். குழைக்காதர் பிள்ளைத்தமிழின் முதற் செய்யுளிலே ஆசிரியர் 'நூற்றெண்மர் சிந்தை குடி கொண்டிருக்கும் பாமாலை' என இறைவனைப் போற்றி பரவுகின்றார்
உபநிடதமும் தென்திருப்பேரையும்:
ஆதியில் தென் திருப்பேரையில் வாழ்ந்த நூற்றெட்டு குடும்பத்தினரும் ஜைமினி என்ற முனிவரைப் பின்பற்றிய சாமவேதிகள் என நம்பப்படுகிறது. தற்போது இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த ஜைமினி சாமவேதிகள் 'தலவகாரர்' என்று அழைக்கப்படுவதுண்டு. இவர்கள் 'கேனோபநிஷத்' என்னும் உபநிடத்தினைத் தங்கள் தனிச் சொத்தாகக் கருதி வருகின்றனர். சாமம் பாடுவதற்கு அமைந்த வேதம். 'சாமகானம்' 'சாமகீதம்' என்பவை இதன் புகழ்பெற்ற வேறு பெயர்களாகும்.
பதிநாயகனின் பெருமை:
தென்திருப்பேரையில் வீற்றிருக்கும் மகர நெடுங்காதரின் திருமுகத்தை 'வாடாத செந்தாமரை' என்று கோயில் முன் மண்டபத்தில் எழுதப்பட்டுள்ள பாடல் ஒன்று வருணிக்கிறது. அதனை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை.
"கண்டாயோ சோதிக் கதிரவனே! நீயுமிந்த
மண்டலங்கள் எங்கும் போய் வந்தாயே - தண் தமிழ்ச்சீர்
கோடாத பேரைக் குழைக்காதர் நன்முகம் போல
வாடாத செந்தாமரை"
சூரியனே! நீ உலகமெங்கும் போகிறாய். எங்கள் குழைக்காத பெருமானின் ஜோதி முகம் போன்ற 'வாடாத செந்தாமரை' யினைப் பார்த்திருக்கிறாயா? என்று புலவர் ஒருவர் வினா எழுப்பினார். இது இவ்வூர் வரலாற்றின் ஒரு பகுதி ஆகும். கோயிலுக்கு எதிரே கருடன் சந்நிதி போன்ற மறைவு ஒன்றும் இல்லாததால் ஆண்டின் ஒரு பகுதியில் சூரிய ஒளி மூலவரின் முகச் சோதியில் விழுவதைக் கண்டு களித்த புலவர் ஒருவர் இப் பாடலை எழுதியதில் வியப்பொன்றுமில்லை.இவ்வூர் கோயில் முன்பு கெருடாழ்வார் சந்நிதி பிற வைணவத் தலங்களில் உள்ளது போலக் காணப்படவில்லை. அரசாழ்வார் சந்நிதியில் கண்ணபிரானோடு கெருடாழ்வார் எழுந்தருளியிருக்கிறார். இப்பதியின் குலதெய்வமும், காவல் தெய்வமும் வாய்க்கால் கரையில் வீற்றிருக்கும் புள்ளரையனே.
புராண வரலாறு:
பேரையில் பெருமாளின் திருவிளையாட்டினையும் அவருக்குத் துணைநின்ற பிராட்டியார் இருவரின் ஊடலைப் பற்றியும் 'தாமிரவருணி மகாத்மியம்' என்னும் புராணம் விவரிக்கின்றது. அன்றொரு நாள் வானுலக வைகுந்தத்தில் திருமகளின் மணாளனான தாமரைக் கண்ணனிற்கும் ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டது. அன்றும் என்றும் போல் கருநிற காயா மலர் மேனியினையுடைய பூமாதேவியிடம் பிரான் மிகுந்த ஈடுபாடு கொண்டதனைக் கண்டு திருமகள் வெகுண்டாள். துர்வாச முனிவரின் உதவியினை நாடினாள். அவரும் இசைந்தார்; புறப்பட்டார். பூதேவி பெருமானுடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருக்கையில் முனிவர் வந்தார். தன்னைப் பூதேவி புறக்கணித்து விட்டாள் எனச் சீற்றங் கொண்ட முனிவர், 'எவ்வழகு காரணமாக நீ செருக்குற்றாயோ அவ்வழகு இல்லாதொழிக' என சாபமிட்டார் அவனிமாது நிறமிழந்து பின் சாபவிமோசனமாக இத்திருப்பதியில் உள்ள நிகரில் முகில் வண்ணனின் கோயிலில் 'பேரை' என்னும் நாமம் தாங்கித் தவம் புரிந்து மீண்டும் தன் வண்ணத்தைப்பெற்றாள் என்பது வரலாறு
மகரக்குழை:
ஒரு பங்குனித் திங்கள் மதிநிறைந்த உத்திர மீன்கூடிய நன்னாளன்று தவமிருந்த திருப்பேரைச் செல்வி வழக்கம்போல் பெருநை நதியில் தீர்த்தமாடிவிட்டுத் திரு மந்திரத்தை உருவேற்றித் தீர்த்தத்தை அள்ளினாள். அதிலே துள்ளும் கயல் போல மகர வடிவமான இரு குழைகள் சுடர் விடுவதைக் கண்டாள். அவள் உடலும், உள்ளமும் விம்மிச் சிலிர்த்தன. திருப்பேரைச் செல்வி தன் நாயகனான முகில் வண்ணனின் நீண்ட காதுகள் இந்த மகரக் குண்டலங்களை யணிந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தாள். அவர் திருக்கழுத்தின் இரு மருங்கிலும் அழகாக அசைந்தாடுமே என்று பூமகள் எண்ணினாள். உடனே பிரானும் தோன்றி தம் நெடியசெவிகளில் அணிந்து பூதேவிக்கு மகிழ்ச்சியூட்டினாராம். இந்த இனிய, அரிய காட்சியினைத் தேவரும், முனிவரும் காணும் பேறு பெற்றனர். இவர்களும் இறைவனைப் போற்றிப்பரவினர்.
பெயர்க் காரணம்:
பேரையில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமான் அக்குழைகளை அணிந்த காரணத்தால் 'மகர நெடுங்குழைக் காதர்' என்னும் பெயர் பெற்றார். அக்குழைகள் கிடந்த தீர்த்தம் 'மகர தீர்த்தம்' எனப் பெயர் பெற்றது. நிலமகள் 'பேரை' என்னும் பெயருடன் பயன்பெற்ற இடமாதலால் அவ்வூரும் திருப்பேரை என்னும் பெயர் பெற்றது. இங்கு அதுமுதல் தன்நிறம் பெற்ற பூதேவியான திருப்பேரை நாச்சியாருடன், சீதேவியான குழைக்காத வல்லியுடனும் பிரான் கோயில் கொண்டு காட்சி தருகிறார். திருப்பேரை நாச்சியாரின் மற்றுமொரு திருநாமம் பேராபுரி நாயகி. இங்கு இறைவன் சங்கு, கதை, பதுமம் முதலியவற்றை யணிந்தவராய், ஏக வுருவமாய் எழுந்தருளியிருக்கிறார். இவரின் தன்னிகரில்லாத் தனிச்சிறப்பு மகர வடிவமான நீண்ட காதணிகளையணிந்து, குழைகின்ற காதுகளாக அமைந்து அடியார்களின் அல்லல்களை நீக்கும் அன்புத் திருவுருவமாக விளங்குவது இவ்வூரிலிருந்து எழும் வேத பாராயண ஒலியினையும் செந்தமிழ் வேதமாகிய திருவாய்மொழி, பாராயண ஒலியினையும் எக்காலத்தும், எப்போதும் குழைக்காதரின் நெடிய காதுகள் குளிரக் குளிர கேட்டுக்கொண்டேயிருக்குமாம். மகரக் குழையானின் காதுகளுக்கு மற்றுமொரு விருந்தினையும் ஆழ்வார் படைக்கிறார். அதுதான் 'பிள்ளைக்குழா விளையாட்டொலி' யாகும். சிறார் சிறுமணல் வீடுகட்டி அழகனை அதிலே நிறுத்திச் சேவிப்பார்களாம். அந்த மாயனும் இந்த இளம் நெஞ்சுகளுடன் கைகோர்த்தும், காலடித்தும் விளையாடுகிறான் என்பது மக்கள் நம்பிக்கை. விண்ணை முட்டும் இந்த விளையாட்டொலியினைக் கேட்டு மகிழத்தான் மகரக்குழைக் காதர் தம் கோயிலுக்கு முன் வீற்றிருக்கும் கெருடனை வாய்க்கால் கரைக்கு அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கூடுபுனல்துறை:
ஒரு தடவை தன் பாவம் தீருவதற்காகத் தென் திருப்பேரை மகரக்குழையானை வேண்டி மகரத் தீர்த்தத்தில் நின்று தவம் புரிந்தான். அன்று பங்குனி மாதம் முழு மதி நாள். அப்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடப் பகவானும் அம்மஞ்சன நீரில் சிறிது கையில் எடுத்துவிடவும் வருணன் தமது இழந்த படையினையும், நகரினையும் அசுரரிடம் இருந்து மீண்டும் பெற்றான் என்று இவ்வூர் தலபுராணம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே நாளன்று வருணன் பகவானுக்குத் திரு மஞ்சனம் செய்வதாக நம்பப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களும், தேவவுலகத் தீர்த்தங்களும், பொய்கை, கிணறு, குளத்துத் தீர்த்தங்களின் சிறப்பும் கூடுவதாக என்று பெருமான் அருள் புரிந்தமையால் இத்திருமஞ்சனத்துறை 'கூடுபுனற்றுறை' என்ற பெயர் பெற்றது. விதர்ப்ப நாட்டிலே ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. பருகவும் நீரில்லாமல் உயிர்கள் தவித்தன. விதர்ப்ப நாட்டரசனும் அவனது பரிவாரங்களும் தென்திருப்பேரை வந்து கூடுபுனல் துறையில் நீராடி குழைக்காதனை வழிபட, தீங்கின்றித் திங்கள் மும்மாரி பெய்து அவன் நாடெல்லாம் செல்வம் கொழித்தது என்பது வரலாறு. இப்பிரானைச் சென்று சேவித்தால் பசி நீங்கும். பொருள் பெருகும். பகவான் இரட்சிப்பார்.
மூலவரும், உற்சவரும் :
கருவறையில் கம்பீரமான தோற்றத்தில் மூலவரான 'மகராயுத கர்ணபாச்சர்' (மகர பூஷணம்) தமது தேவியர் இருவரான குழைக்காத வல்லித் தாயாருடனும், திருப்பேரை நாச்சியாருடனும் எழுந்தருளியுள்ளார். கிழக்கே திருமுக மண்டலம் நோக்க வீற்றிருந்த திருக்கோலத்தில் வலது காலைத் தொங்கவிட்ட வண்ணம், இடது காலை மடித்து வைத்தவராய் வீராசனம் செய்தபடி காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன் இருமருங்கிலும் பிருகுரிஷியும், மார்கண்ட ரிஷியும் வீற்றிருக்கின்றனர். மூலவரின் அருளாசியினைப் பெற முழங்கு சங்கக்கையனான கௌதுகபேரர் அமர்ந்திருக்கிறார். கருவரைக்கு முன்பு மண்டபத்தில் மாண்புற உற்சவ மூர்த்தியான முகில் வண்ணன் சீதேவி, பூதேவித் தாயாருடன் காட்சி தருகிறார்.
இலக்கியக் கொடை:
தண்டமிழ் சீர்கேடாத இப்பேரையில் சங்க காலந்தொட்டு இந்நாள் வரைத் தமிழ்புலவர் பரம்பரை இருந்து கொண்டே வருகிறது. நம்மாழ்வாருக்குக் குழைக்காதரிடம் மிகுந்த ஈடுபாடு என்பது ஊரரிந்த உண்மை. 'மாறன் அலங்காரம்' என்னும் இலக்கண நூலையளித்தவர் தமது ஊர் தென்திருப்பேரை என்று கூறியுள்ளார். ஸ்ரீராமப்பாவலர் என்பவர் தமக்குச் சாகாத சந்ததி தந்தருள வேண்டும் என்று செய்த பிரார்த்தனையே 'சந்தானப் பத்து' என்ற இனிய நூலாகும். குழைக்காதர் மீது இரண்டு கலம்பகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை 'குழைக்காதர் கலம்பகம்', 'திருப்பேரை கலம்பகம்' ஆகும். குழைக்காதர் மீது பாடப்பெற்ற சிறந்த சிற்றிலக்கியங்களில் ஒன்று குழைக்காதர் பாமாலையாகும். இது 103 பாடல்களைக் கொண்டது திங்கள் ஒன்றாகச் சிறையிருந்த நாராயண தீக்ஷதர் பூமாலை கட்டி வழிபட இயலாத நிலையில் குழைக்காதருக்குச் சூட்டிய மாலை இப்பாமாலை ஆகும். இதனைச் 'சிறை தந்த செல்வம்' என்றும் போற்றுவதுண்டு, இதனைத் தவிர மகரக் குழையன் மீது எண்ணற்ற ஊஞ்சல் பாட்டு, தாலாட்டு, கிளிக்கண்ணி, கீர்த்தனைகள் இராகத்துடன் இசைத்துப் பாடுவதற் கேற்றபடி எழுதப்பட்டுள்ளன. திரு பி.ஸ்ரீயின் தகப்பனாரான கவி பிச்சுவையங்கார் எழுதிய இரத பந்தனச் செய்யுள் ஒன்று மண்டப முகப்பினை இன்றும் அலங்கரிக்கிறது.
இரத பந்தனம்
இணையொத்து வாழ்வோர்க் கிடரைத் தவிர்க்கும் பணைகாண் சீர்செல்வம் பாலிக்குங் குணமீந்த வாதழைக்கு மெல்லோர்க்கும் ஆந்தன மிப்பார்வாழ் சுவாமி குழைக்காதர் துணை.
- கவி பிச்சு அய்யங்கார்
கல்வெட்டும் காலமும்:
தென்திருப்பேரை கோயிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் சிலவற்றை இந்திய அரசின் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையினர் எடுத்தெழுதிப் பதிப்பித்துள்ளனர். அவற்றில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் பின்வருமாறு காணப்படுகின்றது.
இராசகேசரி பன்மரான செயங்கொண்டான் தஞ்சாவூரிலிருந்து ஆண்ட முதலாம் இராச இராச சோழனின் 26-வது ஆட்சியாண்டில் (கி.பி. 1010-1011) திருவழுதி வளநாட்டில் கைதவ சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் குடநாட்டு கலித மங்கத்து மாதவன் உதயதிவசுரன் என்ற பிராமணுக்கு நிலம் விற்றுக் கொடுத்தார்கள். (கல் வெட்டு எண். 283-1949).
இக்கல்வெட்டு 11-ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது. இக் கல்வெட்டுச் செய்திக்கும், கோயிலுக்கும் உள்ள தொடர்பு தெளிவாக இல்லை. இராச ராசனுடைய ஆட்சிக்காலம் குறிக்கப்பட்டிருப்பதால் இத் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பும், தொன்மையும் பெற்றிருப்பதை காண்கிறோம்.
பெருமாள் : மகர நெடுங்குழைக்காதர்
தாயார் : குழைக்காதுவல்லி
விமானம் : பத்திர விமானம்
தீர்த்தம் : சுக்கிர புஷ்கரணி
வீற்றிருக்கும் திருக்கோலம் கிழக்கே பார்த்த சந்நிதி
சுக்கிரன், பிரமன், ஈசானியருக்கும், ருத்திரருக்கும், பிரத்யக்ஷம்.
குழைக்காதர் திருவடிகளே சரணம்.
எழுதியவர்.
திருநெல்வேலி திருமதி பத்மஜா அனந்தராமன்,
6-6-92.
------
வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித்
தாமரைக் கண்ணனென் நெஞ்சி னூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்”
-- திருவாய்மொழி.
ஸ்ரீ குழைக்காதர் கலம்பகம்
- நூல்முகம்
தமிழ் மொழியிலுள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று கலம்பகம் என்னும் பிரபந்தம் ஆகும். கலவைச் சுவை நிரம்பிய இப்பிரபந்தம் சற்றுப் பின்னர் தோன்றிய இலக்கியம் எனலாம். கலம்பகம் என்ற பெயரே இப்பிரபந்தத்தின் இயல்பை விளங்கச் செய்வதாயிருக்கிறது. இச்சொற்குக் கலவை என்பது பொருள். பல வகையான மலர்களைச் சேர்த்துக் கட்டிய மலர் மாலையினைக் கதம்பம் என்று கூறுவதுண்டு. இது 'கதம்பகம்' என வட மொழியில் வழங்கப் பெறும். பல்வேறு வகையான நிறமும், உருவமும், மணமும் கொண்ட மலர்களால் தொடுத்த மலர் மாலை போன்று இப்பிரபந்தமும் பல்வேறு வகைப் பாக்களையும், பொருள்களையும், சுவைகளையும் கொண்டு வரும் என்னும் உவமை நயம் பொருந்தவே இது 'கலம்பகம்' என்னும் பெயர் பெறுவதாயிற்று.
'களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலத் தொடையல் ..... .... ... '
என்ற தொண்டரடிப் பொடியார் பாத் தொடரால் இது புலப்படும்.
தமிழில் வைணவச் சார்புடைய கலம்பகங்கள் மிகக் குறைவு. தென் தமிழ் நாட்டில் நவதிருப்பதிகளுள் ஒன்றான தென் திருப்பேரை நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட வைணவத் தலமாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் பிரானின் திருநாமம் ஸ்ரீ மகராயுத கர்ண பாச: தமிழில் மகர நெடுங்குழைக்காதர் என்று வழங்கப்படுகிறார். இப்பதியின் தனிச் சிறப்பு என்னவென்றால் இங்கு இரண்டு கலம்பகங்கள் உள்ளன. ஒன்று அபிநவ காளமேக அநந்த கிருஷ்ணையங்கார் எழுதி வெளியிட்ட 'திருப்பேரைக் கலம்பக' மாகும். பிறிதொன்று தான் 'குழைக்காதர் கலம்பகம்'. இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் பற்றிய விவரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதுவரை அச்சிடப்பட்டதாகவும் தெரியவில்லை. எங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கைப்பிரதியின் படிவந்தான் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 'ஏற்கனவே ஒரு கலம்பகம் இருப்பது தெரிந்தால் இந்த திருப்பேரை கலம்பகத்தை எழுதியிருக்க மாட்டேன்' என எனது தாத்தா அநந்த கிருஷ்ணையங்கார் கூறியதுண்டு. தெரிந்திருந்தால் 26-உறுப்புக்களைக் கொண்ட 'திருப்பேரை கலம்பகம்' நமக்குக் கிடைத்திருக்குமா?
"பல்பூ மிடைந்த படலைக் கண்ணி"
(பெரும்பாண்: 174) என்ற வரிக்கு 'பல பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மாலை' என நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். யாப்பெருங்கல விருத்தியில் அடிகள் எழுத்து ஒவ்வாது வெவ்வேறு வகையில் அமைந்து வரும் கலிப்பாவிற்கு 'கலம்பகக் கவி' என்ற பெயர் தரப்படுகிறது. (யாப்.வி:95) இவையும் இப்பெயர் காரணத்தை இனிது விளக்குகின்றன.
'கலம்பகம்' என்ற சொற்றொடரினை கலப்பு + அகம் எனப் பிரித்துச் சொற்பொருள் கூறுவதுண்டு. கலப்பு என்பது கலம்பு என நின்றது. கலம்பகத்திற்கு உறுப்பாக அமைந்த பல துறைகள் கலத்தலைத் தன்னகத்தே கொண்ட நூல் எனப்பொருள் விரிப்பதுண்டு. சிலர் பன்னிரண்டு மரக்கால் என்னும் பொருள்படும் கலம் என்னும் சொல்லும், கடவுளின் ஆறு குணங்களைக் குறிக்கும் 'பகம்' என்னும் சொல்லும் உம்மைத் தொகையாகச் சேர்ந்து 18 உறுப்புக்களையுடைய நூல் என இப்பெயர் காரணப் பெயராயிற்று என்பர். புய வகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல், என்னும் பதிணெண் உறுப்புக்களைக் கொண்டு பலவகைப் பாக்களும், பாவினங்களும் விரவிவர, பல்வகை நயங்களும் செறிந்து வர அந்தாதித் தொடை அமையப் பாடப்படுவது கலம்பகம் ஆகும். நாளடைவில் பதினெட்டு என்ற வரையறையைத்தாண்டி இருபத்தாறு இலக்கிய உறுப்புக்கள் வரை கலம்பகத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. தெய்வங்களையும், மன்னர்களையும் தலைவர்களாகக் கொண்டு இப்பிரபந்த வகைகள் தோன்றின. தெய்வத்தைப் பொருளாகக் கொண்டு எழுந்த கலம்பக நூல் பெரும்பான்மையானவையாகும். 'அழகர் கலம்பகம்' ' திருப்பேரைக் கலம்பகம்' என்றார் போன்று தெய்வத்தினைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதுடன், தலத்தின் பெயரால் 'திருவரங்கக் கலம்பகம்' 'திருவேங்கடக் கலம்பகம்' போன்றன எழுதப்பட்டன. நந்திக் கலம்பகம் போன்று பிரபந்தத் தலைவர்கள் பெயரில் எழுதப்பட்ட கலம்பகங்களும் உண்டு. கி.பி.9-ஆம் நூற்றாண்டு துவங்கி இன்று வரை எண்ணற்ற கலம்பக நூல்கள் வெளி வந்துள்ளன. பிற்காலத்தில் கலம்பக உறுப்புகாளான அம்மானை, தூது ஊசல், குறம் போன்றவை தனித் தனி நூலாக விரிந்தன.
முதன் முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள 'குழைக்காதர் கலம்பகம்' இனிய எளிய 101 செய்யுட்களைக் கொண்டது. இது காப்புச் செய்யுளுடன் துவங்குகிறது. காப்பு என்றால் காத்தல் என்று பொருள். இது கவி தாம் எடுத்துக் கொண்ட நூல் இனிது முடியும் பொருட்டு ஆன்றோர் வழக்கப்படி வழிபடு கடவுளையாவது, ஏற்புடைக் கடவுளையாவது வணங்குவது ஆகும். இது காத்தருளும் கடவுள் பற்றிய வணக்கத்துக்கான தொழிலாகு பெயர் ஆகும். அடியார்களைப் பற்றிய நூல்களுக்கு கடவுள் வணக்கம் கூறுவது போல கடவுளைப் பற்றிக் கூறும் நூலுக்கு நம்மாழ்வாரைக் காப்புச் சொல்கிறார் ஆசிரியர். இந்நூலின் சொற்கள் பலர் காதில் போட்டுப் பார்த்து கனிவு பெற்றிருக்கின்றன என்பதனை இக்கலம்பகத்தின் முதல் வரியே காட்டுகிறது.
செவிதோறுங் கனிந்த செந்தேன்
தெளிந்த சொல்.........."
(செவிதோறும் கனிந்த சொல், செந்தேன் தெளிந்த சொல்' என்று கூட்டுக.)
புவியிலுள்ளோர் எடுத்துச் சொல்லிப் புகழ்கின்ற பேரையின் புகழினைப் பாடுவது இக்குழைக்ககாதர் கலம்பகமாகும். பராங்குசன் எனப்படும் நம்மாழ்வார் பிற சமயங்களாகிற யானைகளுக்கு அங்குசம் போன்றவன். ஆழ்வாரை யானையென்று உவமித்தற்கேற்ப கவிமதம் பொழியும் ஞானமாகிற அங்குசத்தை உடையது என்றும் கூறினார். பாகனைப் பற்றித் தொடர்கிறது. யானை விலங்கறுத்த பாகனல்லவா? பாகனென்ற சொன்னதற்கேற்ப புள்ளின் பாகனென்று கூறினார். இக்கலம்பகமும் பாகன் புகழைத் தானே சொல்கிறது. களிறு தானே காக்கும் என்ற தனிப் பொருளும் காண்க.
காப்புச் செய்யுளிற்குப் பிறகு அவையடக்கம் காணப்படுகிறது. நூலாசிரியர் கற்றோர் குழுமிய அவையில் தம்மியல்பை வெளியிட்டு அடங்கிப் பேசுதல் வழக்கம். எதற்காக இந்நூலைச் செய்தார் என்ற வினா எழும்பலாம். உலகம் தழைக்கவும், மன்னர்கள் நீதி நெறி தவறாமல் ஆட்சி புரியவும், வேதங்கள் நிலை பெறவும் இந்நூலினை எழுதினார்.
"குழைக்காதர் கலம் பகமென் றொரு பேர் நாட்டிக்
கொழித்த தமிழ் சுழித் தெடுத்துக் கூறும் பாடல்"
என்று கூறுவதின் மூலம் ஆசிரியர் தமது தமிழ்ப் பற்றே நூலினைப் படைத்ததற்குத் தலையாய காரணம் எனக் காட்டுகிறார். இந்நூலில் அவரது தமிழ் பற்று கொழிக்கின்றது. தமிழ்ப்பாடல்கள் சுழித்தெழுகின்றன! இந்நூலின் கண் சொற்குற்றங்கள் நிரம்பி வழிகின்றன. செய்யுள் உறுப்புகளாகிற சீர், தளை, அடி, தொடை போன்றவற்றில் எத்தனையோ பிழைகள் உள்ளன. அவை சுட்டிக் காட்டாமலே புலப்படுகின்றன. தமது கவிதை 'ஒருபொருட்கும் ஒவ்வாது; காசு பெறாது' என மிகத் தாழ்மையுடன் நூலாசிரியர் கூறிச் செல்வதைக் காணலாம். ஆனால் அவர் மகரக் குழையனின் திருநாமத்தை மாண்புடன் அல்லவா கூறுகிறார்.
'ஒரு பொருட்டு மொவ்வாத தேனினுமென் சொற்
பிழைக்காக இகழ்வரோ பெரியோர் ஞானப்
பெருமான்றன் திருநாமம் பெற்றக் காலே”
ஒருவரும் தனது சொல் புன் சொல் எனச் சொல்ல மாட்டார்கள் என நம்புகிறார் ஆசிரியர். ஏனென்றால் படிப்பவர் தம் பெருமையும் அதில் தானே அடங்கியிருக்கிறது. கற்றறிந்த பெரியோர் முன் எவ்வளவு தன் அடக்கத்துடன் பேசுகிறார் என்பது புலனாகிறது.
பாட்டியல் விதியின்படி பூ என்னும் மங்கலச் சொல்லுடன் “குழைக்காதர் கலம்பகம்” மங்களகரமாகத் துவங்கி இனிய எளிய ஆற்றொழுக்கு நடையில் கலம்பக உறுப்புக்கள் விரவிவர 100 செய்யுட்களைக் கொண்டு விளங்குகிறது. நூலின் இறுதியில் ஒரு வாழ்த்துப் பாடலுடன் நூல் முடிவடைகின்றது. இந்நூல் முழுவதையும் கற்றுணர்ந்தால் புலவர் பெருமாளிடம் கொண்ட ஈடுபாடும், தமிழின் மீது கொண்ட பற்றும், இத்திருப்பதியின் மீதுள்ள பக்தியும் நன்கு புலனாகின்றன. “பேரை மால் குழைக்காதர்” 'மகரக் குழையனே' 'பேரை வாழ் முகிலே' என்று பலவாறு எம்பெருமானை விளித்துப் பாடுகிறார். இராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதராத்திலும் நூலாசிரியர் கொண்ட மிகுந்த ஈடுபாட்டினை இக் கலம்பகம் எடுத்துக் காட்டுகிறது.
'கானகம் புகுந்து விராதனை வதைத்துக் கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பனகை கரிய மூக்கரிந்து கரனுயிர் குடித்துக் கருங்கடல் வழிபடக் கடந்து”
என இராமபிரானின் சாதனைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார். சகடம் உடைத்தவன், மருதிடைப் பாய்ந்தவன், நரசிம்மாவதாரம் எடுத்தவன், குறள் வடிவானவன், இராவணனை வென்றவன்...ஏன் எல்லாமே மகரக் குழையனே என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். மேலும் அப்பிரானைப் 'பேரேசர்', 'வழுதித் திருநாடன்' எனவும் போற்றிப் பரவுகின்றார். அப்பிரான் எழுந்தருளியிருக்கும் பதியானத் தென் திருப்பேரையின் செழிப்பினை அடிக்கடி நினைவு கூர்கிறார்:
"மேழி வலம் புரிபழனப் பேரை நாட்டில்" என்றும், (19)
"வாளைப் பகடு புகுந்தழக்கும் வயல் சூழ்
வழுதித் திருநாடன்" (17)
என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆசிரியர் தாமிரபரணி நதியினையும் பாராட்டத் தவறவில்லை.
"வணிகர் போற் கடை நிலம் புரக்க
வருபெரும் பொருநைத் துறைவனே"
அந்த நதியின் தென் கரையிலிருக்கும் இப் பேரையினைத் 'தமிழ்ப்பேரை' 'அறிபேரை' 'வண்டமிழ்ப் பேரை' எனப் பலவாறு போற்றுகின்றனர். மேலும் இப்பதியின் பெருமை வாய்ந்த தலவகார சாம வேதிகளைக் குறிப்பிடத் தவறவில்லை;
'நூற்றெட்டு வேதியர் தம் புகழ் பாடி யாடீரூசல்' (19)
மேலும் இங்கிருக்கும் ஆடவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் திருக்குறள் பாணியினைப் பின்பற்றுகிறார்.
"கானார் கருங்குழலார் காமத்தின் பால் மறந்து
பேரை அறத்தின் பொருட்டு பொருட்பாலே" (44)
அங்கிருக்கும் ஆடவர் காமத்தை மறந்து இல்லறத்தை நடத்தப் பொருள் தேடிச் சென்றனராம். திருக்குறளில் காணப்படுவது போல் காமத்துப் பால் சிறிது; அறத்துப் பால் நடுத்தரம்; பொருட்பால் அதிகமாக இந்நூலிலும் இடம் பெறுகின்றது.
இந்நூல் கற்றோரும், மற்றோரும் படித்து மகிழத்தக்க விதத்தில் சொற் சுவை, பொருட்சுவை, பக்திச் சுவை சொட்டச் சொட்ட அமைந்துள்ளது. இதனைப் படிக்கும் போதெல்லாம் அந்த ஊர் பேர் தெரியாத புலவரின் புலமைத் திறமை, கவிதையாற்றல், கற்பனை வளம் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. அணிகளும், கவிதை நயங்களும் விரவி நிற்க ஆசிரியர் கூறுவது போன்று, 'பாகையும் பிழிந்து தேனையுங் கவர்ந்து பாலுடன் கலந்த மொழி சேர்' ந்த நூலே இக்குழைக்காதர் கலம்பகமாகும். நலமிகும் பெருஞ்சுவையினை நமக்கு இனிதளிக்கும் குழைக்காதரை வாழ்த்தி வணங்குவோமாக:
"வாழி புகழ் பேரை மகரக் குழை வாழி
வாழி தமிழ் நூற்றெட்டு மாமறையோர் - வாழியவே"
1- குழைக்காதர் கலம்பகம்
காப்பு
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
செவிதொறுங் கனிந்த செந்தேன்
தெளிந்தசொல் தவறுண் டேனும்
புவிபுகழ்ந் தெடுத்த பேரைப்
புகழ்க்கலம் பகத்தைக் காக்க!
பவவிலங் கறுத்த புள்ளின்
பாகணைத் தொடர்ந்து பற்றிக்
கவிமதம் பொழியும் ஞானப்
பராங்குசக் களிறு தானே, -
அவையடக்கம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மழைக்காவல் புரந்துலகம் தழைப்ப நீதி
மன்னவர்செங் கோலளிப்ப மறைநூல் வாழக்
குழைக்காதர் கலம்பகமென் றொருபேர் நாட்டிக்
கொழித்ததமிழ் சுழித்தெடுத்துக் கூறும் பாட
லுழைக்காவ லடிதொடைசீர் தளைமா ருடல்
ஒருபொருட்டு மொவ்வாத தெனினு மென்சொற்
பிழைக்காக விகழ்வரோ பெரியோர் ஞானப்
பெருமான்றன் திருநாமம் பெற்றக் காலே -
நூல்
வண்ணக ஒத்தாழிசைக் கலைப்பா
பூமாது நலம்பெருக்கப் புவிமாது வளஞ்சுரப்பத்
தேமாலை புனைந்தேத்தித் தேவர்களும் தலைகுனிப்ப
நீதியரும் பிக்கருணை நிறைபுனலா நூற்றெட்டு
வேதியரும் திருப்பேரை வியனகநூற் தழைத்தோங்கக்
கவிச்செல்வர் மூதறிவிற் கனிந்துருகும் பழம்புலவர்
செவிச்செல்வந் தவறாது செந்தமிழின் தேனிறைப்ப
வரிவளைக்கை யரம்பையர்கள் மலர்க்கவரி யெடுத்தியக்கத்
தருமலர்ப்பூந் தாதருந்தித் தமிழ்த்தென்ற லடிவருட
வெளியகத்தே நின்றுயர்ந்த வீங்குமணித் தூணிரையின்
ஒளிகெழுமி யிருள்துடைத்த வோலங்கு மண்டபத்துட்
காய்சினத்த கோளரியின் கழுத்தளக்கச் சுமந்தேந்தும்
ஆசனத்துக் கடவுளருக் கரசெனவீற் றிருந்தனையே
இஃது பன்னீரடித்தரவு
கோதுபிடித் தரித்தமுதங் கொடுத்தநீ யளைகவர்ந்து
சூதுபிடித் தடிச்சுவடு தொடர்ந்துபிடித் தசோதையெனு
மாதுபிடித் தடித்தவுடன் மண்ணையுண்ட வாய்மலர்ந்து
காதுபிடித் தழுதுமலர்க் கைபிடிக்க நின்றனையே
பெருவிருந்தா யொருவரைப் பிறந்துவளர்ந் தெதிர்ப்படுமுன்
னருகிருந்த மதலையைமற் றவுணனழித் திடுமென்றே
திருவுளந்தான் விரைவிரைந்து சிறுபொழுது மொருவயிற்றிற்
கருவிருந்து வளராமற் கற்றூணிற் பிறந்தனையே.
விரிகடலும் புவியுமுண்டு விசும்பளக்க நின்றுயர்ந்து
தரும்பிரம னடிவீழ்ந்து தலைதாழுந் தன்மையினால்
பெருகிவரும் பிரளயமுன் பேருருவம் போன்றதென்னே
திருவுருவ மீனாகிச் செலுவிலெடுத் தடக்கினையே
இவை மூன்றும் நாலடித்தாழிசை
பயிரவி யெனவரு படுகொலை யலகையின்
உயிரையு முலையுட னொருவழி பருகினை
பிடியென நொடியினிற் பிறையெயி னருடிபட
வடிமத கரியொடு வலிகொடு பொருதனை
ஒருபத சிரமொடு மிருபது கரமுடன்
பருவரை புறமிடு பரிபவ மருளினை
இதுபொரு ளிதுதவ மிதுகதி யெனமுது
சதுமறை படவற சமயமு மருளினை.
இவை நான்கும் ஈரடி அராகம்
மலைகுனிய விசும்பளக்கு மதிவிலங்கை வழிதிறப்பச்
சிலைகுனியப் புயநிமிரத் திருச்சரமொன் றெடுத்தனையே
மூவடிகேட் டீரடியான் மூவுலகு மளந்தசெழும்
பூவடியிற் பிறந்த கங்கைப் புனலாட நின்றனையே.
இவையிரண்டும் ஈரடி அம்போதரங்கம்
துட்டவா ளரவவடந் துவக்கிவரை திரித்தனையே
வட்டவான் குறலாமை வடிவெடுத்துக் கிடந்தனையே
முட்டவான் முகடதிர முழங்குகடற் கடைந்தனையே
பட்டவா ரமுதமரர் பசிக்குவிருந் தளித்தனையே.
இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம்
மருதொடு சகட மொடித்தனை மணிமுடி யரவினடித்தனை
பருவரை நிமிர வெடுத்தனை பரிமள துளப முடித்தனை
இவை நான்கும் முச்சீரடி அம்போதரங்கம்
மயிலு மறிவுநீ மலரு மணமுநீ யியலு மிசையுநீ யெளிது மரிதுநீ
உயர்வு மிழிவுநீ யுடலு முயிருநீ புயலு மழையுநீ புறமு மகமுநீ
இவையெட்டும் இருசீரடி அம்போதரங்கம்
எனவாங்கு - இது தனிச் சொல்
அரும்பவிழ் குவளையும் சுரும்பவிழ் குமுதமும்
கருங்கொடி வள்ளையும் கமலமு மலர்ந்து
கண்ணும் வாயும் வண்ணவார் குழையும்
திருமுகச் செவ்வியு மொருமுகப் படுத்திக்
கண்டவர் துவளுங் காட்சியிற் றுவன்றி
நலங்கிளர் மணிநிறை நன்னீர்ப் பண்ணை
பொலங்கொடி மகளிரிற் பொலிந்த பேரையுண்
மகரக் குழையன் மலரடி நோக்கி
யுச்சியிற் றெழுதகை யுரியவ ருளரேல்
வச்சிரத் தடக்கை வருபெரு மன்னரிற்
சிறந்து விதிப்படி செங்கோ னடாத்தி
மதிக்குடை கவிப்ப மண்ணுமா கமுமே. - 1
இது பன்னீரடி நிலை மண்டிலவாசிரியச் சுரிதகம்
நேரிசை வெண்பா
மாகவலைப் பட்டழிந்து மங்கைமார் தங்களனு
போகவலைப் பட்டமனம் போதாதோ - நாகவணைக்
கொன்புரக்கு நேமிக் குழைக்காத ரேயடியேற்
கன்புரக்கு மோவொருகா லம். - 2
கட்டளைக் கலித்துறை
ஒருகை முகக்குஞ் சரஞ்சொன்ன பேரென் றுரைக்கும் பொற்கா
தருகை முகக்கு மயில்விழி யீரருட் பேரையின்மான்
முருகை முசுக்கும் பசுந்தண் டுழாயென்று மொய் குழலச்
சருகை முகக்கு மிருக்குமுள் ளாவி தழைக்குமென்றே - 3
பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
தழைத்தெழுங் கிரணப் பனிநிலா மதியந்
தடங்கற்கடற் பரிதியென் றுதிக்கும்
தமிழுடன் பிறந்த மந்த மாருதமும்
தமுற்குழம் பெடுத்தெடுத் திறைக்கும்
குழைத்தகுங் குமச்செங் களபலே பனமுங்
கொதித்துயிர் குடிக்குமென் னளவிற்
கொடுவினை விளைந்த காலநல் லனவுங்
கொடியவா மென்பதின் றறிந்தேன்.
கழைக்குலந் தடிந்து சந்தனந் திமிர்ந்து
காழகிற் குழாமுறித் தெதிர்ந்து
கரிமுக மருப்புங் கவரியுஞ் சுமந்து
கனகமுந் தரளமுங் கொழித்து
மழைக்குலம் பிளிறு நெடுஞ்சுரங் கடந்து
வணிகர்போற் கடைநிலம் புரக்க
வருபெரும் பொருளைத் துறைவனே குவளை
வளைவயற் பேரைமா தவனே. - 4
எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
தவசரியை குரியையிது தவிரவினை கொலைகளவு
தனைநினையு மறிவிலி யைமா
கவலைபடு விகடபக டனையகப டனையுனது
கழலிணைக ளடிமை கொளுவாய்
நவமணியு மலர்மகளு மிளமதியு மதகளிறு
நறைகமழு மமுது மெடவே
திவலையெறி கடல்கடையு நிகரில்முகல் வணவமரர்
தெளியுமரு மறைமு தல்வனே. - 5
சந்தத் தாழிசை
மறைமுடித் தலையி லுறமிதித் தபத மருதிடைத்
தவழு மாயனார்
வழுதிநா டர்மக ரக்குழைக் கடவுள் மழைகொழித்
தொழுகி யருவியாய்
நிறைமுடித் தலையி லருவிகுப் புறநி லாவுதித்
தொழுகு வெற்பனே
நீயளித் தவீவை வேயின் முத்தமென நிச்சயப்பட
மொழிந்த தேன்
பிறைமுடித் தலையில் வடியவிட் டதொரு பின்னல்
பட்டசடை யில்லையே
பிணையெ டுத்ததிலை திரிபு ரத்தையழல் பிழிய
விட்டநகை யில்லைமா
கறைமுடித் தமிட றில்லை முக்கணொடு கரது
பாலமிலை யெங்கள்மால்
கழலினைத் தொழ மறந்த தாலெமர்கள் கைவீசக்
கடவ தாகுமே - 6
சந்தவிருத்தம்.
ஆகமொன் றிரண்டு கூறுகண்டு பண்டை யாடகன்ற னங்க மடுபோர்
வாகைவென்றி கொண்டு பேரைவந்த கொண்டல் மாயவன் துயின்ற கடலே
பாகையும் பிழிந்து தேனையுங் கவர்ந்து பாலுடன் கலந்த மொழிசேர்
கோகிலங்க ளின்றென் னாவிமென்று தின்று கூவுகின்ற தன்பர் குறையே. - 7
கட்டளைக் கலித்துறை
குறைக்கொழுந் தாயமு தின்கொழுந்தாரை கொழிக்கு மந்திப்
பிறைக்கொழுந் தார்மதிட் பேரைப் பிரான்தம்பி பின்வரவென்
முறைக்கொழுந் தாவெனு மென்மொழிச் சீதை முலைமுயங்கி
மறைக்கொழுந் தாயன்று கைம்மாறு செய்தனன் வானவர்க்கே. - 8
வண்ண விருத்தம்
வானவர் தானவர் மாமனு ஜாதிகள் வாழ்வது சாவதுமேல்
வானுல காள்வது கீழ்நர காள்வதுன் மாயையி னாலலவோ
ஏனமு மாயொரு வாமன னாகிய ராமனு மானவனே
ஞானவ ரோதய பேரைய ராதிப நாரண காரணனே. - 9
சந்தவிருத்தம்
கார ணங்குறி யாய்வ ழங்கிவள் காதன் மங்கையரே
வார ணந்தனில் வீதி வந்தனன் மாலை தந்திலனே
நார ணன்ஜக பூர ணன்றிரு ஞான சிந்தனையால்
ஆர ணம்புகழ் பேரை யம்பதி யாழி யம்புயலே. - 10
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆழி மாதவன் பேரை மாலளந் தவனி யுண்டவன்
பவனி கண்டபின்
தோழி மீரவன் துளப மாலையென் துணைமு
லைக்கிடார் குழல்மு டிக்கிலார்
ஊழி வேர்விழுங் கங்கு னட்டதும் உடுப திக்குவே
றழல்கொ டுத்ததும்
கோழி வாயையுங் கூவொ ணாமல்மண் கூறு
கொண்டதும் கொடிய தாயரே. - 11
நேரிசை வெண்பா
ஏடவிழுங் கண்ணிக் கிரப்பா ளவள் கலைநாண்
கூடவிழுங் கண்ணீர் குறையாதோ - மாடமதில்
வீதிமக ரக்குழையும் வெண்மதியுந் தோய்பேரை
நீதிமக ரக்குழைய னே. - 12
கட்டளைக் கலித்துறை
குழைத்திருப் பாரமு தக்கனி வாயிற் குழல் பதிக்குங்
கழைத்திருப் பாலிசை கண்டருள் வோர்குழைக் காதர் நன்னாட
டிழைத்திருப் பார்மணற் கூடலென்றாலு மிறப் பதன்றிப்
பிழைத்திருப் பாருமுன் டோவென்பார் சூள்பொய்த்த பின்னையுமே. - 13
தாழிசை
பின்னை யைத்தழு விப்பு ணர்ந்தருள் பெற்ற
செங்கனி வாயிர்னா
பெருமி தத்தமிழ் முறைகொ ழித்தறி பேரை
யம்பதி யன்னமே
யன்னை யிப்படி மலர ணைக்கு ளணத்த கையி
னெகிழ்த்துவே
றடைகொ டுத்த கபாட நீவியடிச்சி லம்பொழி
யாமலர்
முன்ன டித்தெரி யாதி ருண்டு முகிழ்ந்து கண்புதை
கங்குல்வாய்
முளரி யம்பத நோவ வன்பினில் மூத றிந்தவர்
போலவந்
தென்னை யிப்படி வாழ வைத்தது மின்ப மோகநல்
வாழ்வுபற
றியான்ம னுக்கிலு நான்ம றைக்கும திப்பி
றப்பினி லில்லையே. - 14
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
ஏது காரணத் தெவர்க ளேருமற் றிழிகு லத்தெழும்
புலை ரேனுமுட்
சாதிபேதமற் றவர்கள் மிச்சிலைத் தருவ ராயினும்
புனித வாழ்வுதா
னாத லாலருட் பேரை நாரணர்க் கடிமை யானவுத்
தமர்ச ரோருகப்
பாத தூளிபட் டுலகம் வாழ்தலிற் பரவு வார்பதத்
தளவி லாததே. - 15
தரவு கொச்சகம்
அளவறியாப் புனலிடைப்பட் டழுந்தினர்போ லணியிழையீர்
விளைவறியாப் பேதைமயல் வெள்ளத்தி லழுந்துவளேற்
களவறியாத் தயிர்நுகர்செங் கனிவாயர் மணிப் புயத்திற்
றுளவறிவாள் பின்னையொன்றுஞ் சொலவறிய மாட்டாளே.. - 16
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
ஆளைப் பொருது கயங்கலக்கி யடியிற் படிந்து மதகிடிய
வாளைப் பகடு புகுந்துழக்கும் வயல்சூழ் வழுதித் திருநாடன்
ருளைத் தொழுது பசுந்துளபஸ் சருகுக் கிரந்து மடவீர்மா
றோளைக் கருதி மடலெழுதத் துணிவாள் விரைகொன் றறியாளே.. - 17
அருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
அறிவி லேனொடு மேய நீதியி னிடைவி லேதிரியேன்
நெறியி லேனுறு கதியி லேறுனை நினையு மாறுளதோ
யிறைவ னேமறை முதல்வ னேதொழு மெமது நாயகமே
மறுவி லாமர புடைய பேரையில் மருவி வாழ்முகிலே.. - 18
ஊசல் - கலித்தாழிசை
வாழிவலம் புரிந்துநெடுங் குழைக ளாட
மலர்க்காந்தள் செங்கைவரி வளைக ளாட
வனமுலையிற் குடைந்த முத்து வடங்க ளாட
மழைகவிந்த குழலவிழ்ந்து மருங்கி லாடச்
சூழிவலம் புரிகளிற்று மைந்த ராடச்
சுரர்முனிவ ருயிரனைத்துஞ் சூறை யாடச்
சுடர்வயிர வடம் பிணைத்துக் கமுகி னெற்றித்
தூங்குமணிப் பொன்னூசல் துவக்கி யாட
மேழிவலம் புரிபழனப் பேரை நாட்டில்
மேதகுசீர் வளம்பாடி யாடி ரூசல்
விரைத்துளபச் செழும்புயலைத் தொழுநூற் றெட்டு
வேதியர்தம் புகழ்பாடி யாடி ரூசல்
ஆழிவலம் புரிபாடி யாடி ரூசல்
அவங்கருடக் கொடிபாடி யாடி ரூசல்
ஆழ்வார்கள் தமிழ்பாடி யாடி ரூசல்
அமுதனையீ ரணியிழையீ ராடி ரூசல்.. - 19
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
ஆடி லாள்கழலாடி லாள்கனை யாடி லான்பனிநீர்
போடி லாள்கலைதேடி லாள்வளை பூனி லாளவடான்
பீடு லாவிய வீதி கோலிய பேரை வாழ்முகிலே
நாடு வாளிசை பாடு வாணம நார ணாவெனவே - 20
நாராய ணாயவென வோதாமல் வீண்மொழிகோ
ணாவாலு மேதுபய ணவர்புகழே
யாராலு மோதிலவை கேளாத மூடர்செவி
யானாலு மேதுபய னறிவிலிகாள்
காரான சோதியழ காராத காதலொடு
காணார்க ணாலுமொரு பயனுளதோ
வாராழி மீதுதுயில் பேரேசர் கோயில்வலம்
வாராத காலுமொரு பயனிலையே.. - 21
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
ஒருபிழைகண் டயர்ப்பா ருளாதாரவி லோதா
ருறவுநினைந் திருப்பார்கள் கோபமமை யாதோ
விருவருமிங் கிதத்தோடு கூடியணை யாநா
ளிளமைநலங் கிடைத்தாலிங் கேது பயனாமோ
முருகவிழ்செங்க கனிக்கோவை வாய்மொழியி னாலே
முனிவர்பெருங் குடித்தாழ்வு வளரதறி யீரோ
மருவியசந் தனக்காவின் மாமலர் கொய் வாரே
மகரநெடுங் குழைக்காதர் பேரையணை யாரே. - 22
கட்டளைக் கலித்துறை
ஆரய ராம லிருப்பா ரவருக் கருள் புரியும்
பேரைய ராதிபர் நங்குழைக் காதர் பிறங்கன் மின்னே
தாரை யராவிக் கடைந்தசெவ் வேலென்னஸ் சாய்ந்த குழற்
காரை யராவியென் னெஞ்சை யராவுங் கடைக் கண்களே. - 23
பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
கண்ணகம் புதைப்ப வெளியிடஞ்ச சுவறக்
கருந்தடத் திருட்படாய் விரித்துக்
கடல்வீடக் குழம்பை யள்ளியிட் டுலகங்
கரந்துகொண் டனவெனத் தணிந்து
விண்ணகம் புதைத்த பரிதியு மதியும்
விழுங்கியுண் டொருபுடை செறிப்ப
வேர்விழுந் தூழி முடிவிலாக் கங்குல்
விடிவிலாத் தகைமையே துரையாய்
மண்ணகம் புதைத்த துணையடி முனிவர்
மனத்தகம் புதைப்ப வேழ்புலியும்
வயிற்றகம் புதைத்த பெருமவென் றிடைச்சி
மார்க்கமும் புதைப்பநீ வெருவிப்
பண்ணகம் புதைத்த பவளவாய் புதைத்துப்
பருமணிக் குழைபிடித் தாடப்
படித்தவர் சுருதி முடித்தவர் பேரைப்
பதிவளம் புரக்குமா முகிலே. - 24
நேரிசை வெண்பா
மாவளர்த்த வன்னையரு மாரன் குயில்வளர்க்கக்
காவளர்த்தா ரென்று குழைக் காதரே - நாவளைத்துச்
செற்றார் நகைவடிப்பத் தீவெடிப்பப் பூந்துளவின்
முற்றார் நகைவெடிக்கு மோ. - 25
சுரம் போக்கு - கட்டளைக் கலித்துறை
வெடித்துச் சிவந்தவப் பாலைக்கப்பாலை வெளியில் வெப்பம்
பிடித்துச் சிவந்தன வோவந்த ணீர்கண்ணன் பேரைவெற்பில்
வடித்துச் சிவந்தசெம் பஞ்சோ டனிச்ச மலருறுத்தித்
தடித்துச் சிவந்தன கண்டீர் மடந்தைபொற் றாளினையே - 26
மறம் - சந்தத் தாழிசை
தாளெடுத்துல களந்தபேரைமுகி றனதருட்குறு
நிலத்துளோர்
தையலைப்புது மணங்குறித்தெழுது சருகுகொண்டு
வருதூதனே
வேளெடுத்தவடி வேல்படப்பொருது வினையெடுத்தவர சரையெலாம்
வெட்டிவிட்டதிரு முகமலாதுதிரு முகமும் வேறறிவதில்லையே
நாளெடுத்தபடை பாடெடுத்ததிலை நாணயப்பிழையி வின்னமு
நரபதித்தலைவர் தலையெடுத்ததிலை நமனெதிர்த்துவரு மாயினும்
வாளெடுத்துவரி சிலைகுனித்துவளை தடிபிடித்து மெமெர் வெல்வராம்
மனுவரம்பழியு நாளுமெங்கள்குல மறவரம்பழிவ தில்லையே. - 27
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
இல்லத் தடங்கா மடந்தையர்கற்
பெனவும் பசிக்கென் றிரந்தவர்கொன்
றீயா தவர்கைப் பொருள்போலு
மிரவிக் கிருள்போ லவுமடியார்
சொல்லத் தொலையா வெழுபிறப்புந்
துடைகுங் கருணைக் குழைக்காதர்
துணைத்தா ளளக்கும் புவிமருங்கிற்
சுற்றிக் கிடக்குங் கருங்கடலே
கொல்லத் துணியா தன்னையருங்
கொதியார் மதியு மதன்படையுங்
கூப்பிட் டழையாக் கருங்குயிலும்
கொடுமை படுத்தாக் குழலிசையு
மல்லற் படுத்தா வயலவரு
மளித்துப் பிரியீ ரெனவுரையா
தயர்த்துக் கொடுத்த மனமிருக்க
வாரை வெறுக்கக் கடவேமால். - 28
சம்பிரதம்
கடல டங்கவுறு மொருசி றங்கைபுனல்
கடுகி லும்புகுது மூசிவே
ரிடம்வ லஞ்சுழலும் வடத டங்கிரியு
மெமது சம்பிரத மீதெலா
முடனி ருந்துமகிழ் குருப ரன்பரவை
யுலக ளந்தமுகில் பேரைமா
லடல்பு ரிந்துபக லிரவு கொண்டதுவு
மரிய சம்பிரத மானதே. - 29
நேரிசை வெண்பா
தேவகியார் பெற்ற திருவருத்தம் பாராமல்
கோவியர்தா மன்றுகுழைக் காதரே - தாவி
யடிக்குங்கைம் மாறோநீ ரஞ்சினர்போற் காது
பிடிக்கும்கைம் மாறோ பெரிது. - 30
கலிவிருத்தம்
பெருவிட வரவணைப் பேரை மாதவன்
மருவிட நினைகிலான் மங்கை மாதரே
தருவிட வெண்ணிலாத் தழைத்த தெங்கணு
மொருவிட மிலைநமக் குறைவி டங்களே. - 31
கட்டளைக் கலித்துறை
உறைக்கோடு மாடவர் வாளா லொருகொம் பிறந்து மற்றைக்
குறைக் கோடு கொண்டுழல் குஞ்சரம் போலும் கொடியிடையீர்
துறைக் கோடு வாய்வைத்த மால்பே ரையிற் றென்னர் சூழ்ந்த பண்டைச்
சிறைக்கோடு மேகம் பிறைக்கோடு தாங்கிச் சிறக்கின்றதே. - 32
தூது - எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
சிறந்தார் தொழத்தரு மருந்தா மழைப்புயல்
செழும்பே ரையுத் தமர்பால்
அறந்தா னுறக்குரு கினங்காண் மடப்பெடை
யனங்கா ளுரைத் தருள்வீர்
இறந்தா மெனிற்பிழை யிருந்தா மெனிற்பழு
திரங்கா மனத்தவர் போன்
மறந்தான் மறக்கவு நினைந்தா னினைக்கவு
மனந்தா னெமக் கிலையே. - 33
வெண்பா
எமக்குமுகம் வாட விருந்தா மரைகள்
தமக்குமுகம் வாடுஞ் சலிப்பென் - அமைத்துரையும்
பெண்மதியென் றோதாமற் பேதைநாட் டன்னங்காள்
தன்மதியி லுண்டோ தழல். - 34
பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
தழல்பிழிந்து சாறுகொண்டு சந்தனத்தி லிட்டதார்
தண்ணிலாவை யெரியெழஸ் சமைத்துவிட்ட பாவியார்
குழல் பிழிந்த விசையிலே குளிர்ந்தசிங்கி வைத்ததார்
கொடுமைவந்த காலமாசை கொண்டிருக்க வல்லமோ
நிழல்பிழிந்து பருகவென்று நினையுமசுர மருதமும்
நெறியவென்ற குரிசில்பேரை நீர்குளிக்கு நாரைகா
ளழல்பிழிந்த வேலரெம்மை யாணையிட் டகன்றதா
லந்தவாய்மை யுடல்பிழிந்தே னாவியுண்டு விட்டதே. - 35
பின்முடுகு வெண்பா
ஆவியுண்டு மையுண் டறிவையுண்டு நிற்குமிரு
காவியுண்டு தாமரைக்கே கண்டீரோ - தேவியுடன்
மால்வளர்ந்த பேரையின்கண் வாவிகண்டு பூவையுண்டு
கால்கிளர்ந்த நீலவண்டு காள். - 36
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
வண்டிருக்குங் குழற்புறத்து வாட்டிமடித் துப்பிடித்து வடிந்த வள்ளைத்
தண்டிருக்குங் குழைமடவீர் குழைக்காதர் பேரையின் முத் தமிழே போல
வுண்டிருக்க வுவட்டாத விதழமுது மிள நீரு முங்கள் பாலிற்
கொண்டிருக்கப் பெருங்காமப் பசிக்குதவா திருப்பதுவுங் கொடுமை தானே. - 37
வஞ்சி விருத்தம்
கொடித்தேரினர் குழைக்காதினர் குலக்கார்வரை மேற்
பிடித்தீர்தழை கெடுத்தீர்கரி பிணைத்தேடுவ தேன்
அடித்தாமரை நடப்பீரவை யடைத்தாளுவ தோர்
தொடித்தோழியர் புனச்சார்பொரு தொழுத்தாலை வே - 38
கட்டளைக் கலித்துறை
தொழும்பாக்கி யண்டர் தொழக்கற்ப காடவி சூழலர்த்தே
னெழும்பாக் கியமென் றிருப்பதெல் லாமிந்து விட்டந்தட்டித்
தழும்பாக் கியபொழில் சூழ்பேரை மால்சர ணாரவிந்தச்
செழும்பாக் கியமென் றவனடி யார்பண்டு செய்தவமே - 39
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
செய்யிற் கரும்பு வளர்பேரைத் திருமா றிருநா டனையீரும்
தொய்யிற் கரும்பு மலர்க்கணையுந் தொழிலுக் கரும்பு விழியுமதன்
கையிற் கரும்பு மலர்க்கணையுங் கைக்கொண் டதுபோற் கண்டவென்மேல்
எய்யிற் கரும்புங் கணையுமிலை இன்றைக் கிறவா திருப்பேனே. - 40
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
இரும்பை நெறித்துத் துதிக்கைமடுத்
திளங்கோ மகளிர் வீரனெறிப்ப
வெதிர்த்தார் சிரத்தை நெறித்துமலை
யிடறி நெறித்துக் கடர்புறத்துச்
சுரும்பை நெறித்து வழிகறங்கச்
சுற்றும் தழைக்குஞ் செவிப்படலத்
துங்கக் களிற்றின் மிசைப்பவனி
தொழுதாள் விரகம் தொலையாதோ?
கரும்பை நெறித்து முடப்பலவின்
கனியை நெறித்து மடைமுதுகிற்
கதலிப் படலைக் குலைநெறித்துக்
கன்னிக் கமுகின் மடனெறித்துக்
குரும்பை நெறித்துத் தேனொழுகுங்
குவளை நெறித்துப் புடைத்துவரால்
குதிக்கும் புனற்பே ரையின் மகரக்
குழையே யெவர்க்குங் கோமானே. - 41
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
மானென்பார் கலையென்பார் தொடுக்க லாகு
மலர்த்தழையா லெய்ததொரு மத்த வேழந்
தானென்பார் பதியென்பார் வழியே தென்பார்
தாமரைப்பூங் கோயிலென்று தவிர்ந்த தென்பார்
கோனென்பார் குலத்துதிக்குங் கருணை மேகங்
குழைக்காதர் பேரையிளங் கொம்பே வம்பே
யானென்பா ரல்லவென்பா ரில்லை யென்பா
ரிவர்கோட்டிக் கெதிருரைப்பார் யாவர் தாமே. - 42
கழித் தாழிசை
தாமோதரர் மதுசூதனர் தருபேரையின் மடவீர்
நாமோதர மாமோகினி நலமோதர மறியீர்
ஆமோதர மலவோவெளி தடியேறுடன் முனிவாய்ப்
போமோதர நினையீர்கமழ் புதுவாய் மல ரமுதே. - 43
கலிவிருத்தம்
தேனார் பொருனைத் திருமால் தமிழ்ப்பேரை
யானாத கல்வி யறிவார் பயனன்றோ
கானார் கருங்குழலார் காமத்தின் பால்மறந்து
போனாரறத்தின் பொருட்டுப் பொருட்பாலே. - 44
கலித்தாழிசை
பால்வடியுந் திரண்முலையும் பச்சுடம்பும் பசுநரம்புஞ்
சூலவடிவுந் தோன்றாமற் றூண்வயிற்றிற் றோன்றியநாண்
மேல்வடிவா மிரணியனை வினைதொலைக்குந் தமிழ்ப்பேரை
மால்வடிவாந் திருவடிவ மரகதத்தின் மணிவடிவே. - 45
கட்டளைக் கலித்துறை
வடித்தூது சங்கொப்ப வண்டோட்டு மல்லிகை வாயிற்கௌவிப்
பிடித்தூது வண்டோடும் பேசுகிலேன் பிரியாத வைவர்
குடித்தூது சென்ற குழைக்காதர்க் கென்மயல் கூறிவரும்
படித்தூது நீசெல்லு வாய்மழை சாடும் பனிக் கொண்டலே - 46
கழித்தாழிசை
கொண்டலைக் கோதி வகிரிட் டிருண்ட குழலாரே
குங்குமச் சேறு பூசித் திரண்ட முலையாரே
தெண்டிரைப் பாயல் மீதிற் றுயின்ற ருளுமாமால்
தென்திருப் பேரை மீதிற் சிறந்த மடவீரே
அண்டற்பொற் பூமி தான்விட் டெழுந்த ருளினீரோ
அம்புயக் கோயில் வாழப் பிறந்த வருநாமோ
தண்டமிழ்ப் பாகி னூறிக் கனிந்த மொழிதாரீர்
சந்தனக் காவி னீழற் பொழிந்து மருவீரே. - 47
மருத்தேற லுண்ணுங் களிவண்டு காள்வம்மின் மாலறிந்து
கருத்தே மகிழவுங் கண்களி கூரவுங் காய்கதலிக்
குருத்தே விசும்பளக் கும்பேரை மால்குழைக்காதர்செம்பொற்
றிருந்தே ரிலுங்கடி தாய்வரு மோவன்பர் தேர்வரவே - 48
எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
வரம்பறுங் கடற்பாயல் பிரிந்தநங் குழைக்காதர்
மகிழ்ந்ததென் திருப்பேரை வளவயல்சூழ்
கரும்பையுங் கசப்பாக விளைந்தமென் சுவைப்பாகு
கனிந்தசெந் தமிழ்ப்போலு மொழிமடவீர்
இரும்புநெஞ் சவர்க்காக நெகிழ்ந்தநெஞ் செமக்காக
விருந்துசஞ் சரித்தாவி யவர்பிறகே
வீரும்புநெஞ் செமக்காக மறந்தவன் பவர்க்காக
விரிஞ்சலும் படைத்தானென் விதிவசமே - 49
பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
விதிக்குந் தொழிலாற் பலகோலம்
வெவ்வே றெடுத்து நடித்தொருவன்
விளையா டுவபோற் றொலையாத
வினையிற் சுழன்று தடுமாறி
எதிற்குந் சிறிதா மெறும்புகடை
யானை முதலாந் தொல்குலத்தி
லெல்லாப் பிறப்பும் பிறந்தலுத்தே
னினியுன் திருத்தா ளெனக்கருள்வாய்
குதிக்குங் கலுழிப் பெருஞ்சுவட்டுக்
குறுங்கட் பெருவான் மழைமதித்துக்
கொலைவேட் டெழுதெவ் வுடல்பிளக்கக்
குத்தும் பிறைக்கிம் புரியெயிற்று
மதிக்கும் புகர்மத் தகமுகத்து
வரிவண் டிரைக்கும் பணைக்கரத்து
மதவா ரணத்துக் கருள்புரியும்
மகரக் குழையெம் பெருமானே. - 50
எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
மகரக்குழை மாயன் பொருனைத்துறை நாடன்
மண்டங்குடி யாளுந் தொண்டன்பணி வாதன்
பகதற்கரி தாகும் பரதத்துவ போதன்
பைம்பொற்கிரி வாழுஞ் செம்பொற்கொடி போல்வாய்
சிகரத்தன பாரங் குழையக்குறு வேர்வுஞ்
சிந்துங்கனி வாயின் பந்தத்துரை மாறுந்
தகரக்குழல் சோருங் களவித்தொழில் போகந்
தங்குஞ்சுனை தானிங் கெங்குங்கிடை யாதே. - 51
சந்தக்கலி விருத்தம்
எங்குங்கிடை யாதபே ரின்பந்தரு பேரைமால்
வெங்கண்களி யானைபோம் வேள்கண்டெழு மாதரார்
சங்கங்களை வாருகே சந்தத்துழல் வருமா
தங்கங்கணி யாகவே ளம்பின்னுயிர் வாடுமே. - 52
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
வாடு மனைத்துயிர் வாழ வளிப்பவர் மாமக
ரக்குழைமால்
கூடு புனற்றுறை யாடி யிளைத்துடல் கூறு
நரைக்குருகீர்
பேடையை விட்டக லாதிரு முத்தமிழ் பேரறி
விற்குணமே
யாடவ ரிப்படி போன பிழைக்கினி யாரை
வெறுப்பதுவே. - 53
பதினாங்கு சீர்ச் சந்த விருத்தம்
ஆர்வெறுப்பினு மயல் வெறுப்பினு மன்னைமார்கள் வெறுப்பினு
மமுதசந்திர கலைவெறுப்பினு மந்திமாலை வெதுப்ப வேள்
போர்வெறுப்பினு மறலிவந்தொரு புடைவெறுப் பினும் வளைகடற்
புடவியேழும் வெறுப்பினுமொரு பொருளதாக நினைப்பனோ
வார்வெறுத்தெழு கொங்கையீமக ரக்குழைத்திரு
மாயனார்
மார்பிடத்தும் வரைப்புயத்தும் மணந்தணைந்து
முயங்குபைந்
தார்வெறித்துள வாயினுஞ் சருகாயினும்
பெற விட்டதோர்
சாமகீத மொழிச்சுரும்பொடு தான்வெறுப்பில
தாகியே. - 54
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
இலதாகி யுளதாகி யுடலாகி யுயிராகி யிருளாகி
யொளியாகநீ
பலதாரை வெகுமாயை விளையாடு குணநீதி
பலதேவ ரறிவார்களோ
மலருடு கயல்சாட மதகூரு புனல்சாடி வருபேரை
நகராளனே
சிலபேர்க ளறிவார்கள் சதுவேத முதுபோத
தெளிஞான முடையோர்களே. - 55
புய வகுப்பு
முப்பத்திரண்டு சீர்க் கழிநெடிலடியாசிரியச் சந்த விருத்தம்
உடையக் கலசத் தயிர் கொட் டியெடுத்
திதழ்வழி யொழுகிய திவலை பொழிந்தன
உரலைக் கதவுக் கடையிட் டுயரத்
துறிபல தடவிய நறுநெய் கவர்ந்தன
உடல்கட் டிறுகத் தொழில் மற் பிடியிட்
டசுரரை யெமபுர மளவு துரந்தன
உயிரைப் பருகக் களவிட் டலகைப்
பணைவரை முலைமுக நெருடி யிருந்தன.
படியிற் றுடைபட் டுழலக் கனகனை
நகநுனி யுழுதிடு செருவி யிடந்தன
பனையிற் கனியொத் திருபது முடியத்
தலையுருள் படவடு பகழி சொரிந்தன
பரிதிக் கதிருட்புதையத் தமணப்
படநிழல் கெழுமிய திகிரி சுமந்தன
பருமச் சிகரக் கயிலைப் பரனுக்
கிடுபலி கெடநிறை பரிசில் வழங்கின
கடலைக் கடையப் பருமத் துவலித்
திமையவர் பசியற வமுதம் விளம்பின
களபத் தெளியிற் றுளபத் தொடையில்
பரிமள ம்ருகபத முழுகி யளந்தன
கனவட் டமுலைத் திரள்பட் டுருவிப்
பொதுவியர் வரிவளை பொருது சிவந்தன
கமலத் தவளைத் தழுவிக் களவியி
லிளகிய புளகம தொழுகி மலிந்தன
மடையிற் கழியிற் பொருனைத் திரையினி
லுதறிய வரிமண லலகு நெடும்புழை
மதகிற் கதலிப் படலைக் குலையினில்
வளமுக கடவியில் மருவி வலம்புரி
வயலெக் கரிடப் புதுமுத் தமிழ்சொற்
குருகைய ரதிபதி பரவு நெடுந்தகை
மகரக் குழையுத் தமனித் தியனுயர்
பரகதி முத்லவ னணிபொற் புயங்களே. - 56
குறம் - பதினான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
புயங்க சேகர முயங்கு நாடதி
புகழ்ந்த பேரையை வணங்கியே
புரிந்த வாய்மையி னிகழ்ந்த மாகுறி
புகன்று வாழ்குற மடந்தை நான்
இயங்கு மாகெவு ளியும்பொ லாதல
விருந்த மாநில மிணங்கவே
யிசைந்து மாநிதி துலங்க வேயருள்
பொருந்தி வாழுவை யிலங்கிழாய்
வயங்கு மாதலை வரைந்து பேரதில்
வளங்கொள் சேவக ரிரண்டுபேர்
வளர்ந்த நாவல ரிரண்டு பேரோரு
வனுந்த ராதலம் வணங்குவோ
னுயங்கி நானுடல் வருந்தி னேனெழு
குழந்தை வாய்பசி யடங்கவே
யுடந்தை யாயொரு சிறங்கை கூழிடு
கிழிந்த தூசுரு ளுறங்கவே. - 57
கொற்றியார் - எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
அரங்கத்து ளேதுயிலு மருஞ்சக்ர பாணிவய
லகஞ்சுற்று பேரை நகர்வாய்
விரும்புற்ற தாமமுலை யரும்பித் தாமரையில்
விளைந்துக்க மாமணி கொலோ
கருங்கற்றை வார்குழலை முடிந்திட்ட நாமமொடு
கலந்திட்ட தாவடமு மாய்
வருங்கொற்றி யாரழகி னரங்கொற்றி யாடலது
மருங்கொற்றி யாரறி வரே - 58
சந்தக்கலி விருத்தம்
வருகார்முகில திருபேரையி லமர்பூ வணைசேர்
பெருவாழ்வொடு மொருநாளவை பிரிவோ மலவே
திருவேயமு துருவேபொரு சிலைவேள் குருவா
முருவேறெம துடல் வேறெம துயிரோ குயிசரே. - 59
நேரிசை வெண்பா
உயிர்முடிக்குஞ் செவ்வந்தி யுண்டெனவே கோதை
மயிர்முடிக்குஞ் செவ்வந்தி வையாள் - அயனார்
பெருந்துளதிக் கேகமும் பேரைமால் சாத்து
மருத்துளதிக் கேமயலா வாள். - 60
எழுசீர்க் கழிநெடிலடி சந்த விருத்தம்
மயலற் றவைக்கருள்செய் மகரக் குழைக் கடவுள்
வயிரப் பொருப்பி னயல்சூழ்
முயலைத் துடைத்துமதி யதனைப் பதித்ததென
முகவட்ட மிட்டு வருவீர்
புயலிற் கறுத்தகுழல் வரையிற் பணைத்தமுலை
புளகிக்கி விற்று வீடும்வே
ரயலற்ற வற்பவிடை திருநெற்றி யிற்றலதே
மழியத் துடைப்ப தழகே. - 61
அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
அழகு தங்கிய மகர வண்குழை யமலர் தண்கிரிவாய்
நுழை நுழைந்தென துயிரை யுண்டது நுவல வும்படுமோ
மழை சுமந்தலை கடல் சுமந்திணை மலை சுமந்தருளே
தழைய வந்தொரு பொழிலி னின்றது தனியிளங் கொடியே - 62
ஒன்பது சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்
இளங்கொடி யிணங்குமுது சூழல்
நெருங்கிய பொதும்பர்வெளி நீழல்
இதண்புடை யிருந்து விளையாடி நீர்
விளம்பிய குளிர்ந்த மொழி யூடு
கரைந்தது கருங்கலினை வீசி
வெறுங்கவ ணெறிந்துபய னாகுமோ
வளந்தலை மயங்குதமிழ் நாடர்
செகந்தனில் முகுந்தர்வரு பேரை
மடந்தையர் வணங்கு மபிஷேகமே
தெளிந்தசொ லினிங்களென நூறு
பசுங்கிளி விழுந்தபுன மீது
செழுந்தினை விளைந்துகரை யேறுமே. - 63
களி - பதினான்குசீர்க் கழிநெடிலடிச் சந்தத் தாழிசை
கரைபடைத் தமடைமுது குடைப்ப வொரு
கயல் படைத் துலவு பேரை மால்
கருணையைப் புகழ வரு பரப்பிரமர்
களியர்கா னறியு நறவுமாய்
வரிசையிட்டன ளிலச்சி யாகினி
வலைச்சியைத் தொழு மடத்துளே
மதுக்குடந்தனை யெடுத்துவைத் ததனை
வளைய வைத்து நட மாடுவோம்
விரிசடைக் கடவுள் புரமெரித் ததுவும்
விடமிடற் றிடை செறித்ததும்
வேலுடைக் கடவுள் சூரனைச் சமரில்
வென்றதும் பொருது கொன்றதும்
அரிமலர்ப் பிரமனறுதலைக் குடுமி
யறுதலைக் குறை முளைத்ததும்
அன்று பஞ்சமிதன் மந்திரப் பெருமை
யன்றி வேறு வரமல்லவே. - 64
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
அல்லிக் கமல மடிபெயர வருகிற் குவளைக்
கழுத்தொடிய
வாம்பற் குழுவின் மடலுடைய வலையிற்
றுளைத்து கரையேறி
நெல்லிற் புகுந்து கொடிவள்ளை நெரியத் தவழ்ந்து
பணிலமணி
நிலவைப் பொழியுந் தமிழ்ப் பேரை நெடுமால்
பொருனைத் திருநாட்டின்
வல்லிக் கொடியே மடப்பிடியே வனசத் திருவே
யமுதுருவே
வயிரக் கொழுந்தே மரகதமே மயிலே யனையீர்
மழையருவி
கல்லிற் பொருத வரைச் சாரல் கடிகாவனைத்துந்
தொலைத்தன னென்
கையுந் தழையுமுகம் பார்த்துக் கருணை புரியக்
கடவீரே. - 65
வஞ்சித்துறை
வீர மாரனா
லார மாலை வேம்
நேர மாலை தா
நேர மாலை தா
பேரை மாயனே. - 66
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியத் தாழிசை
பேரை வளம்பதி மாலே பேதையை வந்தணை யாநா
ளீர நறுங்குழ லாரே பேதை நினைந்தினி நோவேன்
மார சரம்படு பூவோ வாரி விடும்பனி நீரோ
ஆர வடம்படு தூளோ வாவியை யுண்டது தானே. - 67
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
கார் காலம்
தான் குதிக்கு மந்தியுமீ றந்தி மாலைத்
தழல் குதிக்கு மெனத் துணையே தழுவுங்காலம்
தேன் குதிக்கு மிதழியும் பொன் சிதறுங் காலம்
திருந்திழையார் விழித்தாளஞ் சிந்துங் காலம்
நாங்குதிக்கு மொழுங் குதிக்கும் படியே வந்த
ஞானவரோ தயன்பேரை நகர்வாய் வட்ட
வான் குதிக்குங் காலமவர் மறந்த காலம். - 68
தரவு கொச்சகக் கலிப்பா
மறம் புரியுந் திகிரியுடன் வலம்புரியுந்தரித்து நமக்
கறம் புரியுங் குழைக்காத ரருட்டேரை யுயர் நகர் வாய்ப்
புறம் புரிய மணிப் புரிசைப் பொறி சுமக்குந் துகிற் கொடிக
ணிறம் புரியும் புயல் குளித்து நீணிலவிந் துவக்குமே. - 69
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
நீணி லாவெழும் பளிக்குமண் டபத்திடை
நின்றுதன் னிழற் கோலங்
காணி லாயிழை யொருத்தியென் றழைக்குமென்
கன்னியைத் தழுவாயோ
தூணி லாடக னுரம் பிளந் துயிருணத்
தோன்றிய நெடுமாலே
கேணுலாவிய தடம் பொழிற் பேரைவாழ்
திருந் தெழிற் குரியானே. - 70
உரிசை மாவுள வொழுகு தேனுள வுறைகொள் கூவலின் வாய்
விரியு நீருள பதியி னீரினி விடிய வேகுகவே
யரிவை வாடின ளிறைவ பேரையி லமர மால்வரைவா
யிரவி போனடி னொருவர் போகில ரெயினரோ கொடிதே. - 71
கட்டளைக் கலிப்பா
கொடியளந்த வசோதைகை மாறஞ்சிக்
குழை தொடுங் கைக்குழைக்காத ரேயும
தடியளந்த வுயிர் யாவும் வாழவன்
றாழிகொண்ட மரக்கால் பதித்துநீர்
படியளந்தது போதாம லன்னமும்
படைத்திருப்பது பாலனென்றோதலால்
மிடியளந்த வறிஞரைப் போலன்று
வெண்ணெய் தொட்டுண்ட தென்ன விநோதமே - 72
பன்னிரு கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
என்னைத் தனியே புதுநிலவுக் கிரையிட்டிருக்கக் கடவீரோ
எரிவாய் மடுக்கும் பணிவாடை யிளமைப் பயனு மடநாணுந்
தின்னக் கொடுத்து விடுவீரோ தீரா விடும்பை யிவை யனைத்துந்
தீர்க்கும்படியே செழுந்துளபத் திருத்தார் கொடுத்து விடுவீரோ
கன்னற் கனிவாய்ப் பாலொழுகக் கதலிக் குலைவா யமுதொழுகக்
கருங்காவியின் வாய்த் தேனொழுகக் கமலத்தவர் வாய்த் தாதொழுகச்
செந்நெற் குலைவாய்ப் பாலொழுகச் செழுந்தாண் மேதி புகுந்து முக்குந்
திரைநீர் பெருகு வயற்பேரைச் செல்வக் கருணைப் பெருமாளே. - 73
கட்டளைக் கலித்துறை
மாவாய்க் கிழிக்குங் குழைக்காதர் பேரை வளை கடனீர்
நாவாய் படைத்துப் பயனென் கொலோ நடுச் சொல்லறியாப்
பூவாய் குடைந்து செழுந்தா தளைந்து பொதிந்த தென்றற்
றீவாய் மறலி யெனவந் துலாவுமித் தென்றிசைக்கே - 74
எண்சீர்க் கழிநெடிலடி சந்தத் தாழிசை
தெற்குத் திசை நோக்கித்திரு வரங்கத்திடைத் துயில்மால்
தென்பேரையி லன்பாகிய செம்பொற்கிரி மடவீர்
அற்பத்தழை கண்டான்முலை யாளுக்கி டொணாதோ
அருமைப் பணி விடைபோதவு மடியேனுள நலனோ
கற்பித்தன செய்வேன்கடி காவிற்றழை கொய்வேன்
காமன்கையில் விலையோவிரு காதோலை யிலெழுதா
விற்கத்திரு வுளமோவெனை மேவத்திரு வுளமோ
வினையேனொரு பிழைநூறிது விண்ணப்ப முமக்கே. - 75
அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்
கேச வாமழை வள்ளலே கேழ லாயதிர் கொண்டலே
யீச னேதிகழ் பேரைவா யிறைவனேயென வெண்ணியே
நாச வாழ்வை முனிந்துநீர் நாரணா நமவென்றுவாய்
பேசு வீரறி கின்றதே பிறவி வேரரிகின்றதே. - 76
சித்து
ஐம்பத்து நான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்
அரிபாளை நறவூறு முதுதாழை கொண்டல்
முடிசூடி வெளிகீறு சுடர்கால் குடைந்து
புனல்வேலி வலிஞாழல் கனிசூ ரலம்பு
முழுமூடு படமோதி வரைவா யிறங்கி
யழல்சீறி நிழல்மாறி மலைவேக வெம்பு
சுரமாறி நிரையாயர் நிலமே கடந்து
தத்திவீழ் பொருநை வந்தநாள்
அலையேறு புதுநீரி லெதிரேறி நின்று
வலைவாணர் புனல்சாய மணிவா லறைந்து\
கழைபாற விடுதோணி தடுமாற வுந்தி
வளர்யானை கொடுபோன சுழியூடலம்பி
யகிலார மணநாறு வெகுசே றளைந்து
முடிகூடு நரைபோலு நுரைமாலை சிந்த
முத்த வால்வளை கறங்கவே
மருவீதி மலராடை புனைமார் பணிந்து
துறைதோறு மருகோடி விளையாடி யங்க
ணலையாத கயமூழ்கி யணைகோடு கண்டு
மதகோடு மடைதாழ வினைமேலெழுந்து
வயலாமை கொழுமேழி முகவாய் முறிந்து
கடுமேதி தடுமாற வுளவான் மலங்க
வெக்கர் பாய்மணல் மருங்குறா
மடவாழை குலைசாய நிலைசூழ் கரும்பு
புடை போல வளர்பூக முடல்கூன மந்தி
தளை மீறி யுமிழ்தேனின் மறுகா றதும்ப
மடநாரை பெடையோடு மலர்மே லொதுங்க
வரிவாளை குதிபாயும் வளநா டுகந்த
நெடுமாய னருள்பேரை நகர் வாழ் வுகந்த
சித்தரேமடி பணிந்து கேள்
திருமாது பிரியாத மடமாது செம் பொன்
றுருவான தொருவேரி லதுமா லறிந்த
வொருமூலி தடவாமு னரனார் பசும்பொன்
னிறமான பிரமாண மறைநூலி லுண்டு
சிலையான வடமேரு வரனா ருகந்த
துரையாணி யொருகோடி யிழையாத செம்பொன்
வைத்த தார்பெருமை யும்பரூர்
சிறுகாலை நிறமான கனகாதி யெங்கள்
குருநாதர் பரிவான மதிபார முண்டு
மதராஜ னுபதேச மொருபூ மருந்து
மடமாத குறவோடு விளைபா டகங்கள்
திரைதாவு கடலூடு படுதீவி லொன்று
பெயரீழ நவகோடி மணிசாடு கின்ற
வித்தையோ புதுமை யின்று நீ
சருவாம லொருபூத ரணுகாம லஞ்சு
தலைவாச லடைதாழி டருகே யிருந்து
குகைமூடு யுமிபோடு கரிபோடு செம்பி
லரிதார மிடுதார முதலா மிரும்பு
தனிலூத விடிவேறு தவறாது செம்பொ
னதுவார முடனோது முபதேச மந்த்ரம்
அப்பனே அமுது கொண்டுவா.
தலைவாழை யிலைமீது படைகோழி கொன்று
பொரிகாடை கதுவாலி மிளகான நன்று
சருகாமை கொடுனாவென் றுயிர்கா னுடும்புசாளை
கயல்தேளி சிறுசாளை பொடிபாதி நண்டு
தயிர்மாறி பருமாறு திரன்பால் சொரிந்து
பணியார வகைபோடு நளபாக முண்ட
தப்படா களப சந்தமே. - 77
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
சந்தனக் காவில் வந்துநிற் பீ்ர்தம் டங்குளித் தாசலாடுவீர்
பந்தடித் தானும் மருங்குபற் றாது பண்பலக காணுமாதரே
தெந்திருப் பேரை வண்குழைகா காதர் திண்கிரிச் சாரல்மீதிலே*
மைந்தரைச் சீறி யுங்கள் நீட்டுர வஞ்சகக்காவி தாவுமே* - 78
மடக்கு-கட்டளைக் கலிப்பா
தாவு யுண்ப துறிமுகப் பாலையே
சயன போகத் தலமுகப் பாலையே
தேவி யென்பது பங்கயத் தாளையே
தேவர் கோன்விரும் பங்கையத்தாளையே
யாவு மாய்வந் துதிப்பது மாயனே
யென்று பன்னித் துதிப்பது மாயனே.
நாவி லோதுவ துன்றிருப் பேரையே
நான் வணங்குவ துன்றிருப் பேரையே. - 79
வஞ்சி விருத்தம்
பேரி யம்பிலன் பேரைமால்
வேரி யம்புனல் வெற்பில் வேள்
காரி யம்பறை கண்கள் வேல்
வாரி யம்பெனன் மாறுமே. - 80
பதினான்கு சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
மானுடன் பிறந்து கலையுடன் வளர்ந்து
மதியுடம் பழுக்கறத் துடைத்து
வள்ளையுங் குமிழுங் குமுதமும் பதித்து
மாசறக் கடைந்தவேல் கிடத்திக்
கூனுடன் கிடந்த தடஞ்சிலை தொடுத்துக்
கொடுங் கொலைத் திலதமிட் டெழுதிக்
குருகுலப் பிரமன் பெருமையிற் படைத்த
குளிர்முகத் திருவை நீ தருவாய்
கானகம் புகுந்து வீராதனை வதைத்துக்
கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பனகை
கரியமூக் கரிந்து கரனுக்குயிர் குடித்துக்
கருங்கடல் வழிபடக் கடந்து
போனது மரக்கன் புகுந்தது முடிவிற்
புரந்தரன் பெருந்தவ மெனமுன்
பொருதவா மகரக் குழையனே கருணைப்
புனல்வளம் பொழிந்தகார் முகிலே. - 81
அம்மானை - கலித்தாழிசை
காரையூர் வண்ணர் குழைக் காதர்சிலைப் போர் விசயன்
தேரையூர் மாலாய்த் திரிந்தனர்கா ணம்மானை
பேரையூ ரென்றிவர்தாம் பேசுவதே னம்மானை
பின்னைமால் கொண்டிருந்தாற் பேசாரோ வம்மானை - 82
கைக்கிளை மருட்பா
அம்மா னகையு மடுகின்ற மால்பேரை
யெம்மாவி கொண்ட திவணகையே - பெம்மான்
வரிசிலை வடவரை வளைத்த பின்றைத்
திரிபுரஞ் செற்றதுந் திருமுன் னகையே - 83
நேரிசை வெண்பா
நகைத்தா மரைபுரைதாள் நாயகனார் பேரை
யகத்தா மரையமுதே மன்னாள்--முதத்தழகு
தான் பிடித்த செல்வம் தாம் பிடிக்க மாட்டாமல்
வான் பிடித்த தன்றோ மதி - 84
ஒன்பதின்சீர் வண்ண விருத்தம்
மதிக்கும்பெரு மாள்மதி வார்சடை
முடிக்கும்பெரு மாளய னாரிரு
வருக்கும்பெரு மானெனு மாமறைநூல்
துதிக்கும்பெரு மானெளி யோர்பிழை
பொறுக்கும்பெரு மாளடி யார்வினை
தொலைக்கும்பெரு மாள்வரு பேரையிலே
குதிக்குங்கயல் போல்விழி யீரினி
யிறக்குங்குழை யார்முனம் வார்மனங்
கொதிக்கும்பத மானது தானறியீர்
அதிக்கும்பசி யென்னது தூதையில்
வடிக்குஞ்சிறு சோறிடு மாறிடும்
அறத்தின்பய னாவது தானிதுவே - 85
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
வேயிருந் திசைத்த செவ்வாய் விண்ணொடு பிறந்த மேகம்
பேயிருந் தலறக் கொங்கை பிசைந்துண்ட பேரை மாயர்
தூயபைந் துளப நாறுந் துணையடிக் கமலப் பூவே
மாயவெம் பிறவி நோய்க்கு வாகட மருந்து தானே. - 86
மதங்கியார் - எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
மருதொடித்து நெடியசாடு மடிபடத் தவழ்ந்த மால்
வழுதிநாடு பாடியாடி வந்தமா மதங்கியார்
முருகெழக் கிடந்தலைந்து முகிலுலாவு மளகமும்
முனிவருக்கு மயலளித்த முகிழ்நகை ப்ரதாபமும்
இருகவட்டு முலைமுகத்தி லெழுதிவிட்ட தொய்யிலும்
இளைஞரைத் தொடர்ந்துகொல்லு மின்பவே லிரண்டுமற்
றொருபிறைக் கொழுந்திலன்னை ஓதியிட்ட திலகமும்
உயிர்பறிக்கு மியமனுக்கு பாயவித்தை காணுமே. - 87
மேற்படி விருத்தம்
மேலிருக்கு மதிக்குழவி முடித்தார் போற்ற
வீற்றிருக்குங் குழைக்ககாதர் விமலர் நாட்டிற்
சேலிருக்கும் விழியணங்கே நின்னை யல்லாற்
றெய்வ மாமகளிரையும் தீண்டு வேனோ
மாலிருக்கு மின்பதுன்ப மறிந்தா ரந்தோ
மணிவயிரங் குன்றவெள்ளி வள்ளத் துள்ளே
பாலிருக்க முகஞ்சுளிப்பப் பருவாய் கைப்பப்
படுகொலைசூழ் நஞ்சையள்ளிப் பருகுவாரே. - 88
பருந்தாட் கொடியதென் றோகுழைக் காதர் பதிப்புரிசைப்
பெருந்தாட் கொடியை யணங்கே தண்சாரற் பிடியணங்கு
மிருந்தாட் கொடிய கடாயானை போலு மிறைவர் தம்மைக்
கருந்தாட் கொடியிற் றுவக்குநும் மூரிக் கழைக்குறவே சுரம் போக்கு - 89
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
கழைக்காவ லானதழல் கொதித்தேறு பாலைவழி
கழித்தோமிராமல் மயிலே
தழைக்காவ லார்கமல மலர்த்தாளு றாமலொரு
சரத்தூர மேகி லுளவே
குழைக்காதர் நாடுமவர் திருப்பேரை யூருமணி
கொழித்தேரு வாவி களுநீள்
மழைக்கா ருலாவும் வரி மணற்சூழல் வாவுமிள
மரச்சோலை நீழல் களுமே. - 90
எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
மேதி பாசடைக் குவளை தின்றுவாய்
வேரி பாய்புனற் பேரை மாயனே
தீது போகவும் பிறவி போகவுந்
தேவ ரேதொழுஞ் செல்வ மானதாள்
ஓதி மாதராற் கயிற்றி லிட்டதால்
உரல்பி ணிக்கவுஞ் சகடு தைக்கவும்
தூது போகவுங் கடவ தோவெனாத்
தொழுது மாமறைச் சுருதி பாடுமே - 91
நேரிசை வெண்பா
பாடு குரலறியாப் பைங்கிளியே செந்தினையின்
காடு பூங்காலறியாக் காவலார் - நீடசுரர்
வேரரிந்த மால்பேரை வெற்பிற் சிலகுறவ
ராரரிந்த வாரறியா ரோ. - 92
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
அறிவிருந்த சிறுமதலைக் கிர்ணியனா ரடர்த்தநாள்
வெடித்த தூணிற்
பிறிவிருந்த தேவகிபாற் கருவிருந்த திருவயிறும்
பிரிந்த வன்றே
செறிதரங்க நிறைபொருநைத் திருப்பேரை
வளநகருஞ் சேடன் மீதி
லெறிதரங்கப் பாற்கடலு மென்னெஞ்சு மவர்க்கலா
திடம தாமே. - 93
எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்.
ககனர்முக் கணர்காண மதலையைச் சலியாது
தலையறுத துடல்வேறு கறிசமைத் தவள் பாவியோ
விகடமிட் டொருதேவி தசரதற் கினிதான
மகன்வனத் திடையேக விளைய வைத் தவள் பாவியோ
மகனெனக் கருதாம னிலவிலிட் டிளவாடை
வளையவிட் டநியாய மதனைவிட் டவள் பாவியோ
பகருமுத் தமிழ்ஞான கருணைபெற் றவர்பேரை
மடநடைப் பெடைநாரை பதிலினிச் சொலவேணுமே. - 94
பாண் - மேற்படி விருத்தம்
மேருவைப் பிளந்தெடுத்து வேறுகூறு செய்தபோல்
வெஞ்சினத்தி லிரண்யன்றன் மேனியைப் பிளந்து பேர்
கூருகிர்தி தடக்கை கொண்டு கூறு செய்த பேரைமால்
குரைகழற் புகழ்ந்துபாடல் கொண்டு பெற்ற வரிசையோ
மூரியற்ற விறலியர்க்கு முன்னடைந்து செல்கையால்
மொய்வினைத் துதிக்கை கொண்டு மூடிகளைச் சரிக்கையால்
பாரியற்கை கொண்டழிந்து பலகடம் பெருக்கையால்
பரிசில் பெற்ற யானைநீதி பாணருக்கு மொக்குமே. - 95
பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
பாண்வாய் மிழற்றுஞ் சுரும்பின் தொடரவிரி
பங்கயத் தாதிறைத்தும்
பனிமலர்க் குவளையஞ் சேயிதழ் சுரக்கும்
பசுந்துளித் தேனை மாந்திச்
கேண்வாய் தொடுத்தமதி வண்டுளியி னிற்சிதறு
மல்லிகை யவிழ்த்தும் வாகச்
செம்பொற்றகட்டுக் கருந்தாழை மடலிற்
செறித்த பொற் சுண்ணமாடித்
தூண்வாய் சுமக்கும் பளிக்கறைப் பத்திச்
சுவர்ப்புறத் திடைகு யிற்றுஞ்
சுடர்மணிச் சாளரக் கண்வழி நுழைந்துபைந்
துளவைப் பெறாத மடவார்
நாண்வாய் கிழித்துவேள் சிறுநா ணிறுக்கிட
நடக்குஞ் செழுந்தென் றல்பார்
ஞானபுங் கவவிறைவ பேரையம் பதிமுதல்வ
நந்தா வளக் கொண்டலே. - 96
நேரிசை வெண்பா
நந்தா வளம்பிறந்த நம் பேரை மால்பவனி
வந்தார் வளம்பிறந்த வார்த்தைக்கே - செந்தழல்போல்
வண்ணமா யங்குதித்த மாமதிகண் டென்பசலைக்
கென்னமா யங்குதித்த தே. - 97
எழுசீர்ச் சந்த விருத்தம்
குதிக்குங்கவுள் மதத்தண்டுளி மழைக்குஞ்சர மழைக்கும் புயல்
கொழிக்குந்தமிழ் வளர்பே ரையிலே
மதிக்கும்பொருள் மிகப் பெண்டுகள் வெறுக்குங்குடி தழைக்கும்படி
வளர்க்குந்திரு மடமா மயிலே
வறிக்கும்படி படிக்குஞ்சிறி தனிச்சங்களும் பணிப்பஞ்சிலும்
வெறுக்கும்பத முனதா கையினால்
உதிக்குங்கதிர் வெறுக்கும்பால் கொதிக்குஞ்சுடர் நடக்குந்தொறு
முறைக்கும்பொழு துயிர்வா டுவையே. - 98
இருபத்தைந்தடி நேரிசை யாசிரியப்பா
தென்றலங் கன்று மென்றுதின் றுமிழ்ந்து
கோதுபட வாருயிர்க் குறையையுஞ் சுழித்துக்
குழித்துவிரல் குழைத்துச் சுழித்தமணற் கூடலும்
அள்ளி யிட்ட புள்ளியம் பசலையும்
துயிற்சுவை யறியாப் பயிர்ப்புறு தடங்களும்
மறவா வன்புந் துறவா வுள்ளமும்
அன்னப் பேடும் புன்னையங் காவும்
துணைபட விரிந்து துயர்படுங் காலத்தும்
பழுதிலா துயர்ந்த வழுதிநாட் டெவையும்
யாரையுந் தமிழ்ப் பேரயும் புரக்க
வளநகர் வார்குழைச் சிகரபூ தரத்தோன்
தெய்வ நாயக னைவர்தேர்ப் பாகன்
மலைமால் வரைத்தல மலைச்சா ரலின்கண்
மணங்கொள் பூங்கொடி யணங்குதண் பொதும்பரிற்
சிறந்த காட்சியிற் பிறந்ததண் ணளிபோற்
கைதொட்டுத் தலைவர் மெய்தொட்டூப் பியின்று
பணைமுலைக் குரும்பை பிணைமலைப் புயத்தின்
ஊடுறப் பொருது பாடுறக் கிடப்ப
வரிவளைத் தழும்பு மார்பிடத் தழுந்தப்
பரிபுரச் சில்லொலி பல்கல னொலிப்பப்
புலவியுங் கலவியும் பொருந்திநற் சீருள்
நலமிகு பெருஞ்சுவை நமக்கினி தளிக்கச்
சிறுதுயிற் கனவுதந் தருளு
மகர நெடுங்குழை வாழிவா ழியவே. - 99
நேரிசை வெண்பா
வாழிபுகழ்ப் பேரை மகரக் குழைவாழி
வாழிதமிழ் நூற்றெட்டு மாமறையோர் -வாழியவே
தேக்கும் பதகமலந் தீர்த்தெனது சிந்தையுள்ளே
பூக்கும் பதகமலப் பூ. - 100
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பதித்தநவ ரத்னமணி மோலி வாழி
பங்கயப்பூந் திருமுகச்செம் பவளம் வாழி
கதித்தசீர் நெற்றியில்வெண் டிருமண் காப்பு
கத்தூரித் திலகமிரு கண்கள்
துதித்தநறும் பசுந்துபைத் தோள்கள் வாழி
சுரிமுகச்சங் காழிவான் கதைவில் வாழி
மதித்தபீ தாம்பரஞ்சேர் அரைநூல் வாழி
மகரநெடுங் குழைக்காதர் வாழி வாழி. - 101
முற்றும்.
- குழைக்காதர் கலம்பகம்
காப்பு- எடுத்துக் கொண்ட நூல் இனிது முடியும் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகிறார். காக்க-காவலாக இருக்கட்டும். வியங்கோள் வினைமுற்று. பராங்குசக் களிறு காக்க! பவம்-பிறப்பு, விலங்கறுத்த-பற்று நீக்கின, புள்ளின் பாகன்-கருடனை ஊர்ந்து செல்வோன். தொடர்ந்து பற்றி- பற்றித் தொடர்ந்து; கவி பொழியும்-கவிதையை மிகுதியாகச் செய்யும். பராங்குசன்-நம்மாழ்வார், தான், ஏ-அசை, பிற சமயங்களாகிற யானைகளுக்கு அங்குசம் போன்றவன். ஆழ்வாரை யானையென்று உவமித்ததற்கேற்ப, கவிமதம் பொழியும் என்றும், அவையடக்கம்; புரந்து காவல் செய்து
வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
தரவு:
குளிப்ப- வணங்க, புனல்-நீர்; வியன்-இடமகன்ற,கெழுமி-நெருங்கி, ஒலக்கம்-கோஷ்டி.
தாழிசை;
அளை-வெண்ணெய், சூது பிடித்து-களவைக் கண்டுபிடித்து;
பெருவிருந்தாய்-பெறுதற்கரிய விருந்து (அவதாரம்) மதலை-பிரகலாதன்; அவுணன்-இரணியன்.
விசும்பு-ஆகாயம், தரு-நீ படைத்த, செலு-செதிள் (மீன் உறுப்பு)
அராகம்:
பைரவி-காளி, அலகை-பேய்ச்சி (பூதனை) பிடி என- "பிடி" என்று சொல்லு முன்; பரிபவம்-அவமானம், பருவரை-மலை போன்ற இராவணன், அறு சமயம்-வைணவம், சைவம், சௌரம், சாக்தம், கௌமாரம். காணாபத்யம், முதுசதுமறைபட-பழைய நான்கு வேதங்களோடு பொருந்த.
அம்போதரங்கம்:
பூவடியில் - தாமரை போன்ற அடிகளில்.
சுரிதகம்:
அரும்பவீழ் - மொட்டு விரிந்த, சுரும்பு - வண்டு, அவிழ்- மலர்த்தும்; வார் குழை- நீண்ட குழையணிந்த காது, செவ்வி - அழகு, ஒருமுகத்து - ஒரு சேரக்காட்டி, பொலங்கொடி- அழகிய கொடி, மகளிரில் - பெண்கள் போன்று, கவிப்ப - கவிப்பார்கள். (ஒரு குடைக்கீழ் ஆள்பவர்கள்) மாகம் - விண்ணுலகு.
2. மா கவலை-மிகுந்த கவலை, கொன்புரக்கும் - பெருமையுடன் காக்கும், நேமி - சக்கரம், உரக்கும்-திடம் பெறும்.
3. ஒருகைமுகக்குஞ்சரம் - முகத்தில் துதிக்கையுடைய ஒப்பற்ற யானை (கஜேந்திரன்), காதருகை முசக்கும் அயல்விழி - காதளவோடிய வேல் போன்ற கண், மான்- மான் போன்ற விழியுடைய என் மகள், முருகு- மணம், முகத்தல் - மோந்து பார்த்தல், சருகு - வாடல், மொய் குழல் - நெருங்கிய கூந்தலையுடைய பெண், என்றும் - என்று சொல்லுவாள், உண்ணாவிதழைக்கும் என்றே இருக்கு - உயிர் மட்டும் இருக்கிறது என்று சொல்லும்படி தளர்வுற்றிருக்கிறாள்.
4. மதியம்: பரிதியென்றுதிக்கும் - சந்திரன் சூரியன் போன்று சுடுகின்ற கிரணங்களோடு உதிக்கும், களப லேபனம் - சந்தனப் பூச்சு, கொடுவினை விளைந்தகாலம் - போதாத காலம், கழைக்குலம் தடிந்து - மூங்கில் கூட்டத்தை ஒடித்து, சந்தனம் திமிர்ந்து - சந்தான மரத்தை முறித்து, காழகில் குழாம் - வயிரம் கொண்ட அகில் மரத்தொகுதி, கரிமுக மருப்பு - யானைக் கொம்பு, தரளம் - முத்து சுரம் - பாலைவனம், கடை நிலம் - நெய்தல்.
5. தவசரியை - தவம், சரியை: விகடபகடு - நகைக்கிடமான மதயானை, கபடனை - வஞ்சகனை, மதகளிறு - ஐராவதம், நறை - வாசனை, திவலை - துளி, முகில்வண - முகில்வண்ணனே.
6. மறைமுடி-உபநிடதம், உற-பொருந்த, வெற்பன்- குறிஞ்சி நிலத்தலைவன், வேயின் முத்தம்-மூங்கிலில் உள்ள முத்து; சிவபெருமான்; பிணை-மான், மிடறு-கழுத்து, மாகறை முடித்த மிடறு-நீலகண்டம் கரகபாலம்-கையில் தலை யோடு.
7. ஆகம்-மார்பு, ஆடகன்-இரணியன், கொண்டல்- மேகம் போன்ற நிறமுடைய திருமால், கோகிலம்- குயில், அன்பர் குறை-தலைவர் குற்றம்.
8. குறைக்கொழுந்தாய்-குறைந்த கலைகளோடு கொழுந்து போன்று, தாரை-கிரணங்கள், பிறைக் கொழுந்து ஆர்-சந்திரமண்டலம் தொடும், தம்பி- இலக்குவன்.
9. ஏனம்-வராகம்.
10. வாரணம்-யானை, மாலை-துளவ மாலை ஆரணம், வேதம்.
11. ஊழி வேல் விழும் கங்குல்-யுகமாக வேரூன்றிவிட்ட இரவு, உடுபதி-சந்திரன், அழல்-வெப்பம், மண் கூறு கொண்டது - மண்ணைக் கொண்டு அடைத்தது ஒப்பு: "கோழி வாய் மண் கூறு கொண்டதோ!"
12. ஏடு-புற இதழ், கண்ணி-துளவ மாலை, மகரக்குழை-மகர தோரணம்..
13. குழல்-புல்லாங்குழல், கழை - மூங்கில், பால் இசை- பால் போல இனிய கீதம், கூடல் இழைத்தல்- பிரிந்த தலைவி மணலில் கோடு இழைத்துத வருவனா என்று குறி பார்த்தல், சூள்- சபதம்; வருவதாக ஆணையிட்ட சொல்.
14. பின்னை-நப்பின்னை, பெருமித்தமிழ்முறை கொழித்து அறிபேரை-தமிழை முறையாகக் கற்று
அதன் பெருமையை ஆராய்ந்து அறிந்த தென் திருப் பேரை, கபாலம் நீவி-தாழ்ப்பாளைத் திறந்து
15. மிச்சில்-உண்ட மிச்சம், சரோருகம்-தாமரை.
16. அளவு அறியாப் புனல்-ஆழம் தெரியாத வெள்ளம், விளவு அறியாப் பேதை-வாய் விட்டுச் சொல்லத் தெரியாத இளம்பெண், மயல் வெள்ளம் -காதல் வெள்ளம்.
17. வாளைப் பகடு-ஆண் வாளை மீன், பிரகு-வேறு உபாயம்.
18. மறு-குற்றம், மரபு-ஆன்றோர் ஒழுக்கம்.
19. வாழி-அசை, குடைந்த முத்து-முத்தைக் குடைந்து செய்த, மருங்குல்-இடை, சூழி-நெற்றிப் பட்டம், துவக்கி-கட்டி, மேழி-கலப்பை, ஆழிவலம்புரி- சக்கரம், சங்கு.
20. கழல் ஆடிலாள்- கழற்காய் விளையாடவில்லை. சுனை ஆடிலாள்-நீராடவில்லை, கடை போடிலாள்- மேகலை அணியவில்லை, பீடு-பெருமை.
21. வீண் மொழி கொள்- வீம் வார்த்தை பேசுகின்ற, ஆராத-திருப்தி அடையாத, பேரேசர்-தென் திருப்பேரைக் கடவுள்.
22. செங்கனிக் கோவை வாய்-கோவைப் பழம் போல் சிவந்த வாய்.
23. அயராமல்-மறவாமல், பிறங்கலமின்னே-மலையிலுள்ள பெண்ணே, தாரை-முனை, குழல் காரை- கார் போன்ற கூந்தல்.
24. படாம்-துணி, குழை பிடித்து-குழையணிந்த காதை பிடித்து.
25. மாரன்-மன்மதன், கா-சோலை, செற்றார்- பகைவன், தீ வெடிப்ப வெடிக்குமோ-தீத் தோன்றுவது போலத் துளவ மலர்கள் சிவந்து தோன்றும்.
26. வெடித்து - வெடிப்புகள் தோன்றி, பாலைக்கப் பாலை - பாலை நிலத்துக்கப்பாற்பட்ட, அந்தணீர் - முக்கோல் பகவர்களே, செம்பஞ்சு - மருதோன்றி பூசிய சிவந்த நிறம், அனிச்ச மலர் - மென்மையான ஒரு வகைப் பூ, தடித்துச் சிவந்தது - வீங்கிச் சிவந்து போயின, மடந்தை - என் மகள். முக்கோல் பகவரை வழிவினாதல் என்னும் அகப்பொருள் துறை.
27. மறம்: இது கலம்பகத்தின் ஒரு துறை. மணம் பேசத் தூது வந்தவனை மறவர்தம் குலப் பெருமை சொல்லி மகட்கொடை மறுத்தல். அரிட்குறு - அருளைப் பெற்ற, தையலை - பெண்ணை, சருகு - ஓலை, வேள் - முருகன், வேல்பட - வேலாயுதமும் தோற்க, வினையொத்த - போர்த் தொழிலைச் செய்த, நாகொடுத்த படை பாடெடுத்த நிலை - நாள் முழுவதும் எடுத்த ஆயுதத்தைப் பக்கத்தில் வைத்து விடுவதில்லை. நாணயப்பிழை - நா நயப் பிழை; பேசுந்திறமையிலுள்ள பிழை. நரபதித் தலைவர் - தலைமை பெற்ற அரசர்கள், நமனெதிர்த்து வருமாயினும் - எதிரி எமனேயாயினும், மனு வரம்பு - மனித ஜாதியின் வரம்பு, மற வரம்பு - வீர மறவர் குலத்தின் ஒழுங்கு.
28. இல்லத்தடங்கா - வீட்டினுள்ளே தங்கியிராத, பசிக்கென்று - பசி என்று, ஒன்று - ஒரு பொருளும், சொல்லத் தொலையா - சொல்லி முடிவு காணாத, எழு பிறப்பு - எழுவகைக் கதி, துடைக்கும் - நீக்கும், தாள் அளக்கும் - தாள்களால் அளந்து கொண்ட, புவி மருங்கில் - பூமியின் எல்லாப் புறங்களிலும், கொதியார் - கோபிக்கமாட்டார். மதன்படை - மன்மதன் படைக்கலங்கள், குழலிசை - வேய்ங்குழல் ஓசை, அளித்து - தலையளி செய்து, அயர்த்துக் கொடுத்த - மறந்து பிரிவுக்குச் சம்மதித்த.
29. சம்பிரதம் - ஜால வித்தை, கடலடங்கலுழிதொறு சிறங்காக புனல் கடுகிலும் புகுதும் - கடல் நீர் முழுவதும் ஒரு கைக்குள் அடக்குவோம்; கடுகிலும் புகுவோம் என்றும், கடல் எல்லாவற்றிலும் ஒரு கை தண்ணீர் மொண்டு விரைந்து வந்திடுவோம் என்றும் பொருள் கொள்க. வடமேருவும் ஊசிவேருடன் இடது புறமும், வலது புறமும் சுழலும்படி செய்வோம் என்றும் ஊசிவேரைக் கொண்டு வடமேருவை இடது புறமும் வலது புறமும் சுற்றிச் செல்வோம் என்றும் பொருள் கொள்க. பரவையுலகு - கடல் சூழ்ந்த உலகம், பகலிரவு கொண்டதும் - பகலை இரவாக்கியதும்.
30.சோவியர் - இடைப் பெண்கள், அடிக்குங் கை மானோ - அடிப்பதற்குக் கையில் எடுத்த கோலோ, காது பிடிக்கும் - தோப்புக்கரணம் போடுவதற்கு இரு கைகளால் காதுகளை மாற்றிப் பிடிக்கும், கைம்மாறு - உதவி.
31.தருவிட - விடத்தைத் தருகின்ற
32. உறைக் கோடும் வாள் - உறையில் விரைந்து புகும்வாள், ஒரு கொம்பிறந்து - கொம்பு வெட்டப்பெற்று, குறைக் கோடு - கோடு, உழல் குஞ்சரம் - திரிகின்ற யானை, துறைக்கோடு - நீர்த் துறையில் கிடந்த சங்கு, தென்னர் - பாண்டியர், பண்டைச் சிறைக்கோடு மேகம் - பாண்டியர் சிறை வைத்த மேகம், பாண்டியர் மேகங்களைச் சிறையிலிட்ட திருவிளையாடல், பிறைக்கோடு - பிறை போலும் கொம்பு.
33. அறந்தானுற உரைத்தருள்வீர் - இப்பறவொழுங்கைப் பொருந்த எடுத்துரைப்பீர்.
34. அழைத்துரையும் - பொருந்தச் சொல்லுங்கள், பெண் மதி - பெண்ணின் பேதைமை, பேதை நாட்டு - பேதைமையுடைய என்னுடைய நாட்டிலுள்ள.
35. நிழல் பிழிந்து பருகவென்று நினையும் அசுர மருதம் -நிழலிலே* உயிரைப் பிழிந்து குடிக்க வேண்டுமென்று நினைத்த அசுரர்களாகிய மருத மரங்கள், குரிசில் - சிறந்தவன், அழல் பிழிந்த வேலர் - நெருப்பைக் கக்குகின்ற வேலையுடையவர், ஆணை - சூள், சபதம் அந்த வாய்மை - தவறாத அந்தச் சொல்.
36. மையுண்டு - மை தீட்டப் பெற்று, அறிவுண்டு - மதியை மயக்கி, ஆவியுண்டு - உயிரைக் குடித்து; காவி - நீலோத்பல மலர் போன்ற கண்கள், தாமரைக்கே - தாமரை போன்ற முகத்தில், வளர்ந்த - நீண்டகாலம் தங்கிய, வாவி - குளம், பூவை - பூவிலுள்ள மதுவை, கால் கிளர்ந்த - சென்ற.
37. புறத்து - அருகில், வள்ளைத் தண்டு - வள்ளைத் தண்டு போன்ற காதுகள், வடித்து - பெருக்கி, உவட்டாத - தெவிட்டாத, உங்கள் பாலில் - உங்களிடத்தில்.
38. பிடித்தீர்தழை - வில்லையொழித்துக் கையில் தழையை வைத்திருக்கிறீர், கெடுத்தீர் கரி - யானையைத் தவறவிட்ட தாகக் கூறிக்கொள்கிறீர். பிணைத்தேடுவதேன் - ஆனால் ஏன் மானைத் தேடுகிறீர். அடித்தாமரை - தாமரை போன்ற மெல்லிய கால்கள் வருந்த, அடைத்தாளுவதோர் தொழு - அடைத்துக் காக்கின்ற தொழுவம், புனச் சார்பு - தினைப்புனம், தொடி - வளையலணிந்த.
39. அண்டர் - தேவர்கள், தொரும்பாக்கி - அடிமையாகி, அடவி - சோலை, அலர் - மலர், எழும் பாக்கியம் - பாக்கியம் கிட்டும், இந்து - சந்திரன், விட்டம் - அடிப்பாகம், சரணாரவிந்தம் - பாத தாமரைகள், பண்டு - முள்.
40. செய் - வயல், தொய்யில் - மங்கையர் மார்பில் சந்தனத்தால் போடும் கோலம், தொழிலுக்கு - என்னை வருத்தும் செயலுக்கு, அரும்பும் - தோன்றும், மதன் - மன்மதன், எய்தில் - எய்தால் (என்னைத் தழுவிக் கொண்டால்), கரும்பும் கணையும் இலை - எனை வருத்தும் படைகள் உங்களிடம் இல்லாது போகும், இறவாதிருப்பன் - பிழைத்துப் போவேன்.
41. இரும்பு - அங்குசம், துதிக்கை மடுத்து - யானைத் துதிக்கையில் மாட்டி, கோ மகளிர் - அரசகுலத்துப் பெண்கள், விரல் - விரலால், எதிர்த்தார் - பகைவர். சுரும்பு - வண்டு, வழிகறங்க - வழியில் சுழலும்படி, செவிப்படலம் - செவியின் பரப்பு, துங்கம் - சிறப்பு, பவனி - குழைக்காதர் வரும் வீதியுலா, விரசம் - காதல் துன்பம், தொழுதாள் - தொழுத தலைவி, முடப்பலவு - வளைந்த பலா, படலைக் குலை - பரந்த குலை, மடல் - பாளை, குரும்பை - இளநீர், வரால் - மீன்.
42. மத்த வேழம் - மதம் பிடித்த யானை, பதி - தலைவியின் ஊர், தாமரைப் பூ - இலக்குமி உறையுமிடம், கோனென்பார் - தலைவர்கள், கொம்பே - பெண்ணே, வம்பே - வீணாக,அல்ல - வேறொருவன், இல்லை - ஒன்றுமேயில்லை, கோட்டி - வார்த்தை,எதிருரைப்பார் - பதில் சொல்வார்.
43. நலம் - அழகு, முனிவாய் - கோபங் கொண்டு.
44. அமுதுர நினையீர் என்று கூட்டுக.* ஆனாத - அழியாத, கானார் - மானம் நிறைந்த, காமத்தின் பால் -காதலின் பகுதி, அறத்தின் பொருட்டு - இல்லறம் நடத்த விரும்பி, பொருட்பால் - பொருளைத் தேடி, திருக்குறளில் காமத்துப்பால் சிறிது, அறத்துப்பால் நடுத்தரம், பொருட்பால் மிகப் பெரிது.
45. சூல் - கருப்பம், மேல் வடிவு - பெரிய வடிவம், வினை தொலைக்கும் - அழிக்கும்.
46. தோடு - புற இதழ், ஐவர் - பஞ்ச பாண்டவர், சாடும் - சொரியும்.
47. கொண்டல் - மேகம், அண்டர் பூமி - தேவலோகம், நாமோ - நீங்களோ - முன்னிலைப் பொருளில் வந்த தன்மை.
48. மருந்தேறல் - மணம் பொருந்திய தேன், மால் - ஆசை, கதலிக்குருத்தே விசும்பளக்கும் பேரை - வாழைக் குருத்துக்களே ஆகாயத்தை எட்டிப் பிடிக்கிற - உயர்வு நவிற்சி அணி. கடிதாய் - விரைவாய், அன்பர் -தலைவர்.
49. பாயல் - படுக்கை, மகிழ்ந்த - விரும்பின, திருப்பேரையை மகிழ்ந்து பாற்கடலை விட்டு வந்தார் என்று பொருள் கொள்க. கசப்பாக - கசப்பாக்கி, பாகு - தேன்பாகு, ஆவியிலிருந்து - உயிர் வாழ்ந்து, சஞ்சரித்து - நடந்து - திரிந்து, விரிஞ்சன் - பிரமன், விரிஞ்சனும் படைத்தான்.
50. விதிக்கும் தொழில் - பிரமன் படைத்த செய்கையியினால், வெவ்வேறுபல - வேறுவேறானபல, கோலம் -வேடம், ஒருவனே பல கோலங்களில் நடிக்கிறான், அதுபோல ஒரு உயிர் பல உடல்களில் பிறக்கிறது, எதிர்க்கும் -எதற்கும், யானை முதல் எறும் பீறாக, குதிக்கும் கலுழி - வெள்ளமாகப் பொங்கி வரும், சுவடு - கால், குறுங்கள் - சிறிய கள், வேட்டு - விரும்பிதெவ் - பகைவர், மத்தகம் - யானைத் தலை, பனை - பெருத்த.
51. தொண்டன் - தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
52. வேள் - விருப்பம், சங்கம் - சங்கு வளையல், மாது - மாதர், அணி -வரிசை, வேள் - மன்மதன்.
53 . ஆடவர் - தலைவர்.
54. அயல் - அயலார், வெதுப்ப - சுட, வேள்போர் -மன்மதன் செய்யும் போர், மறலி - எமன், புடை -பக்கத்தில், கடல் வளை - கடல்சூழ்ந்த, புடவி - பூமியிலுள்ளார், முயங்கு -உடலிற் கலந்த, வெறி -மணம், பெறவிட்டது - தலைவி பெறத் தலைவன் அளித்தது, சுரும்பு - வண்டு, வெறுப்பிலதாகி -விருப்பங்கொண்டு.
55. தாரை -ஒழுங்குமுறை.
56. திவலை - தயிர்த்துளி, கதவுக்கடை - கதவின் அருகில், உயரத்து - உயர்ந்த இடத்திலுள்ள, மல்தொழில் பிடி - மற்போரில் செய்கின்ற பிடிகள், துரந்தன - செலுத்தின, களவிட்டு - வஞ்சகமாக வந்த, அலகை - பேய்ப்பெண் பூதனை, பணைவரை - பெருத்த மலை, படியில் - பூமியில், துடை - தொடை, கனகன் - இரணியன், உருள்பட - உருள, பகழி - அம்பு, கதிருட் புதை அத்தமனம் - சூரியன் மறைந்த அந்திப் பொழுது, நிழல் கெழுமிய - ஒளி நிறைந்த, திகிரி - சக்கரம், பருமச் சிகரம் - உயர்ந்த உச்சி, பலி - பிச்சை, பரிசில் - வெகுமதி, பருமத்து வலித்து - பெரிய மத்தை இழுத்து, விளம்பின -பறிமாறின, தெளி - குழம்பு, தொடை - மாலை, மிருகமதம் - மான் மதம், கத்தூரி, பொதுவியர் - இடைச்சியர், கமலத்தவள் - இலக்குமி, புளசம் - மயிர்க்கூச்செறிதல், புழை - துவாரம். வலம்புரி - சங்கு, எக்கர் -மணல், குருகையரதிபதி - நம்மாழ்வார். பரவுநெடுந்தகை - போற்றப்படும் பெரியோன், பரகதி - மோட்சம், முதலவன் - முதன்மையானவன், அளி - அழசிய.
57. புயங்க சேகரம் - அரவளிந்த, முயங்கு - பொருந்திய, நாடகி - நடிக்கின்ற பெண், காளி, புரிந்த வாய்மை -சொன்ன சொல், கெவுளி - பல்லி சொல், பொலாதல - நன்மை செய்யும் குறிதான், இருந்த மாநிலம் - வாழ்கின்ற ஊர், இணங்கவேயிசைந்து - சம்மதம் பொருந்தி, இலங்கிழாய் - விளங்கும் ஆபரணத்தையுடைய பெண்ணே, சேவகர் - வேலை செய்வோர், நாவலர் - புலவர், உயங்கி - வருந்தி, உடந்தையாய் - மனமிசைந்து, சிறங்கை - கைகொள்ளுமளவு, தூசு - கூட்டத் தலவர் ஐந்து பேர் - நன்கு விளங்கவில்லை, திருமால், சிவன், அயன், விநாயகன், முருகன் இவர்களைக் குறிக்கலாம். பசியால் அழுத குழந்தை வாய்மூடச் சிறங்கை கூழிடு; உறங்கக் கந்தை கொடு என்பது பொருள்,
58. கொற்றியரா - கலம்பகத்தின் உறுப்பு, வைணவ சின்னம் பூண்டு பிச்சைக்கு வருவோர்கள் மீது காதல் கொண்டு ஒரு காமுகன் கூறுவதாகச் சிலேடை பொருள்பட வருவது இச்செய்யுள். வயலகம் - வயலிடம், தாமம் - மாலை, தாமரையின் மாமணி - தாமரைக்காய் மாலை, அரும்பித்த - மலர்ந்த, நாமம் -திருமண் காப்பு, தாவடம் - முத்து மாலை, அரங்கு - நாடக மேடை, ஒற்றி - இசைந்து, மருங்கொற்றி - அருகேயிருந்து கவனித்து.
59. பூவணை - மலர்ப்படுக்கை, அமுதுரு - அமுதம் போன்ற வடிவம்.
60. உயிர் முடிக்கும் - உயிரை அழிக்கும், செவ்வந்தி - சிவந்த அந்தி மாலை, மயிர் முடி - கூந்தல், செவ்வந்தி - செவந்திப்பூ, மருந்துளதி - வாசனை பொருந்திய துளசி, மயல் - ஆசை.
61. பொருப்பின் - மலையிடத்தே, முயல் - சந்திரன் கறை, மதி - சந்திரன், முகவட்டம் - முகத்தில்பொட்டு, புயல் - மேகம், புளகிக்கில் - புளகித்தால், கூச்சமடைந்தால், அற்பஇடைவேரற்றுவிடும்; ஆகையால் திலகத்தை அழித்துவிடுவீர், அழகு - நல்லது.
62. நுவலவும் படுமோ - சொல்லும் தரமோ. மழை - கூந்தல், கடல் - கண், மலை - கொங்கை, கொடி -பெண் கொடி காட்சி யென்னும் துறை.
63. பொதும்பர் - சோலை, இதண் - பரண், அபிஷேகம் - முடிபோறாள், புனம் - திணைப்புனம், கறையேறுமே - மாசூல் கைக்குக் கிடைக்குமோ?
64. களி - குடியர் கள்ளைச் சிறப்பித்துக் கூறுவது, களியர் - குடிகாரர், நறவு - கள், இலச்சி யாகினி வலச்சி - பரவும் தெய்வம், பஞ்சமி - கள், மந்திரப் பெருமை - மந்திர சக்தி.
65. அல்லி - அகவிதழ், பணிலம் - சங்கு, மணி - முத்து, வனசம் - தாமரை.
66. ஆரம் - முத்து, வேம் - வெப்பந்தரும், நேர - எனக்குக் கிடைக்கும்படி.
67. மாரசரம் படு பூ - மன்மதன் அம்பாக விடுகின்ற பூ, ஆரவடம் - முத்துமாலை.
68. மந்தி - பெண் குரங்கு, இதழி - கொன்றை, தரளம் - முத்துப்போன்ற கண்ணீர், ஒழுங்கு - நியாயம், ஞான வரோதயன் - சிறந்த ஞானத்தால் அறியப் படுவோன்.
69. புரிசை - மதில், புயல் - மேகம், துவக்கும் - கட்டும்.
70. எழும் - செய்யும், பளிங்கு மண்டபம் - கண்ணாடி மண்டபம், நிழற்கோலம் - பிரதிபிம்பம், ஆயிழை ஒருத்தி - வேறு ஒரு பெண், ஆடகன் - இரணியன், உரம் - மார்பு, திருந்தெழில் - சிறந்த அழகு.
71. உரிசை - ருசி, உறை - கிணற்று விரிசுவராகிய உறை, கூவல் - கிணறு, பதியில் - ஊரில் தங்கி, எயினர் ஒருவர் போகிலர் - வேடர் ஒருவர் கூடப் போகவில்லை, ஓ!கொடிது - மிகவும் கஷ்டம்,
72. கொடியள் அந்த அசோதை - கொடுமை செய்து பிரசித்தி பெற்ற அசோதை , மாறு - விளார், பிரம்பு; குழைதொடும் - தோப்புக்கரணம் போடக் காதைப் பிடிக்கும், அடியளந்த - காலால் அளந்த, ஆழி - சக்கரம், அமரக்கால் - தெய்வத்தன்மை வாய்ந்த கால், படியளந்தது - பூமியை அளந்தது உணவு கொடுத்தது, பாலன் - காத்தற் கடவுள், மிடியளந்த - வறுமையிலே வளர்ந்த, தொட்டுண்டது - களவிலுண்டது,
73. வாய் மடுக்கும் - வாயிற் கொண்ட, இடும்பை - துன்பம், கனிவாய் - கனிந்து, செழுந்தாள் - பெருத்த கால்கள்
74. வளை - வளைந்த, நாவாய் - நாக்கையுடையவாய், தோணி, நடு - நடுவுநிலைமை.
75. எழுதா -எழுதி.
76. கேடில் - வராகம், அறிகின்றதே பேசுவீர்.
77. தாழை - தென்னை, ஞாழல் - குங்கும மரம், சூர் - மூங்கில், மூடு - மரம், சுரம் - பாலை நிலம், ஆயர் நிலம் - முல்லை, வலைவாணர் - நெய்தல் நில மக்கள், கழை - தோணியைத் தள்ளும் மூங்கில் கம்பு, உந்தி - தள்ளி, ஆரம் - சந்தனம், முடிகூடு - மயிர் முடியில் ஏற்படும், வால் வளை - வெள்ளிய சங்கு,கோடு - உச்சி, மேழி - கலப்பை, மேதி - எருமை, ஆன் - பசு, மலங்க - வருந்த, எக்கர் - மணல்மேடு, மறுகால் - நிறைந்த தண்ணீர் வடியுமிடம், உரையாளி - மாற்று அறிவிக்கும் ஆளி, உம்பரூர் - தேவ லோகம், சருவாமல் - திகைக்காமல். ஒரு பூதர் - ஒரு மனிதர், அஞ்சுதலை வாசல் - ஐம்பொறி, தாழிடு - தாழ்ப்பாள் போடு, குகை - பொன்னையுருக்குங் கூடு, அரிதாரம் -உருக்குவதற்குப் பொன்னுடன் கலக்கும் மருந்து, விடிவேறு - விடியும் பொழுது, வாரம் - பட்சம், அமுது - உணவு, தலைவாழையிலை - பெரிய வாழையிலை, என்னுயிர் - எனக்கு மிகுந்த விருப்பம், கயல், தேளி, சாளை - மீன்வகை, மாரி - மழைபோல, பணியாரம் - பட்சணம், அப்பு - பூசு, சந்தரம் - சந்தனம்.
78. தடம் - சுனை, மருங்கு - இடை, நீட்டுரம் -கொடுமை, காவி - கண்கள்.
79. உறிமுகப் பாலையே - உறியிலுள்ள பாலையே, சயன போகம் உகப்புத் தலம் - படுக்க இனிதாய் மகிழ்ச்சி தரும் இடம், ஆலையே - ஆலிலையையே, பங்கயத்தாளையே - தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமியையே, தேவர் கோன் அங்கை அத்தாளையே விரும்பும் என்று பொருள், ஆயனேயென்ற உதிப்பதும் - கண்ணனாக வந்து அவதரிப்பது. பன்னி - சொல்லி, மாயனே - மாயையுடையவனே, திருப்பேரையே - அழகிய திருநாமங்களையே; திருப்பேரையென்னும் ஊரையே.
80. இச்செய்யுள் கடைமடக்கு. வேரி - மணம், வேள் காரியம் பறை - மன்மதன் தொழிலைக் கூறும், வாரி - கடலை, மானுமே - நிகராகுமே.
81. மதி, வள்ளை, குமிழ், குமுதம், வேல், சிலை இவை முறையே முகம், காது, மூக்கு, வாய், கண், புருவம் இவற்றுக்கு உவமை. மான் - சந்திரன் களங்கம், கலை - சந்திரகலை, குருகுலம் - குருகுல வாசம் பண்ணி, திரு -இலக்குமி போன்ற மகள், வழிபட -வணங்கி வழிபட.
82. காரை ஊர் - மேகத்தில் பொருந்திய, வண்ணர் - நிறத்தை உடையவர். விசயன் - அருச்சுனன், தேரையூர்மால் - தேரை ஓட்டுகிற கண்ணன், தேரையூரிலுள்ள விஷ்ணு; பின்னை மால் - நப்பின்னைப் பிராட்டியிடம் காதல், மால் கொண்டிருந்தால் - அறிவு மயக்கம் கொண்டிருந்தால், பின்னைப் பேசாரோ - அதன் காரணமாகப் பேசமாட்டாரோ?
83. அம்மான் - மாமனாகிய கம்சம், நகையும் சுடுகின்ற -சிரிப்பையும் ஒழித்துக் கொன்ற, பேரை - பேரையில், இவள் தலைவி, ஆவியுண்டது - உயிர் கவர்ந்தது, பெம்மான் - சிவபெருமான், சிலை - வில்லாக, வடவரை - மகா மேருமலை, செற்றது - அழித்தது, முன் - முன்னே, தோன்றின, திருநகை - அழகிய சிரிப்பு.
84. நகை - ஒளி, புரையும் - ஒக்கும், பேரையகம் - பேரைத்தலம், தாமரையமுதம் - தாமரையில்
இருக்கும் இனிய இலக்குமி அன்னாள் - ஒபபானவள். பிடித்த - கொண்ட, தரம் பிடிக்க மாட்டாமல் -
அழகின் தன்மையறிந்து ஒப்பாக மாட்டாமல், வாள் பிடித்தது - வானத்தில் ஓடி ஒளிந்தது.
85. மதிக்கும் - எல்லோரும் பாராட்டும், மதிவார் சடை முடிக்கும் பெருமான் - சந்திரனை நீண்ட சடையிலே சூடும் சிவபெருமான், அயனார் - பிரமன், எனும் - என்று தலபுராணம் கூறும். மறைநூல் - வேதம். துதிக்கும் புகழைக் கூறும், தொலைக்கும் - தீர்க்கும், இறக்கும் குழை - நீண்டு தொங்கும் காதணி, கொதிக்கும் பதம் - மிகுந்த வெப்பம் தரும் நிலை, அதிக்கும் - அதிகரித்துக்கொண்டே வரும். தூதை - பானை சோறிடும், பசி மாறிடும்; அறத்தின் பயனாவது இது தான். அறம் - இல்லறம்.
86. வேயிருந்திசைத்த - புல்லாங்குழலை வைத்து ஊதின, விண்ணொடு - விண்ணில், மேகம் - மேகம் போன்றவன், பேய் - பூதனை, நாறும் - கமழும், துணை -இரண்டு, வாசடம் - வைத்திய நூல்.
87. மதங்கியார் - வாளைக் கையில் பிடித்துச் சுழற்றியிடுகின்ற பெண், சாடு - சகடு, வண்டி; மடிபட - இறந்து வீழ, முருகு - வாசனை, உலாவும் - போன்ற. ப்ரதாபம் - புகழ், இருவெட்டு - இரண்டாகப் பிரிந்த தொய்யில் - மகளிர் மார்பில் அணியும் சந்தனக் கோலம், பிறைக் கொழுந்து - சிறு பிறை போன்ற நெற்றி, திலகம் - பொட்டு, இயமனுக்கு உயிர் பறிக்கும் உபாய வித்தையென்று கூட்டுக.
88. மதிக்குழவி - பிறை, முடித்தார் - சிவபெருமான், மால் - விஷ்ணு, ஆசை; வயிரங்குன்ற - வயிரமும் ஒப்பாகாத, வள்ளம் - கிண்ணம், சுளிப்ப - கோண, கைப்ப-கசப்பாக. படுகொலைசூழ்-கொடுமையான கொலையைச் செய்கிற, அள்ளி-முகந்து.
89. புரிசை-மதில், அணங்கு-பெண், சுணங்கும்-வருந்தும், பிடி-பெண் யானை, கடா யானை -ஆண் யானை, இறைவர்-தலைவன், கொடியில் -பூங்கொடி போல, துவக்கும்-கட்டும், மூரிக்கழை -வலிய மூங்கில், கழைக்கு-கழையில்,. உறவே-பொருந்தும்படி, அணங்கே, நும் தாள் சாரல் கழைக்கு உறவே, புரிசைக் கொடியைத் துவக்கும், இறைவர் தம்மை கருந்தாள் கொடி துவக்குவது போலத் துவக்கும். ஏன்? பருந்தாட் கொடிய தென்றோ? என முடிவு காண்க, தலைவனுடன் சுரம் போக்குக்கு உடன்பட்ட தலைவியைத் தலைவன் ஊர் அதி சமீபத்தில் இருக்கிறதென்றுதோழி தேற்றுதல், ஊரளித் தென்றல் என்ற அகப் பொருள் துறை.
90 கழைக்கு ஆவலான தழல்-மூங்கிலை விரும்பிப் பற்றுகிற தீ, கொதித்தேறு-வளர்ந்து கொண்டே செல்லுகிற, பாலை வழி-பாலை நிலத்தினூடே போகிற பாதை. இராமல்-உட்கார்நது இளைப் பாறாமல். சரத்தூரம் அம்பு போடுகிற, கமல மலர்த்தாளுருமல்-தாமரை போன்ற அடிகள் வருந்தாமல்.மணி-இரத்தினங்கள். மழைக்கார்-மழை மேகங்கள் சூழல்-மேடுகள், வாவும்-தாவி வருகின்ற, நீழல்களும் உளவே என்று முடிவு காண்க.
1 மேதி-எருமை, பாசடை-பசிய இலை, வேரி-தேன், தீது-தீவினை, ஓதி-கூந்தல், கயிற்றில்...................உரல் பிணிக்கவும்-கயிற்றின் ஒரு நுனியைக் காலில் கட்டி, மற்றொரு நுனியை உரலைச் சுற்றிக் கட்டவும், சுருதி-வேதம். கேட்கப்படுவது.
2 காடு-புனம், பூங்கால்-பூவைப்போல மென்மையான கால், காவலார்-காவல் செய்பவர், ஆரரிந்த-ஆர முழுவதும் அரிந்த.
93. சிறுமதலை - சிறுபிள்ளை, மதலை - பிள்ளையின் பொருட்டு, தரங்கம் - அலை, பொருனை - தாமிரளருணி நதி.
94. ககனர் - ஆகாயத்திலுள்ளவர், முக்கணர் - சிவ பெருமான், மதலை - சிறுதொண்டன்பிள்ளை, கறி சமைத்தவள் சிறுத்தொண்டன் மகன் இராமன், விளையவைத்தவள் - கைகேயி, மதனைவிட்டவள் -தலைவன் தாய்.
95. முரி - சோம்பல், விறலியர் - பாணன் மனைவிகள், பெருமையுடைய அரசியர்; துதிக்கை கொண்டு -துதிப்பதினால், தும்பிக்கையினால்; முடிகளைச் சரிக்கையால் - அரசர்களை வெல்லுகையால், தலைகளை வணங்கச் செய்கையால், கடம் - மதஜலம், கடன்.
96. பாண் - பண், இசை; மிழற்றும் - மழலையிற்பேசும், சுரும்பு - வண்டு, மாந்தி -குடித்து, மதிவண் குளி - சந்திகளின் துண்டுகள், அவிழ்த்தும் - மலரச் செய்தும், சுண்ணம் - வாசனைப்பொடி, பளிக்கறை - பளிங்கு மண்டபம், குயிற்றும் - அமைத்திருக்கிற, சாளரம் - பலகணி, நாண் - நாணத்தை, வேள் - மன்மதன். நாண் - வில்லின் நாண், ஞான புங்கவ - அறிவிற் சிறந்தவனே, நந்தா - அழியாத.
97. நந்தா வளம் - அழியாத வளப்பம், பிறந்த - தோன்றிய மால் - குழைக்காதர், வந்தார் - வந்தார் என்ற, வளம் பிறந்த - பெருமை தோன்றும், வார்த்தைக்கே -பேச்சுக்கே, வண்ணம் - நிறம், உதித்த - எழுந்த, மாமதி - பூர்ண சந்திரன். பசலை - நிற வேறுபாடு, மாயம் - காரணம் அறிய முடியாத கொடுமை, குதித்தது - திடீரென்று தோன்றிற்று.
98. கவுள் கன்னம் - கவுளிலிருந்து குதிக்கும், துளிமழை -தூற்றல் முற்றிச் சொரியும் மழை, குஞ்சரன் - கஜேந்திரன் என்னும் யானை, அழைக்கும் - ஆதிமூலமே என்று கூப்பிடும், புயல் - மேகம் போன்ற குழைக்காதர், கொழிக்கும் தமிழ் வளர்-தமிழ் செழித்து வளர்கின்ற, பேரை-தென்திருப்பேரை, தழைக்கும்படி-மதிப்பில்லாத குடும்பம் சிறந்த மதிப்படையும்படி, பெண்டுகள் வளர்க்கும் - பெண்களால் வளர்க்கப்பெற்ற, மயில்-மயில் போன்ற பெண்ணே, சிறிதென்று விதிக்கும்படி படிக்கும் அனிச்சங்களும் -சிறிதென்று தீர்மானிக்கும்படி நாமறிந்த மென்மையான அனிச்சப் பூக்களிலும், பஞ்சினும் உற-பஞ்சிலும், பட்டாலும், உனது பதம் வெறுக்கும்-உனது கால்கள் நோகும், "அனிச்சமும், அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெரிஞ்சிப்பழம்," என்ற குறளைக் காண்க. உதிக்கும் கதிர் கொதிக்கும் சுடர் நடக்குந்தொறும், வெறுக்கும் பரல் உறைக்கும் பொழுது நீ உயிர் வாடுவை என்று கூட்டுக. உயிர்வாடுவையே-தாங்கிக் கொண்டு உயிர் வாழ முடியுமா?
99. வாடை-வடக்கேயிருந்து வரும் காற்று, இயங்க-வீச, பீடை-வருத்தம், தென்றலங்கன்று-இளந்தென்றல், தென்றல்-தெற்கேயிருந்து வரும்காற்று. கோதுபட-கொத்தென்று நீக்கவைத்த, கூடல் - கூடலிழைத்தல், அள்ளியிட்ட-வாரிச் சொரிந்த, பயிர்ப்பு-பிறர் பொருளைத் தீண்டின வெறுப்பு,துணைபட-உயிர்த்துணை பிரிந்தால், இரிந்து- ஓடி, புரக்க-காக்க, வார்-நீண்ட, பூதரம்-மலை போன்ற தோள், ஐவர்-பஞ்ச பாண்டவர், அணங்கு-படர்ந்து வருத்தம் செய்கிற, பொதும்பர் - சோலை, தண்ணளி-தலையளி, குரும்பை-இளநீர் புயம்-தோள், பாகுற-பக்கத்தில் பொருந்த, பரிபுரம் -பாதசரம், சில்லொலி-சில்லென்ற ஒலி, பல்கலன்- பல ஆபரணங்கள், புலவி-ஊடல், கலவி-புணர்ச்சி,
100. பதக மலம்-குற்றமாகிய அழுக்கு, பத கமலம்-அடித்தாமரை, பூக்கும்-தோன்றும்.
101. மோலி-கிரீடம், பவளம்-இதழ், சுரிமுகம்-வளைந்த அடிப்புறம், ஆழி-சக்கரம். கதை-தண்டாயுதம், பீதாம்பரம்-பொன்னாடை.
This file was last updated on 4 August 2011.
.